உப்புக்கட்டு
"போகர் கருக்கடை நிகண்டு 500
"
"சித்தியாம் வுப்பெடுத்து சிவன்தான் சொன்னார்
தேவிசொன்னாள் திருமூலர் சொன்னார்
நித்தியமாநந்தி சொன்னார் மச்சர் சொன்னார்
ரிஷிபோகப் பதஞ்சலியுங் கோரக்கர் சொன்னார்
நந்தியாம் நாகாரச் சுனராம்தேவர்
நலமான சித்தர்களும் வுப்பே சொன்னார்
பெத்தியா மென்னுப்பு காலங்கி சொல்லப்
பிசகாமல் பார்த்திட்டுப் பிதற்றினேனே
பாடல் எண் 147"
"
பார்த்திட்ட வுப்பேது வென்றேயானால்
பாக்குப்போல் கல்லுப்பை யுடைத்துக்கொண்டு
ஏர்த்திட்ட பழச்சாற்றில் தோய்த்துத் தோய்த்து
ஏழுநாள் ரவிதனிலே யுலரப்போட்டு
கார்த்திட்ட கட்டுககொடி சிறுகல்லூரி
கனத்தகுப்பை மேனியிலை சமனாய்ச் சேர்த்து
ஆர்த்திட்ட பழச்சாற்றி லரைத்துமைபோ
லடைவாக சேறுபோற் குழப்பிவையே
"
"
வைத்த பின்பு முன்காயஞ் சவட்டுப்புமேலே
வளமான புழுகோடு வீரஞ்சீனம்
வைத்த பின்பு வெள்ளையென்ற பாஷாணந்தானும்
வராகனெடை பலத்துக்கு நிறுத்துக்கொண்டு
நைத்த பின்பு நாற்சாமங் கல்வத்திட்டு
நலமான பழச்சாறு விட்டு ஆட்டி
வைத்த பின்பு வுப்பின்மேலே பேசி
யுரப்பான ரவிதனிலே காயப்போடே 150"
"
வாங்கியே மேற்கவசந் தள்ளிப்போட்டு
மறுபடியு மிலியரைத்து அடையாய்த் தட்டி
ஓங்கியே வுப்பையதின் மேலே வைத்து
வுணர்வான அடைமுடி யொக்கப் பண்ணி
தேங்கியே சீலைசெய்து ஓட்டில்வைத்து
சிறப்பான குக்கிடத்தில் புடமாய்ப் போட்டு
ஆங்கியே ஆறவிட்டு அடையைத் தள்ளி
அரைத்து முன்னிலைபோல் கவசங்கட்டே 151"
"
கட்டியே முன்போலக் கவசமாய்போட்டு
கவசமெல்லாந் தள்ளியே காயப்போடு
வெட்டியே வெள்ளையென்ற பாஷாணந்தான்
வீரமொடு வெண்மலமும் புழுகுபூரம்
கட்டியேகடனுரைஞ்சீனங்கட்ட
கனமான மதியுப்புச் சாரந்தானும்
தட்டியே வகைவகைக்குப் பலங்கால்கூட்டி
சம்பிரப் பஞ்சாற்றா லரைத்திடாயே 152"
"
அரைத்திட்டு நால்சாம முப்பிலப்பு
ஆண்மையா ரவிதனிலே காயப்போட்டு
கரைத்திட்ட கல்லூரிகட்டுக்கொடிமேனி
கனியவே சுட்டு நன்றய்ச் சாம்பலாக்கி
இரைத்திட்டு யெலுமிச்சஞ் சாற்றிலரைத்து
ஏற்றமாம் வுப்பின்மேல் கவசங்கட்டி
பரைத்திட்டுப் பாண்டத்தில் பண்பாய் வைத்துப்
பாங்கான வோடுகொண்டு பதிய முஊடே
"
"
பதியவே வோடுமுஊடிச் சீலைசெய்து
பாங்கான குழிவெட்டி முழங்கால் மட்டும்
புதியவே பெரும்புடமாய் போட்டெடுத்து
பேராக வெடுத்துப்பார் வெளுப்பாய்க் காணும்
கதியவே கரியில் வைத்து வுருக்கிப்பாரு
கண்விட்டு ஆடுமே பொன்போல்தானும்
எதியவே யிந்தவுப்புக் கொப்பேதென்றா
லென்தாயார் மனோன்மணிக்கு யினையுமாமே."