வணக்கம் நண்பர்களே!
கிராமங்களிலும், சினிமாக்களிலும் ஆத்தா இறங்கிட்டா, மாரியாத்தா எறங்கிட்டான்னு சொல்லுவாங்களே அது மாரியாத்தாதானா? சித்தர்கள் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்களா? அதற்கு மருந்தே இல்லையா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதற்கு முன் நீல நிற follow பட்டனை அழுத்தி ஃபாலோ செய்து கொள்ளுங்கள். படிதத பின் சந்தேகமோ, கருத்தோ தயக்கமின்றி comment பாக்ஸில் சொல்லுங்கள்.
சித்தர்கள் மாரியாத்தா என்று பெயரிடவில்லை. அவர்கள் அப்பிணியை அம்மை, வைசூரி என்றழைத்தனர்.
அம்மைக் காரணம்
உடலின் சூடு இயல்புக்கு மீறி, மூலத்திற் சூடு கொண்டு, மூளையில் அதிகக் கொதிப்புண்டாகி, எலும்புகளில் சூடேறி அம்மை உண்டாகிறது. மேற்கண்ட வியாதி கண்ட பேரைக் கண்டு பயந்து இருதயங் கலங்கினாலும் அம்மை உண்டாகும். அம்மை தொற்று நோயாக இதுவே காரணம்.
சித்தர்கள், ஒரே மாரியாத்தாவாக. சொல்லாமல் அதன் அறிகுறிகளை வைத்து 14 வகையாகப் பிரித்தனர்.
அம்மையின் வகைகள்
பனைமுகரி
பாலம்மை
வரகுதிரி
கொள்ளம்மை
கல்லு திரி
கடுகம்மை
மொழுக்கண்
உப்புத் திரி
கரும் பனசை
வெந்தய அம்மை
பாசிப்பயிறலம்மை
விச்சிருப்பு
நீர்க்குளுவான்
தவளை அம்மை
பனை முகரி குணம்
மிதமான காய்ச்சல்
நடுங்கும் உடல்
கண் சிவக்கும்
தொண்டை, மூக்கு வீங்கும்
பிதற்றும்
சன்னி தோன்றும்
மாதவிடாய் குருதிப் போக்கு அதிகரிக்கும்
பாலம்மை.
-மிகு காய்ச்சல்
- மூன்றாவது நாள் இரவில் தலையில் கொப்பளம் போடும்
- உடல் வலி உண்டாகும்
- கொப்பளத்தில் ஏழாம் நாள் நீர் கோர்த்து ஒன்பதாம் நாள் இறங்கும்.
-பதினைந்தாம் நாள் சிறப்பு
குளித்தல் செய்யவும்.
வரகுதிரி குணம்
-கடுங் காய்ச்சல்
-மூன்றாவது நாள் தலையில் குரு(கொப்பளம்) தோன்றும்
-வாயால் இரத்தம் விழும்
- ஏழாம் நாள் குரு-வில் நீர் கட்டி, பதினோராம் நாள் வற்றத் தொடங்கும்
- சிறுநீர்த் தாரையில் இரத்தம் வரும்.
கொள்ளம்மைக் குணம்
-காய்ச்சல்
-தன்னிலை மறந்து பிதற்றல்
- சன்னி வலிப்பு
இக் குறிகளுடன் மூன்றாம் நாள் தலையில் குரு தோன்றி பதிமூன்றாம் நாள் தணியும்.
கல்லுதிரிக் குணம்
-கடுங் காய்ச்சல்
-வாந்தி, பேதி
- மூன்றாம் நாளில் தலையில் குரு தோன்றும்
- ஏழாம் நாளில் நீர்கட்டி பத்தாம் நாளில் சங்கம் பழம் போல நீர் கட்டி பத்தாம் நாள் இறங்கும்.பதினோறாம் நாள் சிறப்பு குளியல் செய்விக்கவும்.
கடுகம்மை குணம்
-காய்ச்சல் அடிக்கும்
- மூன்றாம் நாளில் தலையில் கடுகு போல கொப்புளம் தோன்றும்
- உடம்பெல்லாம் அதிகமாய் வலிக்கும்.
- தொண்டை கட்டும்
- குரல் சத்தம் குறையும்
- பேதியாகும்.
மொழுக்கன் குணம்
- காய்ச்சல் கொடூரமாய்க் காயும்
- உடலெல்லாம் வலிக்கும்
- இடுப்பு வலு இழக்கும்
- உடல் எரிச்சல்
- உடல் வீக்கம்
- ஏழாம் நாளில் தலையில்
கொப்பளம் தோன்றும்
மருந்தினால் குணமாகக் கூடிய பிணிதான் இது
உப்புத்திரி குணம்
- காய்சல் அடிக்கும்
- மூன்றாம் நாளில் தலையில் கொப்பளம் தோன்றி உடம்பெல்லாம் உப்பு போல கொப்பளங்கள் தோன்றும்
- கொப்பளத்தில் ஐந்தாம் நாள் நீர் கோர்த்து ஏழாம் நாளில் இறங்கும் பதினோராம் நாள் குளிக்கச செய்யவும்.
கரும்பனசைக் குணம்
பனசம் எள்றால் முள்ளு ( 20 ம் நூற்றாண்டு பெயரகராதி -1909 ) என்பது பொருளாகும், கரும் பனசை என்பதை கரும்முள் என ஒருவாறு பொருள் கொள்ளலாம். கொப்புளம் தோன்றி பின் கருகுவதால் இப்பெயர் வைத்திருக்கலாம்.
- காய்ச்சலடிக்கும்
- நான்காம் நாளில் தலையில் கொப்பளம் தோன்றும்
- உடலெல்லாம் குத்தும், கருக்கும்
- கொப்பளம் உள்வாங்கும்
- பேதியாகும்
- மயக்கம் வரும்
- பேதி நிற்பது அரிது.
- மலங்கட்டினால், பதிமூன்றாம்
நாளில் இறங்கும்.
- உடல் முழுதும் பரவி, அது புண்ணாகி அதில் நுண்கிருமிகள் உண்டாகும்.
- உடல் சொரணை இல்லாது மேல் மூச்சு வாங்கும்.
- 21 நாள் சென்ற பிறகு சிறப்பு குளித்தல் செய்யவும்.
- மருத்துவம் செய்யாவிடில் இப்பிணி கண்டவர்கள் பிழைப்பதரிது.
வெந்தய அம்மை குணம்.
- காய்சல் அடிக்கும்
- மூன்றாம் நாளில் தலையில் கொப்பளம் தோன்றி ஏழாம் நாளில் நீர்கட்டி ஒன்பதாம் நாள் இறங்கும்.
- பத்தாம் நாள் சிறப்பு குளித்தல் செய்யவும்.
பாசிப் பயிற்ற லம்மை குணம்
- காய்ச்சல் தோன்றும்
- நினைவு தடுமாறி பிதற்றல் உண்டாகும்.
- இரண்டாம் நாள் தலையில் கொப்புளங்கள் தோன்றி ஏழாம் நாள் நீர்கட்டி ஒன்பதாம் நாள் சிறப்பு குளித்தல் செய்யவும்
- நீர் மோர் சாப்பாடு தரவும். உடல் பலம் பெறும்.
விச்சிருப்பின் குணம்
விச்சிரும்பி-த்தல் என்றால் கோபத்தால் கிளர்தல் என தமிழ் லெக்சிகன் அகராதி சொல்கிறது.எனவே குரு என்னும் கொப்பளம் தலையில் தோன்றி மிக வேகமாக உடல் எல்லாம் வாரியிடும் என ஒருவாறு பொருள் கொள்ளலாம்.
- காய்ச்சலடிக்கும்
- கண் சிவக்கும்
- வாந்தி பேதி உண்டாகும்
- மூன்றாம் நாள் கொப்பளம் தலையில் தோன்றி உடம்பு எல்லாம் உமிபோல வாரியிட்டு மறையும்.
- ஏழாம் நாள் சிறப்பு குளித்தல் செய்யவும்.
- வயிற்றுப் போக்கு உண்டாகும்.
நீர்க்குளுவான் குணம்
கொப்புளங்களில் நீர் உள் கொள்ளுதலால் நீர்க்குளுவான் என ஒருவாறு பொருள் கொள்ளலாம்.
- காய்ச்சலடிக்கும்
- மூன்றாம் நாள் சங்கம் பழம் போல கொப்பளம் நீர் கொண்டு உண்டாகும்
- ஏழாம் நாள் காய்சல் இறங்கும்
- ஏழாம் நாள் சிறப்பு குளிர்வித்தல் செய்யவும்.
தவளை அம்மைக் குணம்
நடக்க விடாமல் செய்வதால், அல்லது அந்த நடை தவளை நடை ஒத்து இருப்பதால் இதன் பேரை ஒருவாறு பொருள் கொள்ளலாம்.
- காய்ச்சல் அடிக்கும்
- நடக்க விடாமல் செய்யும்
- ஈரல் குலை எரிச்சல் போல் எரிச்சல் உண்டாகும்.
- சாப்பிட எண்ணம் வராது சாப்பாடு வயிற்றுள் செல்லாது
- நான்காம் நாள் தலையில் கொப்பளம் தோன்றி ஒன்பதாம் நாள் இறங்கும்
வந்த அம்மை அதிகமாகாமல் இருக்க
புளியிலை, கோழியவரை, நாட்டு சின்ன வெங்காயம் மூன்றும் ஒரே எடையளவு எடுத்து உரலில் இட்டு இடித்து, அதனுடன் நீராகாரத் தண்ணி ( நீச்சுத் தண்ணி, பழைய சோற்றுத்தண்ணி) சேர்த்துப் பிழிந்து வடிகட்டி கால்படி அளவு தினந்தோறும் காலை மதியம் இரவு மூன்று நேரம் குடுக்க அம்மை அதிகப் படாது.
புளிய இலை
கோழியவரை
கல்லுதிரி அம்மை குணமும், நீர்க்குளுவான் அம்மை குணமும் சங்கம் பழம் போன்ற கொப்பளங்கள் உண்டாவதைச் சொல்கின்றன. அறிவிற் சிறந்த நீங்கள் சிறிது முயன்றால் தக்காளி காய்ச்சல் என்று தற்போது கேரளாவில் பரவி வரும் காய்ச்சலைக் கண்டறிந்து அப்பிணி அகற்றலாம்.
சரி. ஆனால் ஏன் மாரியாத்தா என்றார்கள்? ஆத்தா என்பது வேப்பிலைக்கு வேறு பெயராம். வேப்பிலை அனைத்து வித அம்மை நோய்க்கும் மருந்தாக இருக்கிறது எனவே அம்மை நோயை ஆத்தா என அழைத்தனர். அம்மை எப்பொழுதும் வெயில் காலத்தில்தான் வரும், அதே காலத்தில் இருக்கும் மற்றொரு பிரச்சனை வெப்பத்தைத் தணிக்கும் மழை. மழை அதாவது மாரியை தெய்வமாக வணங்கியவர்கள், உரிமையாய் மாரி ஆத்தா என்றார்கள். அவர்கள் அது போலவே அம்மையிலிருந்து காக்க வேண்டி, மாரியாத்தா என்றார்கள்.
நோய்களுக்கு மருந்து அல்லது மருத்துவ முறை வேண்டுவோர், கமெண்டில் தெரிவித்தால் விடைளிக்கப்படும்.
சிறப்பு குளித்தலும், வைசூரி நோய்களுக்கான பொது மருந்துகளும் அடுத்தடுத்த போஸ்ட்களில் comments வந்தால் கூறுவோம்.
சித்தம்.