பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


சிறுநீரக நோய்கள் வரக் காரணம்?

 வணக்கம் நண்பர்களே!

      ஒரு செய்திச் சேனலில் 10% மக்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை இருப்பதாகவும் ,  மக்கள் அதற்கான சிகிச்சைகள் எடுத்து வருவதாகவும் சேதி சொல்லியது. சிறுநீரகத்தில் ஏன் பிரச்சனை வருகிறது? அதை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த முடியுமா? அதுக்கான மருந்துகள் உள்ளனவா? என்பதைப் பார்ப்போம்.

     சித்த மருத்துவத்தில் சிறுநீரகத்தின் படம்


 சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ,  மேக வியாதி என்றும் பிரமேகம் என்றும் சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகின்ற , வெள்ளை என்று தமிழில் சொல்லப்படுகினற நோய்களால் வருகின்றன. மேகவியாதிகள் வருவதற்கான காரணங்கள்...

          நரம்பு(கள்) பிசகுவதாலும், பல பெண்களுடனும், பொது மகளிருடனும்,நோய்வாய்ப்பட்டவர்களுடன்  உடலுறவு கொள்வதாலும், இடைவிடாது அல்லது சக்திக்கு மீறி புணர்ச்சி கொள்வதால் மூலத்தில் சூடு உண்டாகி தாதுகெட்டு 

நீரடைப்பு ( urinary tract obstriction),

சதை அடைப்பு, வெள்ளை(Leukkorrhea)  , வெட்டை(  gonorrhea), சூலை(பக்க விலா வலி), அரையாப்பு (அக்குளிலோ தொடை இடுக்கிலோ வரும்  வீக்கம்), 

நீர்ச்சுருக்கு(சொட்டு மூத்திரம்), நீரிழிவு  (மது மேகம்- sugar) 

முதலான மேக வியாதிகள் வருகின்றன. இம் மேக வியாதிகள் சுத்தமான பாலில் தயிர் புறை ஊற்றுவது போல, மேக வியாதி உள்ளவர்களுடன் வியாதி இல்லாதவர்கள் புணர்ந்தால் மேக வியாதிகள் ஒட்டிக் கொள்ளும். மேக வியாதி அல்லாத பிணிகளர்களுடன் தொடர்பு கொண்டாலும் சில சமயம் ( மிக குறைந்த அளவில்)  மேகப்பிணி உண்டாகும்.


         " வெட்டை கட்டையுடன் ", அதாவது மேகம் எனும் வெள்ளையின் தீவிர நிலையாம் வெட்டை வியாதி,  பாடை ஏறும் வரை தொடர்ந்து வரும் என்ற மருத்துவ பழமொழி உள்ளது. இதன் பொருளாவது, ஒரு முறை வெள்ளை வந்தால் குணமாகி மீண்டும் வரும் என்பதேயாம்.


வெள்ளை நோய் ஏன் வருகிறது?

  - மிளகாய், கத்திரிக்காய் போன்ற காரமான மற்றும் கரப்பான்  பொருட்களை அடிக்கடி அளவுக்கு அதிகமாய் உண்பதால் மேகம் உண்டாகும்.

 -  உணவு உண்ணாது, வெறும் வயிற்றில் சாராய, மது வகைகளைக் குடிப்பதால் சிறுநீர்த்தாரையில் புண்கள் உண்டாகி வெள்ளை நோய் வரும்.

 -  இணை விழைச்சல் காலங்களில் விந்து வெளியாகும்போது அல்லது சுரோணிதம் வெளியாகும் போது, அதை அடக்குதல் அல்லது பெண்ணிடமிருந்து விடுபட்டு அகலுதல், அல்லது மல்லாந்து படுக்கும் தீய பழக்கத்தை அடிக்கடி செய்து நீண்ட நேரம்  புணர முற்பட்டாலும், தன் நிலையில் இருந்து  இறங்கிய விந்து/சுரோணிதங்கள் சிறுநீர்ப் பாதையில் தங்கி புண்ணாவதால் மேகம் என்னும் வெள்ளை நோய் உண்டாகும்.


- கனவினில் வெண்ணீர்(விந்து) வெளியேறுதல்( சொப்பன ஸ்கலிதம்), அதாவது தூக்கத்தில் சுக்கில சுரோணிதங்கள் வெளியேறுவது முழுமையாக நடைபெறாமல் பாதி வெளியேறி பாதி நீர்த்தாரையில் தங்குவதால், தங்கியவை அங்கிருக்கும் நரம்புகளைப் பாதிக்கின்றன.இதனாலும் வெள்ளை உண்டாகும்

- மூலத்தில் அதாவது குய்யத்தில் சூடு அதிகரித்த பெண்களுடன் அடிக்கடி உறவு கொள்வதால் வெள்ளை ஏற்படும்.

- மாதவிடாய் , முழுதும் முடியாத பெண்களுடன் (  மாதாந்திர / பிரசவ) உறவு கொள்வதால், அந்த விஷநீரானது நீர்த்தாரையில் தங்கி, நரம்புகள் பலவீனம் மற்றும் புண்ணாகி, வீக்கத்தை உண்டாக்கி மேக நோய் உண்டாகிறது.

- காரமான மருந்துகளை சில மருத்துவத் தேவைக்காக பீச்சாங்குழல் மூலமோ அல்லது வேறு வகைகளிலோ அல்லது முறை பிசகாகவோ பிறப்பு உறுப்புகளில் உட்செலுத்தச் செய்தால் சிறுநீர்பாதையில் புண்கள் உண்டாகி மேக வியாதி உண்டாகும்.

- தாளிக்காத சுண்ணாம்பு அல்லது ஆற்றல் மிகு பிளீச்சிங் பெளடர் மீது சிறுநீர் கழித்தாலும் அந்த ஆவியானது சிறுநீர் பாதையில் புண் உண்டாக்கி மேக வியாதி உண்டாகும்.

       ஒரே போஸ்ட்டில் சொல்லி முடியக் கூடிய. நோய் இது அல்ல. மருத்துவத் தொழிலுக்கே சவால் விடும் பிணி இது. கமெண்டில் உங்கள் கருத்துகளைச் சொன்னால் மட்டுமே அடுத்தடுத்த போஸ்ட்கள் போட முடியும். உங்கள் கமெண்டுகள் பொது வெளியில் தெரியாது. சந்தேகங்களை தயங்காது கேளுங்கள். குறைந்தபட்சம் 👍 காட்டுங்கள்.
      

எலும்புகள் பற்கள் உறுதியாக

 

 வணக்கம் நண்பர்களே! 

      நாம் ஊன்றி நிற்கவும், மிடுக்காய் நடைபோடவும்,  திடமாய் இருக்கவும் எலும்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அத்தகைய எலும்புகள்,  மனிதனின் வளர்ச்சிப் பருவம் முடிந்ததும் தேயத் தொடங்குகின்றன. அதனால் கூன் விழுதல், மூட்டுவலி,எலும்பு பொருத்துகளில் (joinds) வலி, தாடை கன்னம் வலி,கழுத்து வலி, கை விரல்களில் வலி, இடுப்பு வலி, கால் மூட்டு வலி முதலிய பல வலிகள் உண்டாகின்றன. நாம் இனி வலிகளைக் குறைத்து, எலும்பு மஜ்ஜைகளை வலிமைப்படுத்தும் மூலிகைகளைக் காண்போம். 


      ஒவ்வொரு மூலிகைகளும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டவை. அப்படி எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் மூலிகைகளைக் காண்போம்.

முருங்கைக் கீரை

      முருங்கைக் கீரையை பழுப்பு இலைகள் இல்லாமல் நீக்கி , பருப்பு குறைவாக சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுவடையும்.

     முருங்கை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுவலி, இடுப்புவலிகளுக்கு கட்டி வர எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் சரியாகும்.  வலி நீங்கும் (மூன்றாம் நிலை மருந்து)





அரைக்கீரை

      அறுகீரை எனப்படும் அரைக்கீரை தமிழகமெங்கும் இயல்பாகத் தானே வளரக்கூடியது.

     அரைக்கீரையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை  துவரம் பருப்புடன் முறைப்படி சமைத்து உண்ண எலும்புகள் பலப்படும்.

      அரைக்கீரை உண்பதால் கிடைக்கக் கூடிய  பயன்களாவது, காய்ச்சலைப் போக்கும், சளி சேராது அகற்றும், மலத்தினை இளக்கி வெளியேற்றும், காம உணர்வினை அதிகரிக்கும். உடல் நடுக்கம் நீங்கும்.


பசலைக் கீரை

    பச்சைக்கீரை,கொத்துகத்திரி, சாம்பற்றாசிளி, சிவந்தி, சீக்கிராந்தி, திண்டி( திண்டி வனம் என்னும் காரணப் பெயர் ) , நீலி ( அவுரிக்கும் இதே பெயர்),வசளை என்ற பெயரில் அழைக்கப்படும் பசளைக் கொடியின் இலையை முறைப்படி சமைத்து, நெய் சேர்த்து உண்ண உடல் எலும்புகள் பலம் பெறும். 

     கொடிப்பசலையின் இலையை அடிக்கடி சமைத்து  உண்டு வருவதால் மேலும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. அவை.

-சிறு நீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளான சிறுநீர் அடைப்பு மற்றும் வலி, எரிச்சலுடன் கூடிய சிறுநீர் போதல் குணமாகும்.
- மேக வியாதிகளை நீக்கும்.
- ஒக்காளம், வாந்தி முதலியவை தீரும்.
- நல்ல இரத்தம் ஊறும், உடல் சூட்டினைக் குறைக்கும்.
- எலும்பு மற்றும் பற்கள் இழையாது பலப்படும்.


பிரண்டைக் கொடி

      சதைப்பற்றுள்ள சதுர வடிவான தண்டுகளைக் கொண்ட ஏறு கொடி.இதன் கணுப் பகுதியில் பற்றுக் கம்பிகள் எனப்படும் கொடிகள் மேலேறும் போது பற்றிக் கொள்ள உதவும் விழுதுகள் போன்ற அமைப்புடன் இருக்கும். இதன் பழங்கள் சிவப்பு நிறத்தில் சிறிதாக உருண்டை வடிவத்தில் சதைப்பற்றுடன் இருக்கும். 
     பிரண்டையின் வகைகளில் முக்கோண வடிவான முப்பிரண்டை என்னும் வகையும், உருண்ட தண்டுகளை உடைய மூங்கில் பிரண்டை அல்லது கோப் பிரண்டை என்ற வகையும் இருக்கின்றன. 
     இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பு,  தடிப்பு உண்டாகும். இப்பிரண்டையை வச்சிரவல்லி, தீப்பிரண்டை, நல்லபிரண்டை, அருகணிக்கொடி, காட்டுமுந்திரி( தட்ச நாயனார் மருத்துவ அட்டவணை), காண்டிரம்  கார்கோடம், கிரீட்டி, சிகரம், திரக்கரணி என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. 

     தோல் , கணு எடுத்த பிரண்டைச் சாற்றில் உப்பு கரையும் வரை கரைத்துக் கொண்டே வந்து பின் அதைக் காய்ச்சி சாறு சுண்டக் காய்ச்சி , சூடு பொறுக்கும் அளவில் பத்துப் போட சதை பிரளுதல், அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு முதலியவை குணமாகும். 

      தோல் கணு நீக்கிய பிரண்டையை புளி ,மிளகு அல்லது மிளகாய், உப்பு  சேர்த்து அரைத்து,   தாளித்து தொக்கு செய்து வைக்கவும். தினமும் உணவின் போது சுடுசோற்றில் முதல் கவளத்தில் இந்த தொக்கு ஒரு ஸ்பூன் அளவு போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டு வர,  மூட்டு வலி, உடல்வலி,  வயிற்றிலுள்ள நுண் கிருமிகள் நீங்கி எலும்புகள் , பற்கள் வலிமை பெறும்.
வச்சிரவல்லி


தாம்பூலம் 

      நாகரீக உலகில் வெற்றிலை பாக்கு போடுவது அநாகரீகம் என்றாகி விட்டது. எலும்புக்கு வலு ஊட்டும் சுண்ணாம்புச் சத்தை நேரடியாக எடுத்துக் கொள்ளும் ஒரே முறை வெற்றிலை பாக்கு போடும் முறைதான்.

          வெத்தலை , பாக்கு, சுண்ணாம்புடன் போடு கிராம்பு, ஏலம், சாதிக்காய்த்தூள் போன்ற வாசனை, லாகிரி தரும் பொருட்கள் சேர்த்து போடுவதினால் வாயில் நறுமணம் மட்டுமன்றி, பாக்கு போடுவதால் மலம் இளகிப் போகும், கிராம்பு வாயிலிள்ள ஈறுகளை இருகச் செய்யும், சாதிக்காய் ஆண்மையை அதிகரிக்கும்.

       வெற்றிலை போடுவதால் எலும்புகளுக்கு வலிமை கூடுவதுடன், பெண்களுக்கு சுரோணிதம் அதிகமாய் ஊறச் செய்யும்.

பல்வலி, ஈறு பிரச்சனைகளுக்கு மருந்து

      கொய்யா இலைகளுடன், பிரிஞ்சி இலை எனப்படும் கிராம்பு இலை சேர்த்து மென்று அந்த சாற்றை பல்வலி உள்ள இடத்தில் சற்றொப்ப அரைமணி நேரம் வைத்திருக்க பல் வலி நீங்கும். மூன்றாவது முறை செய்யும்போது வலி முழுவதுமாக நீங்கும் (  முதல் நிலை மருந்து). 

       நாற்பது வயதுக்கு மேற்பட்ட பல் வலி இல்லாதவர்கள் கூட. அமிர்தபலா, உய்யக்கொண்டான் என்னும் கொய்யாவின் இலையை, கிராம்பு இலை என்னும் இலவங்கப்பத்திரி மற்றும் வெற்றிலை சேர்த்து மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருக்க பல் தொடர்பான பல பிரச்சனைகள் தீரும். வாய் நாற்றம் அகலும்.


                      சித்தம்.




மாரியாத்தாவா? அம்மையா? தக்காளிக் காய்ச்சல் இதுவா?

 வணக்கம் நண்பர்களே!

        கிராமங்களிலும்,  சினிமாக்களிலும் ஆத்தா  இறங்கிட்டா, மாரியாத்தா எறங்கிட்டான்னு   சொல்லுவாங்களே அது மாரியாத்தாதானா?  சித்தர்கள் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்களா? அதற்கு மருந்தே இல்லையா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

       அதற்கு முன்  நீல நிற follow பட்டனை அழுத்தி ஃபாலோ செய்து கொள்ளுங்கள். படிதத பின் சந்தேகமோ, கருத்தோ தயக்கமின்றி comment பாக்ஸில் சொல்லுங்கள்.

      சித்தர்கள் மாரியாத்தா என்று பெயரிடவில்லை. அவர்கள் அப்பிணியை அம்மை, வைசூரி என்றழைத்தனர்.

அம்மைக் காரணம்

     உடலின் சூடு இயல்புக்கு மீறி, மூலத்திற் சூடு கொண்டு, மூளையில் அதிகக் கொதிப்புண்டாகி, எலும்புகளில் சூடேறி அம்மை உண்டாகிறது.  மேற்கண்ட வியாதி கண்ட பேரைக் கண்டு பயந்து இருதயங் கலங்கினாலும் அம்மை உண்டாகும்.    அம்மை தொற்று நோயாக இதுவே காரணம்.

   சித்தர்கள், ஒரே மாரியாத்தாவாக. சொல்லாமல் அதன் அறிகுறிகளை வைத்து 14 வகையாகப் பிரித்தனர்.

அம்மையின் வகைகள்

பனைமுகரி
பாலம்மை
வரகுதிரி
கொள்ளம்மை
கல்லு திரி
கடுகம்மை
மொழுக்கண்
உப்புத் திரி
கரும் பனசை
வெந்தய அம்மை
பாசிப்பயிறலம்மை
விச்சிருப்பு
நீர்க்குளுவான்
தவளை அம்மை


பனை முகரி குணம்

மிதமான காய்ச்சல்
நடுங்கும் உடல்
கண் சிவக்கும்
தொண்டை, மூக்கு வீங்கும்
பிதற்றும்
சன்னி தோன்றும்
மாதவிடாய் குருதிப் போக்கு அதிகரிக்கும்

பாலம்மை.

  -மிகு காய்ச்சல்
- மூன்றாவது நாள் இரவில் தலையில் கொப்பளம் போடும்
-  உடல் வலி உண்டாகும்
- கொப்பளத்தில் ஏழாம் நாள் நீர் கோர்த்து ஒன்பதாம் நாள் இறங்கும்.
  -பதினைந்தாம் நாள் சிறப்பு 
   குளித்தல் செய்யவும்.


வரகுதிரி குணம்

-கடுங் காய்ச்சல்
-மூன்றாவது நாள் தலையில் குரு(கொப்பளம்) தோன்றும்
-வாயால் இரத்தம் விழும்
- ஏழாம் நாள் குரு-வில் நீர் கட்டி, பதினோராம் நாள் வற்றத் தொடங்கும்
- சிறுநீர்த் தாரையில் இரத்தம் வரும்.

கொள்ளம்மைக் குணம்

-காய்ச்சல்
-தன்னிலை மறந்து பிதற்றல்
- சன்னி வலிப்பு
 இக் குறிகளுடன் மூன்றாம் நாள் தலையில் குரு தோன்றி பதிமூன்றாம் நாள் தணியும்.

கல்லுதிரிக் குணம்

-கடுங் காய்ச்சல்
-வாந்தி,  பேதி 
- மூன்றாம் நாளில் தலையில்  குரு தோன்றும்
-  ஏழாம் நாளில்  நீர்கட்டி பத்தாம் நாளில் சங்கம் பழம் போல நீர் கட்டி பத்தாம் நாள் இறங்கும்.பதினோறாம் நாள் சிறப்பு குளியல் செய்விக்கவும்.

சங்கம் பழம்
     

கடுகம்மை குணம்

-காய்ச்சல் அடிக்கும்
- மூன்றாம் நாளில் தலையில் கடுகு போல கொப்புளம் தோன்றும்
- உடம்பெல்லாம் அதிகமாய் வலிக்கும்.
- தொண்டை கட்டும்
- குரல்  சத்தம் குறையும்
- பேதியாகும்.

மொழுக்கன் குணம்

-  காய்ச்சல் கொடூரமாய்க் காயும்
- உடலெல்லாம் வலிக்கும்
- இடுப்பு வலு இழக்கும்
- உடல் எரிச்சல் 
-  உடல் வீக்கம்
- ஏழாம் நாளில் தலையில் 
 கொப்பளம் தோன்றும்

மருந்தினால் குணமாகக்  கூடிய பிணிதான் இது

உப்புத்திரி குணம்

- காய்சல் அடிக்கும்
- மூன்றாம் நாளில் தலையில் கொப்பளம் தோன்றி உடம்பெல்லாம் உப்பு போல கொப்பளங்கள் தோன்றும் 
- கொப்பளத்தில் ஐந்தாம் நாள் நீர் கோர்த்து ஏழாம் நாளில் இறங்கும் பதினோராம் நாள் குளிக்கச செய்யவும்.


கரும்பனசைக் குணம்

    பனசம் எள்றால் முள்ளு ( 20 ம் நூற்றாண்டு பெயரகராதி -1909 ) என்பது பொருளாகும், கரும் பனசை என்பதை கரும்முள் என ஒருவாறு பொருள் கொள்ளலாம். கொப்புளம் தோன்றி பின் கருகுவதால் இப்பெயர் வைத்திருக்கலாம்.

- காய்ச்சலடிக்கும்
- நான்காம் நாளில் தலையில் கொப்பளம் தோன்றும்
- உடலெல்லாம் குத்தும், கருக்கும்
- கொப்பளம் உள்வாங்கும்
- பேதியாகும்
- மயக்கம் வரும்
- பேதி நிற்பது அரிது.
 -  மலங்கட்டினால், பதிமூன்றாம் 
    நாளில் இறங்கும்.
-  உடல் முழுதும் பரவி, அது புண்ணாகி  அதில் நுண்கிருமிகள்  உண்டாகும்.
-  உடல் சொரணை இல்லாது மேல் மூச்சு வாங்கும்.

- 21 நாள் சென்ற பிறகு சிறப்பு குளித்தல் செய்யவும். 
-  மருத்துவம் செய்யாவிடில் இப்பிணி கண்டவர்கள் பிழைப்பதரிது.

வெந்தய அம்மை குணம்.

- காய்சல் அடிக்கும்
- மூன்றாம் நாளில் தலையில் கொப்பளம் தோன்றி ஏழாம் நாளில் நீர்கட்டி ஒன்பதாம் நாள் இறங்கும்.
- பத்தாம் நாள் சிறப்பு குளித்தல் செய்யவும்.

பாசிப் பயிற்ற லம்மை குணம்

- காய்ச்சல் தோன்றும்
- நினைவு தடுமாறி பிதற்றல் உண்டாகும்.
- இரண்டாம் நாள் தலையில் கொப்புளங்கள் தோன்றி ஏழாம் நாள் நீர்கட்டி ஒன்பதாம் நாள் சிறப்பு குளித்தல் செய்யவும்
- நீர் மோர் சாப்பாடு தரவும்.  உடல் பலம் பெறும்.

விச்சிருப்பின் குணம்

விச்சிரும்பி-த்தல் என்றால் கோபத்தால் கிளர்தல் என தமிழ் லெக்சிகன் அகராதி சொல்கிறது.எனவே குரு என்னும் கொப்பளம் தலையில் தோன்றி மிக வேகமாக உடல் எல்லாம் வாரியிடும் என ஒருவாறு பொருள் கொள்ளலாம்.

- காய்ச்சலடிக்கும்
- கண் சிவக்கும்
- வாந்தி பேதி உண்டாகும்
- மூன்றாம் நாள் கொப்பளம் தலையில் தோன்றி உடம்பு எல்லாம் உமிபோல வாரியிட்டு மறையும்.
- ஏழாம் நாள் சிறப்பு குளித்தல் செய்யவும்.
-  வயிற்றுப் போக்கு உண்டாகும்.

நீர்க்குளுவான் குணம்

   கொப்புளங்களில் நீர்  உள் கொள்ளுதலால் நீர்க்குளுவான் என ஒருவாறு பொருள் கொள்ளலாம். 

- காய்ச்சலடிக்கும்
- மூன்றாம் நாள் சங்கம் பழம் போல கொப்பளம் நீர் கொண்டு உண்டாகும்
-  ஏழாம் நாள் காய்சல் இறங்கும்
- ஏழாம் நாள் சிறப்பு குளிர்வித்தல் செய்யவும்.


தவளை அம்மைக் குணம்

    நடக்க விடாமல்  செய்வதால், அல்லது அந்த நடை தவளை நடை ஒத்து இருப்பதால்  இதன் பேரை ஒருவாறு பொருள் கொள்ளலாம்.

- காய்ச்சல் அடிக்கும்
- நடக்க விடாமல் செய்யும்
- ஈரல் குலை எரிச்சல் போல் எரிச்சல் உண்டாகும்.
- சாப்பிட எண்ணம் வராது சாப்பாடு வயிற்றுள் செல்லாது
- நான்காம் நாள் தலையில் கொப்பளம் தோன்றி ஒன்பதாம் நாள் இறங்கும்


வந்த அம்மை அதிகமாகாமல் இருக்க

     புளியிலை, கோழியவரை, நாட்டு சின்ன வெங்காயம் மூன்றும் ஒரே எடையளவு எடுத்து உரலில் இட்டு இடித்து, அதனுடன் நீராகாரத் தண்ணி (  நீச்சுத் தண்ணி, பழைய சோற்றுத்தண்ணி) சேர்த்துப் பிழிந்து வடிகட்டி கால்படி அளவு தினந்தோறும் காலை மதியம் இரவு மூன்று நேரம் குடுக்க அம்மை அதிகப் படாது.

                                       புளிய இலை

புளிய மரத்து இலை

கோழியவரை


கோழி அவரை




       கல்லுதிரி அம்மை குணமும், நீர்க்குளுவான்  அம்மை குணமும் சங்கம் பழம் போன்ற கொப்பளங்கள் உண்டாவதைச் சொல்கின்றன. அறிவிற் சிறந்த நீங்கள் சிறிது முயன்றால் தக்காளி காய்ச்சல் என்று தற்போது கேரளாவில் பரவி வரும் காய்ச்சலைக் கண்டறிந்து அப்பிணி அகற்றலாம். 

      சரி. ஆனால் ஏன் மாரியாத்தா என்றார்கள்? ஆத்தா என்பது வேப்பிலைக்கு வேறு பெயராம். வேப்பிலை அனைத்து வித அம்மை நோய்க்கும் மருந்தாக இருக்கிறது எனவே அம்மை நோயை ஆத்தா என அழைத்தனர். அம்மை எப்பொழுதும் வெயில் காலத்தில்தான் வரும், அதே காலத்தில் இருக்கும் மற்றொரு பிரச்சனை வெப்பத்தைத் தணிக்கும் மழை. மழை அதாவது மாரியை தெய்வமாக வணங்கியவர்கள்,  உரிமையாய் மாரி ஆத்தா என்றார்கள். அவர்கள் அது போலவே அம்மையிலிருந்து காக்க வேண்டி,  மாரியாத்தா என்றார்கள்.
    
     நோய்களுக்கு மருந்து அல்லது மருத்துவ முறை வேண்டுவோர், கமெண்டில் தெரிவித்தால் விடைளிக்கப்படும்.


     சிறப்பு குளித்தலும், வைசூரி நோய்களுக்கான பொது மருந்துகளும் அடுத்தடுத்த போஸ்ட்களில் comments வந்தால் கூறுவோம்.

சித்தம். 

நவபாஷாண சிலை உருகுமா?

     இன்று சமூக வலைதளத்தில் நவபாஷாண சிவன் சிலை உருகியதாகவும், அதை சீர் செய்ய நிதி திரட்டப் படுவதாகவும் செய்தி வந்தது, நவபாஷாணம் உருகுமா என்பதைப் பார்ப்போம்.


  பாஷாணம் என்பதற்கு கல் என்பதே பொருளாகும்.  இவை இயல்பில் தீமை செய்யும் குணத்துடன் இருப்பதால் அவை விஷங்கள் எனப்படுகின்றன.

       இவை கனிமச் சுரங்கங்கள் தோண்டும்போது கிடைக்கின்றன.  மொத்தம் 32 வகையாக உள்ளன. 

பாடாணங்களின் பெயர்கள்

1. கெந்தகம்
2. வீரம்
3. லிங்கம்
4. அரிதாரம்
5. கெளரி பாடாணம்
6. கற்கடா பாடாணம்
7. சூத பாடாணம்
8. வைக்கிராந்த பாடாணம்
9. தாலப் பாடாணம்
10. அமுர்த பாடாணம்
11. குதிரைப்பல் பாடாணம்
12. சங்க பாடாணம்
13. கெளக பாடாணம்
14. தொட்டிப் பாடாணம்
15. துற்ற பாடாணம்
16. காந்தம்
17. சரகண்ட பாடாணம்
18. பலண்டுறுகப் பாடாணம்
19. தாளகம்
20. மனோசிலை
21. அவுபல் பாடாணம்
22. கற்பாடாணம்
23. கற்பரி பாடாணம்
24. சலாங்க பாடாணம்
25. அஞ்சனக்கல்
26. சிலாமதம்
27. அப்பிரகம்
28. வெள்ளைப் பாடாணம்
29. கச்சலப் பாடாணம்
30. சீதாங்கப் பாடாணம்
31. கார்முகிற் பாடாணம்
32. சிற்பந்த பாடாணம்.
      
    பொதுவாக பாடாணங்கள் தீய குணங்களை உடையவை என்று கருதப்பட்டாலும் அவைகளை அவைகளுக்குரிய முறையில் சுத்தி செய்தால் அவற்றிலுள்ள தீமைகள் நீங்கி நன்மை தரும் பொருட்களாக மாறும். 

     ஒரு குறிப்பிட்ட மருத்துவ பயனுக்காக அல்லது வேறு பயனுக்காக ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பாடாணங்களை சேர்த்து , அம்மருந்திற்கு வலு சேர்க்கும் மூலிகைகளைக் கொண்டு அரைத்து புடம் போட்டு மருந்தாகவோ அதை  மணியாகவோ செய்வர். அப்படி ஒன்பது விதமான பாடாணங்களைக் கொண்டு செய்யப் படுவது நவபாடாணம் எனப்படும். 

        பாடாணங்களை சேர்ப்பதற்கு முன் அதில் உள்ள குற்றங்களை, தீமையை நீக்க சுத்தி என்னும் செயலைச் செய்வர். ஒவ்வொரு பாடாணத்திற்கும் ஒவ்வொரு விதமான சுத்தி முறைகள் இருக்கும். அடுத்து கட்டு என்னும் செயல் முறையினைச் செய்வர்.

     கட்டு என்பதன் வரையறை,  மருந்துப் பொருட்களை நெருப்புக்கு எதிர்த்து நிற்கும் தன்மை உடையதாகச் செய்தல் என்பதே. கட்டு என்பது பொருளின் இயல்பை மாற்றி அதை நம் நோக்கத்திற்கு ஏற்ப மாற்றுவதேயாகும். எடுத்துக்காட்டாக  கந்தகத்தின் இயல்பு எளிதாக தீப்பற்றி புகைந்து ஆவியாவது, ஆனால் கட்டப்பட்ட கெந்தகம் அப்படி தீப்பற்றி எரிந்து காணாமல் போகாது, தீயில் போட்டாலும் அதன் எடை குறையாது.

     அப்படி பாடாணத்தைத் தீயில் போட்டாலும் எடை குறையாத படி கட்டி( கட்டு முறை செய்து) அதில் ஒன்பது பாடாணங்களைச் சேர்த்துக் கட்டி செய்த நவபாசாணம் எப்படி வெயிலுக்கு  உருகும்? 

       உருகாது. கலெக்சன்  செய்ய செய்த வேலையாகத்தான் தெரிகிறது. பித்தலாட்ட வேலை. உருகியிருந்தால் அது நவபாசாணச் சிலை இல்லை.டுபாக்கூர்.





சித்தம்.