அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 001 - 100
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 201 - 250
வணக்கமுள்ள ஐந்துருவு மைந்தே யுப்பு
வரிசை யுடனிதை யறிந்து கலவத்திட்டு
இணக்க முடனரைக்கையிலே மெழுகாய்ப் போகும்
என்ன சொல்வேனிம் மெழுகினியல்பு தன்னை
மணக்கமுடன் மெழுகெடுத்து பதனம் பண்ணி
மார்க்கமுட னிம்மெழுகை வைத்துப் போற்றி
தனக்கு மிதுகிடைத்த பொருளென்று நீயுஞ்
சதாகாலம் அம்மெழுகைப் பூசை பண்ணே
- 101
பூசையது செய்ததினால் பலிக்குஞ் சித்தி
பூரணத்தை மறந்ததினா லொன்று மில்லை
நேசமுடன் பூரணமே தெய்வமென்று
நிலைத்து மனதுறுதியிலே நிறுத்த வேணும்
ஆசையென்ன பூரணத்தி னாசை யாசை
அதைவிட்டால் வேறுமொரு ஆசை யுண்டு
பாசமதைத்தான் கற்றி யறிவில் சேர்ந்து
பரவெளியில் நினைந்ததினால் பாலனாமே
- - - 102
பாலனாய்ப் பதினாறு பிராய மாவாய்
பராபரைத்தாய் பூரணத்தால் பலிக்குஞ் சித்திக்
காலனென்ற காலனவ னோடிப் போவான்
காலனென்று சொன்னதுதான் பாசம் பாசம்
ஆலமுண்ட சிவனாரும் விஷத்தை யுண்டார்
அவ்விஷந்தான் பராபரத்தி னருளே யாகும்
சீலமுட னாலமென்ற விஷந்தான் போதஞ்
சிவசிவா பூரணத்தின் செயலைப் பாரே -
- 103
கெந்தகமெழுகு
பரையீன்ற நாதமடா கெந்தி ரசம்வீரஞ்
சேரப்பா கலவத்தி லாட்னாக்கால்
சிவசிவா மெழுகதுபோல் சேர்ந்து நிற்கும்
ஆரப்பா அறிவார்கள் கெந்திப் போக்கு
அறிந்தவர்கள் சதாசிவத்தை யறிவாரப்பா
நேரப்பா நின்றநிலை தவிரா மற்றான்
நேசமுட னிம்மெழுகைப் பதனம் பண்ணே
- -104
பண்ணப்பா பூசையினால் பலிக்குஞ் சித்தி
பாசமதைத் தானறுத்து நேசம் வைத்து
உண்ணப்பா பராபரமே செயல் தானென்று
வுற்றுமெள்ள ஆறுதல மூரே சென்று
விண்ணப்பா தீண்டாதே சுடரைப் போற்று
வேதாந்த பூரணத்தில் விரும்பி நில்லு
கண்ணப்பா சுழிமுனையில் கருத்தா யூணு
கருவான பன்னிரண்டு மடங்குந் தானே
- - 105
தாளகமெழுகு
தானென்ற சற்குருவா முப்பூ வோடே
தன்மையென்ற தாளகமும் வீரம் பூரந்
தேனென்ற ரசமுடனே கலவத்திட்டு
திரமாக ஈராறு சாம மாட்டு
கோனென்ற மெழுகாகு மப்பா கேளு
குருவான மெழுகதுவைப் பதனம் பண்ணு
நானென்ற ஆணவத்தைப் போக்கிக் கொண்டு
நன்மையுடனிம் மெழுகைப் பூசை பண்ணே - - 106
பூசையப்பா தினந்தோறும் பூசை பண்ணு
புலத்தியனே உனக்கா இந்நூலை
நேசமுட னாயிரத்திருநூறாக
நிலைத்தனடா கருவெல்லா மிதிலேயப்பா
பாசமதைத் தானறுத்துப் பதியிலூணிப்
பாச்சடா மெழுகையுநீ தாய் மகிழ்ந்துகாணும்
- -107
மகிழ்ந்ததொரு சிவகளையைக் கண்டு நீயு
மகிழாதே புலத்தியனே மனம் வேறாகும்
நெகிழ்ந்த மனமிருக்குமடா வெகுநாள் செல்லும்
நேரான பூரணத்தை நெஞ்சில் தாக்கு
பகுந்ததொரு சிவயோகப் பண்பில் நில்லு
பராபரமே கெதியனவே பணிந்து போற்று
தகுந்த மனமுறுதியுடன் வலுத்துப் போகும்
தண்மையுள்ள பராபரத்தைத் தாக்கிப் பாரே
- 108
லிங்கரச மெழுகு
பஞ்சுடைய வீரமுடன் புழுகு பூரம்
சேரப்பா கலவத்திலொன்றாய் சேர்த்து
திரமாக அரைக்கையிலே மெழுகாய்ப் போகும்
வீரப்பா செய்யாமல் மெழுகு தன்னில்
விஷமில்லா ரசமதிலே நாலிலொன்று
காரப்பா கலவத்திலிட்டு நன்றாய்
கருவிட்டு அரைக்கையிலே சேர்ந்துபோமே
– 109
சேர்ந்ததொரு லிங்கரச மெழுகு தன்னை
திரமான சிமிழ்தனிலே யடக்கம் பண்ணு
கூர்ந்துமெள்ளக் குருபதத்தைத் தொண்டு பண்ணி
கூர்மையுள்ள மெழுகதிலே குன்றி வாங்கி
நேர்ந்துகொண்டு இம்மெழுகைக் கொண்டாயானால்
நிலைத்துதடா சலமென்று கூடுதானும்
தேர்ந்து இந்த மெழுகதிலே மண்டலமே கொண்டால்
சிவசிவா கவுனமென்ற சித்துதானே
- - 110
ஆனைக்கல்சத்து மெழுகு
திரமான ஆனைக்கல் சத்து வாங்கி
முத்தான பூரணத்தையதிலே சேர்த்து
மூர்க்கமுள்ள ரசமுடனே பூரங் கெந்தி
கர்த்தாவைத்தான் தொழுது ரவியில் வைக்க
கருணையுட னாலுமதுயொன்றாய்ச் சேர்த்து
வற்றாத மெழுகது போலிருக்கும் பாரு
வாகாக இம்மெழுகைப் பதனம் பண்ணே
- 111
பதனமுடனிம் மெழுகில் குன்றி யுண்ணு
பதறாமல் மூலமதில் நின்றாயானால்
விதனமெல்லா மோடிவிடும் பலக்குங்
காய மேன்மையுள்ள கற்போலே விளங்குந் தேகம்
மதனன்போல் வடிவாகும் பிலமுண்டாகு
மகத்தான அஷ்ட சித்துங் கைக்குள்ளாகும்
அதமான கருவிகள்தான் மெத்தவுண்டு
அசடரிடஞ் சொல்லாதே யறிவைப்பாரே
- 112
அறிவான பூரணமே தெய்வந் தெய்வம்
அருமையுள்ள பூரணத்தை யார்தான் காண்பார்
குறியான குறியறிந்த பெரியோர் காண்பர்
குண்டலியைச் சத்தியென்றுங் கூறுங்கூறும்
நெறியான சிவயோக மார்க்க மெல்லா
நேர்மையுட னறிவிக்கும் பூரணத்தின் கூறு
பரியான தேசியடா அகார பூடம்
பரதேசி தனையறிந்து பணிகுவாயே
- - 113
அபக்குவர்களிவரெனல்
வானறிந்து சேராத குருடர் மெத்த
தாயறிந்து இணங்காத கழுதை மாண்பர்
தலைவனையு மறியாத சண்டி மாண்பர்
காயறிந்து கனியறிந்து கொள்ளா மாண்பர்
காசினியில் மெத்தவுண்டு கருத்தில்லார்கள்
தீயறிந்து அனலமூட்டத் தெரியா மாண்பர்
சிவ வேடந்தனை யறியார் திருடர்தானே
114
தானென்ற தத்துவத்தை யறியா மூடர்
தன்மை யென்ற மனமொடுங்கும் நிலையுங்காணார்
கோனென்ற குருபத்தின் குறியுங் காணார்
குருடாவர் காயாசங் குறடு மிட்டு
நானென்ற ஆணவத்தை மெத்தப் பேசி
நலமில்லா அஞ்செழுத்தை யுபதேசித்து
வீணென்ற வீண்மதங்கள் மெத்தப் பேசும்
வெள்ளாட்டிப் பயல்களுடன் சேராதையா
- - 115
சேராத கருவறிந்து கள்ள மாண்பர்
செத்த பிணம்போல் திரிவார் சிவனேயென்று
கூறாத பொருளையெல்லாங்
கூகூவென்பார்
சுற்றிந்து நேராத குருடர் மட்டை
ஆறாது தத்துவத்தின் செயலைக் காணார்
அகண்ட பரிபூரணத்தி னறிவைக் கண்டு
தேறாத சித்தர்கள் கோடியுண்டு
சிவசிவா தேறினபேர் கோடிக்கொன்றே - - 116
ஒன்றான முப்பூவில் காரஞ் சேர்க்க
ஒருமையுள்ள சாரநீரது தானப்பா
பன்றான சேதியிது காரசாரம்
பருவமறிந் துலகமதில் பகர மாட்டார்
நன்றான புலத்தியனே யுனக்குச் சொன்னேன்
நலமறியாக் காரமதைச்சாரமென்பார்
உண்டான சோதியடா ஆதியந்தம்
உரிசையுள்ள பூரணமென் றுகந்துநில்லே
- -117
நில்லென்று முன்சொன்ன சார நீரில்
நிசமான வீரமூடன் பூரஞ் சேரு
கொல்லென்று பொங்கியது அமரும் பாரு
கொடிதான நீரப்பா கூறப்போமோ
சொல்லென்ற அந்நீரைக் குப்பி தன்னில்
சுருக்காக அடைத்துநீ பதனம் பண்ணி
வல்லமைகள் பேசாமல் மனதடங்கி
மகத்தான செயநீராந் தொழிலைப் பாரே
-- 118
லிங்கக்களங்கு
பருவமுடன் செயநீரைச் சுருக்குத் தாக்கு
வீரப்பா கட்டியது அடங்கிப் போகும்
விசையான முப்பூவில் செயநீர் விட்டு
காரப்பா கலவத்தி லாட்டினாக்கால்
கருணையுள்ள மெழுகாகும் லிங்கத்தப்பி
சீரப்பா மண்சீலை யேழுஞ்செய்து
சிவசிவா காடைதனில் மணி போலாமே
- -119
ஆமப்பா லிங்கமணிதனை யெடுத்து
ஆதியென்ற தங்கமதில் நாலுக்கொன்று
நாமப்பா சொல்லுகிறோங் கொடுத்தாயானால்
நன்மையுள்ள லிங்க தங்கமொன்றாய்ச் சேர்ந்து
தாமப்பா லிங்கமென்ற களங்கதாகுந்
தயவான களங்கமதை யுடைத்துக் கொண்டு
வாமப்பா தனையறிந்து கொண்டு மைந்தா
மகத்தான மதிதனிலே பத்துக்கொன்றே
- 120
லுத்தமனே வயது பதினாறதாகு
நன்றான வெள்ளி செம்பிலீந்தாயானால்
நன்மையுட னொன்பதரை தப்பாதையா
நன்றான குடவனிலே யீந்தாயானால்
கருவான ஏழரையுங் காணும்
அண்டர் பிரான் தொண்டரென அருளைப்பெற்று
அரகரா சிவயோக அருளைப் பாரே
- -121
நாகக்கட்டு
பக்குவமாய் நாகமதை யுருக்கிச் சாய்த்தால்
காரப்பா ஐந்துமுறை சாய்த்தாயானால்
கன்மமுள்ள குடிலமெல்லாங் கழன்று போகும்
சீரப்பா அடங்கியது மணி போலாகுஞ்
சிவசிவா நாகமணி யென்ன சொல்வேன்
ஆரப்பா அறிவார்கள் நாகப் போக்கு
ஆதியந்தப் பொருளதினா லடங்கிப் போச்சே-
-122
அடங்கினதோர் நாகமதை யெடுத்துக் கொண்டு
அப்பனே தங்கமதி லிடைக்கிடைதான் சேர்த்து
தடங்கலில்லா மணியெடுத்து வுடைத்து மைந்தா
தயவாக வெள்ளி செம்பிலீந்தாயானால்
முடங்கலில்லா ஆறேழு வயதேயாகு
மூடருக்கு இக்கருவைச் சொல்லாதையா
திடங்கனிந்த அமுதமுண்டு குருவைக்காரு
தெசதீட்சை பதிதனிலே சேர்ந்துநில்லு
- - 123
நில்லென்று சொல்வது தானெங்கே யென்றால்
நிருமலமாங் குருபதத்தே நேர்ந்து நில்லு
தள்ளென்ற சொல்லது தானாரை யென்றால்
தன்மையில்லா வண்டரை நீதள்ளு தள்ளு
கொல்லென்று சொல்லது தானாரை யென்றால்
குருவை நினைந்துருகாத குறும்பர் தன்மேல்
செல்லென்று மன்மதனைக் கொல்ல வேண்டாஞ்
சிவசிவா குருவருளைத் தினமும் போற்றே
- 124
துரிசுச்சுன்னம்
புதுமையுள்ளது துரிசினுட சுன்னஞ் சொல்வேன்
மாற்றுவது வழலையுட ணிணங்கன் கூட்டி
மாறாம லிடைக்கிடைதான் துரிசி கூட்டி
தாட்டிகமாய்க் கல்வத்திலிட்டுக் கொண்டு
சமரசமாய் முன்னீரை விட்டு ஆட்டி
வாட்டிடுவாய் பில்லைதனை ரவிமுகத்தில்
மைந்தனே நன்றாக வுலரப்போடே
- -125
உலர்ந்த பில்லை தனக்கு மேல்சீலை செய்து
உண்மையுடன் காயவைத்து குருவைப் போற்றி
அலர்ந்த எருதனையெடுத்து புடத்தைப் போடு
அரகார புடமாறி யெடுத்துப் பாரு
மலர்ந்ததொரு பூப்போலே நீறி நிற்கு
மகத்தான சுன்னமடா என்ன சொல்வேன்
தளர்ந்ததொரு ரசந்தன்னைப் பழியாகக் கொல்லும்
தன்மையுள்ள சின்னமதைப் பதனம் பண்ணே
- -126
ரசமணி
பாலகனே ரசமதனைச் சுத்தி பண்ணி
தாம்பரக்கிண்ணி தன்னில்
கிருபையுள்ள ரசமதனை அதனில் வார்த்து
நன்னயமாய் ரவிதனிலே ரசத்தை வைத்து
நன்றான சுன்னமதை மேலே தூவி
கன்னிமயேஸ்வரி தனக்குப் பூசை பண்ணி
கையாலே மத்திக்க திரளுந்தானே
- - 127
திரமான ரசமதனை யெடுத்து மைந்தா
சிவசிவா வுண்டைபோல் திரட்டிக் கொண்டு
உரமான முப்பூவில் முன்னீர் விட்டு
வுத்தமனே குப்பிமணி தனக்குப் பூசி
நிறமான ரவி முகத்திலுலர்த்தி மைந்தா
நிச்சயமாய் விளக்கொளியில் வாட்டினாக்கால்
பரமான பரமகுரு அருளினாலே
பக்குவமாயிருகியது மணி போலாமே
- - 128
ஆமப்பாயிம் மணிக்குச் சாரணைகள் தீர்ந்து
அருள் பெருகுஞ்சிமிழ் தனிலே யடக்கம் பண்ணி
நாமப்பா சொல்லுகிறோம் நாவிலிட்டு
நன்மையுள்ள அமுதமது கொண்டா யானால்
தாமப்பா வுனதுருவம் நிர்மலமாய்க் காணுஞ்
சச்சிதானந்தவொளி தானே தோன்றுந்
காமப்பா கொண்டதொரு திறத்தால் மைந்தா
கயிலாச மேறு தன்னைக் காணலாமே
- -129
வழலை நாத முப்பூச்சுன்னம்
காணப்பா இன்னமொரு முப்பூவைச் சொல்வேன்
கருவான வழலையுட நாதங்கூட்டி
பேணப்பா இந்திடைக்கு பூரஞ்சேர்த்து
பெருமையுள்ள கலவத்திட்டு மைந்தா
தேனப்பா முன்சொன்ன செயநீர் விட்டு
திரமாக அரைக்கையிலே காரமேறி
கோணப்பா தன்னருளால் சுன்னமாகி
கொடுமையுள்ள சுன்னமதாகி நிற்குந்தானே
- -130
அரிதாரக் கட்டு
தாரமென்ற அரிதாரக் கட்டிக்கப்பா
வானென்ற செயநீராலரைத்து மைந்தா
மகத்தான தாரத்துக்கங்கி பூட்டி
பானென்ற ரவி முகத்திலுலர்த்தி மைந்தா
மண்சீலை யேழுஞ்செய்து
தேனென்ற பூரணத்தை மனதில்வைத்து
சிவசிவா காடையென்ற புடத்தைப்போடே
- -131
போட்ட புடந்தன்னை யெடுத்துப்பார்த்தா யானால்
புதுமையுள்ள தாரமது கட்டிப் போகும்
தாட்டிகமாய்க் கட்டியதோர் தாரந் தன்னை
தயவான செம்பு வெள்ளீக் கீந்தாயானால்
நாட்டமுட னீராறுவயது பெண்தான்
நாயகி போலுனது முன்னே நாடிநிற்பாள்
தேட்டமுட னவள்பதத்தைப் பூசை பண்ணு
தெவிட்டாதே பூரணத்தை தினமுநோக்கு
- - 132
நோக்குவது பூரணத்தை நோக்க வேணும்
நுண்மையுள்ள லட்சணத்தைப் பார்க்க வேணும்
தாக்குவது ஒரு நிமைக்குளிருளையெல்லாந்
தட்டழிந்து போகவே தாக்க வேணு
மார்க்கமுடனிம் முறைகள் பார்க்க வேணும்
மந்திர பஞ்சாட்சாத்தில் நிற்க வேணும்
ஆர்க்குமிந்த முறைகளை நீ சொன்னாயானால்
அப்பனே யுனதுசிரம் வெடித்துப்போமே
- - 133
போமப்பா சகலசித்தும் பொ(ய்)ச்சுப் போகும்
பொல்லாத சண்டாளர்க் கீந்தாயானால்
நாமப்பா சொல்லுகிறோ மிந்தசாபம்
நம்மாலே தீர்ப்பதற்கு முடியாதையா
ஆமப்பா சொல்லிவிட்டோ மிந்தநூலை
அடக்கமப்பா வெகுபதனமடக்கம் பண்ணு
தாமப்பா அடக்கம்விட்டு வெகுளியானால்
தன்னுடலைக் காணாமல் தயங்குவாயே
- -134
நாக ரசக்கட்டு
தயவான நாகரசஞ் சரியாய்ச் சேர்த்து
மயங்காம லடிமுடியுந் துரிசி பூர
மகத்தான வீரமுடன் சீனங் கூட்டி
தியங்காமல் கலவத்திலாட்டி மைந்தா
தேவி யென்னு மால்தேவிக் கங்கி பூட்டி
நயங்காணுமென்று நீ சீலை செய்து
நன்றாக ரவிமுகத்தில் காய வையே
- - 135
வையப்ப ரவிமுகத்தில் நன்றாய்க் காய்ந்தாக்கால்
மயங்காமல் புடம்போட மைந்தா கேளு
மெய்யப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
மேன்மையுள்ள ரவிபோலே கட்டி நிற்குங்
கையப்பா வுதவுவது போலே மக்காள்
கனமான ரவிமதி யிலீந்தாயானால்
பொய்யப்பா சொல்லவில்லைப் பத்துமாற்று
பொன்போலே யிருக்குமடா புகழ்ந்துதானே-136
காணப்பா உப்புடனே புளியுஞ் சேர்த்து
களிப்பான குடவனைத்தான் தகடாய்த் தட்டி
வீணப்பா சொல்லவில்லை தகடு தன்னில்
விசையான அரைமருந்தை வினவிக் கொண்டு
பேணப்பா புடம்போடச் செம்பாய்ப் போகும்
பிலத்ததொரு செம்பதனை உருக்கிக்கொண்டு
வூணப்பா கட்டினதோர் தாரந்தன்னை
உகந்து நீ கொடுக்கின்ற வரிசைகேளே
- 137
கேளப்பா வுருகினதோர் குடவன் தன்னில்
கிருபையுடன் வெள்ளியதி லீந்து கொண்டு
கேளப்பா வாராம லிரண்டுஞ் சேர்த்து
குள்ளென்று வுருக்கையிலே மைந்தா கேளு
வாளப்பா கட்டினதோர் தாரந் தன்னை
வரிசையுடன் கொடுக்கையிலே வாங்கிக் கொள்ளுந்
தேனப்பா கொட்டிதோர் விஷந்தான் சென்று
சிவசிவா பழுப்பேறித் தங்கமாச்சே
- - 138
சீனமாதி முப்பூச் சுன்னம்
அரகார ஆதி உப்புக் கிடைதான் கேளு
காச்சப்பா காசினதோர் கம்பிஉப்புங்
கருவான சீனமுடன் மூன்றுங் கேளு
பேச்சப்பா ஒன்றமில்லை யிடைசரியாகக் கொண்டு
பெருமையுள்ள சாரநீர் விட்டு ஆட்டி
மாச்சலென்று நினையாமல் கலவத்தாட்டி
மக்களே யுருட்டியதை வட்டு பண்ணே
- - 139
பண்ணினதோர் வட்டதனை ரவிமுகத்தில் மைந்தா
பாங்காகக் கனிந்திடவே காய்ந்து தானால்
புண்ணியனே மண்சீலை செய்து கொண்டு
புந்தியுடன் புடம்போடு சுன்னமாகும்
கன்னிமயேஸ்வரி தனக்குப் பூசைசெய்து
கருவான சுன்னமதில் கழஞ்சி வாங்கி
தன்னிமையாய் தாரத்துக்கங்கி பூட்டி
தயவான சாரநீர் தன்னால் தானே
- - 140
தானென்ற கவசமதை நன்றாய்ச் செய்து
தன்மையுடன் மண்சீலை யேழுஞ்செய்து
கோனென்ற குருபதத்தைத் தொண்டு பண்ணி
குணமாக ரெண்டெருவில் புடத்தைப் போடு
மாவென்ற அரிதாரங் கட்டி நல்ல
மகத்தான தன்னிறமாயிருகி நிற்குந்
தானென்ற ஆணவத்தைப் போக்கி மைந்தா
தயவான தாரமதை யெடுத்துக் கொள்ளே
- - 141
கொள்ளப்பா கட்டினதோர் தாரந் தன்னைக்
கூசாமல் ரவிமதியி லீந்தாயானால்
விள்ளக் கேளாறேழு மாற்று காணும்
விசையான தாய் சேர்க்க எட்டு மாற்று
சொல்லக்கேள் புலத்தியனே தகடாய்த் தட்டி
சொல்லடங்காப் புடந்தனிலே யிறங்குந் தங்கஞ்
செல்லப்பா சிவயோக மார்கந் தன்னில்
சிவசிவா மனதறிவால் தினமும் நோக்கே
- - 142
நோக்குவது பூரணத்தை நோக்க வேணும்
நுண்மையுள்ள குருபதத்தைப் பணிய வேணும்
நாக்குரிசை தனையகற்றிக் கனியே தின்று
நன்றாக கங்கைதனை நவமாய்க் கொள்ளு
வாக்கு மனதொன்றாகி மனதைக் காரு
மகத்தான ரேசகமும் பூரகமும் பண்ணு
தாக்குவது கும்பகத்தி லறிவை மூட்டு
தன்மையுடன் யோகமதை தாக்கிப் பாரே
- -143
பராப்பா மூலமதைப் பூசித்தாக்கால்
பராபரத்தின் செயலைக் காணலாகும்
நேரப்பா பிறப்பிறப்பு ரெண்டுங் காணும்
நீடுலகில் மகத்துவரே தெய்வமென்பார்
ஆரப்பா சொன்னாலு முலகமேயாம்
அருளான பூரணத்தை யறியா மூடர்
கூறப்பா உலகமெல்லாஞ் செனித்தவாறுங்
கூர்மையுள்ள நாதவிந்து ரெண்டுந்தானே - 144
ரெண்டான பொருளறிந்து பூசித்தோர்கள்
நிலைத்தார்கள் கோடான கோடி மட்டும்
வண்டானத்து சென்று மதுவுண்டாப் போல்
மகத்தான பூரணத்தை மருவிப் பாரு
அண்டர் கோனருள் பெருகி உலகமதில்
அஷ்டமா சித்துகளுமாடி நிற்பான்
பண்டான பரப்பிரம்மாகியேதான்
பாருலகில் குருவாகித் துலங்குவானே
- - 145
நாகரசமுப்பூச்சுன்னம்
சோதியுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
வலக்கமதாய் நாகமுடன் ரசத்தைச் சேரு
மகத்தான அடிமுடியுங் கூடச் சேரு
பழக்கமதாய் வீரமுடன் புழுகு சேரு
பங்கயமாங் கலவத்திலிட்டுக் கொண்டு
மலர்க்கமல நீராலே யரைத்தாயானால்
மைந்தனே மெழுகாகும் வட்டு பண்ணே
- - 146
பண்ணியதோர் வட்டதனைக் காயப்போட்டு
பக்குவமாய் மண்சீலை செய்துக்கொண்டு
உன்னியதோர் முழமளவு புடத்தைப் போடு
உத்தமனே புடமாறி யெடுத்துப்பாரு
வெண்மையுள்ள சுன்னமதாய் நீறி நிற்கும்
வேதாந்த ஆதினங் குருவாய் நிற்கும்
புண்ணியனே யிந்தநீறகதிகச் சுன்னம்
பூரணத்தின் செயலதனால் சுன்னமாச்சே - - 147
ஆச்சப்பா இச்சுன்னந் தாளகத்திலப்பி
அடைவாக மண்சீலை யேழுஞ்செய்து
காச்சப்பா ரவிமுகத்தி னன்றாய்க் காய்ந்தால்
கருகாமல் பத்தெருவில் புடத்தைப் போடு
மூச்சப்பா ஓடாமலுருகி நிற்கு
மூவுலகு மெச்சுமடா இந்தத் தாரம்
தாட்சியொன்று மில்லையடா ரவிமதி யிற்றாக்கி
தயவான பதினாறுமாற்றுப் பொன்னே
- - 148
பொன்னாகுஞ் செம்புதனில் பத்துக்கொன்று
பூட்டினால் வயதெட்டாய்ப் புகழ்ந்து காணும்
உண்ணான மதிதனிலே பத்துக்கொன்று
ஊட்டினால் பத்தரைதான் தப்பாதையா
கண்ணான குடவனிலே பத்துக்கொன்று காட்டினால்
ஏழரைக்கு அதிகங் காணும்
வண்ணமுள்ள மால்தேவி கூத்து மெத்த
வாக்கடங்கா மனமடங்காச் சித்துமாமே
- - 149
துரிசிமுப்பூச்சுன்னம்
சித்தமுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
பத்தான சவுக்காரஞ் சீனங் கூட்டி
பசுமையுள்ள துருசதுவுமிடையே சேர்த்து
சத்தான இணங்கனுடன் சூடன் சேர்த்து
தயவா வாய்நீரால் கலவத்தாட்டு
முத்தான மெழுகதுபோல் நிற்குமப்பா
மோசமென்று நினையாரே வட்டு பண்ணே
- - 150
பண்ணியதோர் வட்டதனைக் காயப் போட்டு
பக்குவமாய் காய்ந்தபின்பு மண்ணுஞ் சேர்த்து
தண்மையுடன் பத்தெருவில் புடத்தைப் போடு
தணலாறி யெடுத்துப்பார் சுன்னமாகும்
புண்ணியவா னானாக்கால் நன்றாய் நீறும்
புலத்தியனே யந்நீற்றைப் பதனம் பண்ணு
தண்ணியில்லாத் தளைகளிலே போட்டுப் பாரு
தயவான வாருதிபோல் செலமுமாச்சே
- - - - 151
செலமான நற்சலத்தை யொன்றில் வாங்கி
சிவப்பான தாரமதில் சுருக்குத் தாக்கு
அழலான வூறலது அற்றுப் போகும்
அதன்பிறகு சுன்னமதைக் கவசம் பண்ணு
உலகளந்த அரியுனுடதேவி தானு
முண்மையுடன் கவசமாயுகந்து நிற்பாள்
கலகமது செய்யாமல் ரவிமதியில் தாக்கு
கருணையுடன் பதினாறு மாற்றுப் பொன்னாம்
- -152
பொன்னான பொன்படைத்தால் பொன்னேயாகும்.
பொல்லாத பாவியென்றால் மண்ணாப் போகும்
கண்ணான செயலறிந்தா லெல்லாமுண்டு
கருவான குருவறிந்தா லெங்லாங் காணும்
விண்ணானபதியறிந்து அடியுங் கண்டால்
வேணவிதங் கருவாகச் செய்ய லாகும்
பெண்ணாசை கொண்டவனோடிணங்காதையா
பொருளாசை கொண்டவரைச் சினந்து தள்ளே
– 153
சினந்து மிகத்தள்ளுவது யென்ன வென்றால்
செயலிலாப் புளியுடனே யெண்ணெய் தள்ளு
உணர்ந்துவரு மீனிறைச்சிக் கஞ்சா வாகா
உணர்வழிக்குங் கள்ளு சாராய மாகா
மணங்கமழும் பூரணத்தை யன்றி யொன்று
வாய்க்கடங்கா மதம்பேசி நின்றாயானால்
இணங்குவது பூரணந்தான் கடினமாகும்
என்மகனே புலத்தியனே யிந்த நூலே
- - - 154
இந்த நூலாயிரத்து இருநூறாகும்
ஏகாந்தமான கருவதிலே தோற்றும்
அந்தமுடனாதி யென்ற பொருளே தோன்றும்
அவையடக்க மென்றதெல்லா மிதிலே தோற்றும்
சந்தயங்களென்ற தெல்லாமிதிலே தோற்றும்
விந்தையுள்ள வினோதமெல்லா மிதிலே தோற்றும்
வேடிக்கைசிமிட்டிகளு மிதிலே தோற்றும்
தந்திரங்களென்ற தெல்லா மிதிலே தோற்றும்
சாயுச்சி பதவிகளும் மிதிலே தோற்றும்
-- -- - 155
தோற்றாத கருக்கலெல்லா மிதிலே தோற்றுந்
தூபமுதல் பரிசனமு மிதிலே தோற்றும்
ஆத்துமத்தின் கருக்களெல்லா மிதிலே தோற்று
மருள்பெருக பூரணத்தினருமை தோற்றும்
பாட்டான பரிபாஷை யிதிலே தோற்றும்
பக்குவத்தின் செயல்களெல்லா மிதிலே தோற்றும்
காட்டாத கருக்களெல்லா மிதிலே தோற்றுங்
கபடமிட்டு வெகுளிதன்னில் நில்லாதையா
- - 156
ஐயனே புலத்தியனே மக்காய் நாமும்
அருள்பெருகு மாயிரத்துஇருநூறுக்குள்
மெய்யான கருக்களெல்லா மிதிலே சொன்னேன்
மேட்டியே திரியாமல் குருவைக் காரு
வையகமெல்லாந் திரிந்து அலைந்தாலுந்தான்
வாய்க்குமோ இக்கருக்கள் வாயாதப்பா
கையான கையி னெல்லிக்கனி போல் மைந்தா
கருவாக இந்தநூல் பதனம் பண்ணே
- - - 157
பதனமப்பா வெகுபதன மிந்த நூலைப்
பார்தனிலே மாந்தருக்கு ஈந்தாயானால்
விதனமப்பா சொல்லாலே யதிக சாபம்
வேண்டினா லுன்னாலே தீர்க்கமாட்டாய்
மதனமதாய் மவுனமுடனிருந்துக் கொண்டு
மகத்தான அஷ்டமா சித்துமாடு
இதமான பூரணத்தைத் தினமும் போற்று
இன்பமுட னின்னமொரு முப்பூச் சொல்வேன்
- - 158
வழலைமுப்பூச்சுன்னம்
சொல்லக்கேள் வழலை தன்னை
சுத்தகெங்கை தன்னாலே சுத்தி பண்ணி
விள்ளக்கே ளஞ்சுதரஞ் சுத்தி பண்ணி
வெண்மையென்ன சொல்வனடா வுகமை யில்லை
கல்லான வழலைதனை யெடுத்து மைந்தா
கருவாக இடைசமனாய் வீரம்பூரம்
வல்லமையாய்க் கலவமதிலிட்டு மைந்தா
வரிசையுடன் வெடியுப்பு தன்னாலாட்டே
- - - 159
ஆட்டிநன்றாய் பில்லைசெய்து வட்டுபண்ணி
அருள்பெருகு மண்சீலை யதின்மேல் செய்து
காட்டான எருவதனில் புடத்தைப் போடு
கனலாறி யெடுத்திடவே சுன்னமாகும்
தேட்டான தேட்டாகு மிந்தச்சுன்னந்
திருவான பிரிதிவியுந் தாரந்தன்னில்
பூட்டாத கவசமது நன்றாய்ச் செய்து
பொருந்தவே மண்சீலை யேழுஞ் செய்யே
- - 160
செய்ததொரு கவசமதைக் காயப் போட்டு
சிவசிவா ரெண்டெருவில் புடத்தைப் போடு
துய்யமுள்ள தாரமது கட்டி நல்ல
சோதியுள்ள அருணனைப் போலிருக்குமப்பா
பையவே கட்டியதோர் தாரந் தன்னைப்
பாச்சடா வெள்ளிதனில் பத்துக்கொன்று
அய்யனே புலத்தியனே சொல்லக்கேளு
அன்பாக பன்னிரண்டு மாற்றுமாச்சே
- - - 161
ஆச்சப்பா குடவனிலே யெட்டுமாற்று
அரகரா செம்புதனிலாறு மாற்று
பேச்சப்பா வெள்ளிசெம்பு தன்னிலீந்தால்
பிசகாது எட்டரைதான் பேணிப்பாரு
நீச்சப்பா வெகுநீச்சு தாரக்கட்டு
நேர்மை சொல்ல என்னாலே கூடாதையா
காச்சப்பா மூலமென்ற தீயில் தன்னைக்
கருணைபெற மேல்மூலச் சுடரில் நில்லே
- - - 162
சவுக்காரப்போக்கு
நில்லப்பா சவுக்காரஞ் செய்ய மார்க்கம்
நிலைபெறவே சொல்லுகிறேன் மைந்தா கேளு
வல்லதொரு குளக்கரை வாழ் பிண்டத்தானை
மகத்தான சிப்பியடா கும்பிடானை
விள்ளாமல் விள்ளுகிறோம் பூமிநாதம்
விசையான அடிமுடியும் சிப்பிப்போக்கு
சொல்லாமல் சொல்லுகிறோ மாதியந்தஞ்
சொரூபமுள்ள வஸ்துவை நீ வணங்கிப் போற்றே
- 163
வணங்குவது எப்படிதென்றால் மைந்தா
மயானமதி னிசிவேளை தன்னிற் சென்று
இணங்குவதால் ருத்திரனைப் பணிந்து போற்றி
இன்பமுடன் கைவசமே செய்து கொண்டு
குணங்களொரு மனதாக வயிரவனைப் போற்று
குணமான ஆள்வள்ளிக்கிழங்கு தன்னை
முணங்காமல் நறுக்கியதைப் பாண்டத்திட்டு
முன்னீரா லுப்பிட்டு அவித்திடாயே
- - 164
அவித்ததொரு கிழங்கதனை எடுத்து மைந்தா
அடிகனத்த வுரல்தனிலே யிட்டுக் கொண்டு
குவித்த தோரிருப்புலக்கை தன்னாற் குத்தி
குமுறவே நன்றாக யிடித்து மைந்தா
தவித்தியமாய் நினையாமல் பாண்டத்திட்டு
தயவான ரவிபீசங் கூடப் போட்டு
பவித்திரமா யைங்கோலத்தயிலம் விட்டு
பதனமாய்க் கிண்டி யுண்டை செய்யே
- - 165
செய்யப்பா வுண்டையது விளாங்காய்ப் போலே
திரமாக வுருட்டையிலே யிறுகிப் போகு
மெய்யப்பா சொல்லுகிறோம் சவுக்காரத் துண்டை
விருது பெற்ற சித்தர்கள்தான் செய்வாரப்பா
பொய்யப்பா சொன்னதினால் புலையனாவாய்
புகழான பூரணத்தைத் தினமும் நோக்கு
கையப்பா வுதவுவது போலே மக்காள்
கருவாக இன்னமொரு காரஞ் சொல்லுவேன்
- -166
சவுக்காரமிருக்கிடம்
சொல்லக்கேள் புலத்தியனே சவுக்காரந்தான்
சுயம்பாக இருக்குதடா அறிய மாட்டார்
விள்ளக்கேள் வஸ்துவாய் நின்று கொண்டு
விளக்கொளிபோல் நின்று விளையாடுதய்யா
வல்லதொரு மயேந்திரமலைச் சார்பு தன்னில்
வளர்ந்துநிற்குஞ் சவுக்காரம் புற்று போலே
சல்லாபமானதொரு சவுக்காரத்தை
தனதாகக் கொண்டு வந்து நொறுக்கிடாயே
-167
நொறுக்கியது பாண்டமதிலிட்டு மைந்தா
நுண்ணிமையாய்க் காட்டிவிட்டு முப்பூ விட்டு
குறுக்கி நன்றாய் வற்றுமட்டு மெரிப்பாயப்பா
குழம்பான பருவமதில் தயிலம் வார்த்து
கருகி மிகப் போகாமல் கிண்டுகிண்டு
கருகாத பதம்பார்த்து எடுத்துக்கொண்டு
உருக்கமுடன் குட்டோடே யுருட்டிப் போடு
வுத்தமனே யாறியப் பின்னிறுகிப் போச்சே
– 168
போச்சென்று விடுகாதே யின்ன மொன்று
புதுமையுள்ள சவுக்காரஞ் சொல்லக் கேளு
மாச்சலொன்று மில்லையடா ஆதியந்தம்
மைந்தனே சமூலமுங் கைவசமே செய்து
பேச்சொன்று சொல்லாமல் நொறுக்கிக் கொண்டு
பெரிதான பாண்டத்திலிட்டு மைந்தா
காச்சுதற்கு சுத்தசலம் நிரம்ப விட்டு
கசகாமல் கிண்டிவரில் கரைந்து போமே
- - -169
கரைந்து மிகக்குறுகி நன்றாய் கொதிக்கும்போது
கருகாத பதம்பார்த்துக் கிண்டுகிண்டு
திரைந்துமிகக் கடுகதின் மேலெண்ணெய் நிற்குஞ்
சிவசிவா வெண்ணெய்தனை வடித்துக் கொண்டு
குறைந்துநின்ற கடுகதனை யெடுத்து மைந்தா
கூசாமல் சுத்தசலம் தன்னில் வார்த்து
வரைந்து மிகக் கையாலே கரைத்து மைந்தா
வட்டோடு தனிலூற்றி ரவியில் வையே
- - 170
வையப்பா ரவிமுகத்திலுலர்ந்த பின்பு
மக்களே பின்பொருகால் சுத்தசலம் விட்டு
நையப்பா ரவிபீசங்கூடப் போட்டு
நன்றாக அடுப்பேற்றித் தீயை மூட்டு
மெய்யப்பா சொல்லுகிறேன் பதமாய்க் கிண்டி
வெந்துவரும் பதத்திலே தயிலம் வார்த்து
செய்யப்பா திரண்டுவரும் பதத்தைப்பார்த்து
சிவசிவா வுருட்டியதைத் திரமாய்த்தானே
- 171
வேறு சவுக்காரக்கட்டு
தானென்ற சவுக்கார மின்னமொன்று
தன்மையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
வானென்ற கற்சுன்னம் படிதானொன்று
வளமையுள்ள பூரணத்தின் சுன்னமொன்று
தேனென்ற விந்துப்பு சுன்னமொன்று
திருவான ரவிபீசஞ் சுன்னமொன்று
மானென்ற அருநீரில் கரைத்துக் கொண்டு
மகத்தானபாண்டத்தில்வாருவாரே
- - - 172
வார்த்ததொரு
பாண்டத்தை அடுப்பிலேற்றி
வாகாகத்
தீயெரிப்பாய் வற்றுமட்டும்
பார்த்து
மிகப் பதனமாய்க் கிண்டுகிண்டு
பாலகனே
திரண்டுவரும் பதத்தைப்பாரு
சேர்த்துமிக
ஒன்றாகத் திரட்டிக்கொண்டு
சீக்கிரத்தில்
தயிலமதில் வார்த்துக்கிண்டி
போர்த்தியே யுண்டைசெய்வாய் விளாங்காய்போல
புகழாக
இறுகியது கல்லுப்பாமே
175
சவுக்காரக்கட்டு (வேறு)
ஆமப்பா இன்னமொரு காரஞ் சொல்வேன்
கும்பிடுகற் சுண்ணத்தோடு
நாமப்பா காரமொடு சாரங் கூட்டி
நன்மையுள்ள
வீரமொடு பூரங்கூட்டி
காமப்பால் கானற்பால் தன்னாலாட்டி
கருவான அறுவகையிற் கரைத்துக் கொண்டு
வாமப்பால் பாண்டமதி லிட்டு மைந்தா
வண்மையுள்ள அடுப்பேற்றி
யெரித்திடாயே
174
எரித்துமிக வருகையிலே குழம்புபோல
இருக்குமே நன்றாகிக் கிண்டுகிண்டு
கரித்துமிக போகாமற் கிண்டும்போது
கருவான தயிலமதை அதிலேவாரு
உருத்துமிக அதில்வார்த்துப் பதத்தைப்பாரு
உருண்டுவரும் பதங்கண்டு உருட்டிக்கொண்டு
கிருத்துவங்கள்
பண்ணாமல் விளாங்காய் போலக்
கிருபையுட னுருட்டையிலே யிறுகிப்போமே
175
சவுக்காரக்கட்டு (வேறு)
போமென்று சொல்லாமலின்னமொரு
புதுமையுள்ள
சவுக்காரஞ் சொல்லக் கேளு
நாமென்ற
ஆணவத்தாற் சொன்னோமையா
நல்ல கல்லுப்புடனே கரியும் போடு
கோனென்ற வெடியுப்பு இந்துப்போடு
குருவான பூநீறு வளையலுப்பு
மானென்ற வீரமொடு பூரங்கூட்டி
மகத்தான
அறுகையால் கரைத்துப்போடே
176
கரைத்திறுத்துப் பாண்டமதிலிட்டு மைந்தா
கருத்துறவே அடுப்பேற்றித் தீயைமூட்டு
முரைத்துமிகப் பொங்கியது போகாமற்றான்
மூர்க்கமுடன் கரண்டியதாற் கிண்டுகிண்டு
உரைத்துமிகக் கிண்டுகையில் திரளுமைந்தா
உத்தமனே அப்பதத்தி லுருட்டிப்போடு
கருத்துறவே சவுக்காரமதிககாரங்
காரணத்தால் பூரணத்தைக் கருத்தில் வையே
177
கருத்து மிக வுண்டானாலெல்லாமுண்டு
கண்கெட்ட குருடரைப் போலிருந்தாயானால்
உருத்துவுடன் திடத்தினாலிராது கண்டீர்
ஊடாடும் வாசியை நீ காண மாட்டீர்
மரித்துமொரு காரணங்களாட மாட்டீர்
மகத்தான சற்குருவை யறியமாட்டீர்
சிரித்துமிகக் கொண்டதினால் வருவதேது
சிவசிவா சிவயோகத் திறத்தைப் பாரே.
178
வெண்சாரைக்கற்பம்
பாரப்பா மயேந்திரகிரி தன்னிற் சென்று
பக்குவமாய் நீயிருக்கும்போது மைந்தா
நேரப்பா வெண்சாரை அதிலே வாழும்
நிச்சயமாயச் சாரை கண்டாயானால்
கூறப்பா உம்மென்று கும்பித்தேதான்
கூர்மையுடன் பதினாறு வுருவே செய்து
காரப்பா அச்சாரை வருகும் பாரு
கண்டவுடன் நடுமையம் பிடித்திடாயே
179
பிடித்தவுடன் பொசிக்கையிலே பொருந்தியோடும்
பின்பொருக் கலதைப்பிடித்துக் கொள்ளுகொள்ளு
படித்துமிக அஞ்சுதரம் பிடித்துக் கொள்ளு
பக்குவமாய் தினந்தோறுமிப்படியே கொள்ளு
அடுத்து மிகத்தினந்தோறுங் கொண்டால் மைந்தா
அசையாது யாக்கை தனக்கழிவே யில்லை
நடுத்தினமாய்த் தினந்தோறுங் கொண்டால் மைந்தா
நலமாக அதுக்கடியிற் கனிபொன்றாமே
180
கருநெல்லிக்கற்பம்
கனியானக் கருநெல்லி யஞ்சாறுண்டு
கருவாக அவ்வனத்தில் பிரமதேவன்
தனியாகத் தவசிருப்பானவரைப் போற்றித்
தருவான ஐந்தருகற்பகமேயென்று
பனியான பொருளறிந்து பணிந்தால் மைந்தா
பாலகனே யென்றவருங் கருதானீவார்
இனியாத கசப்பென்று இருந்தால் மைந்தா
ஈடெச்சமில்லையடா ருசிபாராதே.
181
ருசியான கருநெல்லி கற்பங் கொண்டால்
நுடங்காது காயமெல்லாம் வலுத்துப் போச்சு
ரிஷியான மூலரிஷிமிது தானப்பா
நேர்மை வெண்சாரை நந்தி மூலமாகும்
உசிதமுள்ள ரிஷிமூலம் நந்திமூலம் ரெண்டு
உண்மையுடன் தினந்தோறும் பூசித்தாக்கால்
பசியான தீபனங்களில்லை மைந்தா
பராபத்தின் கிருபையுனால் பூரணத்தைப்பாரே
182
சவுக்காரக்கற்பம்
பூரணமா யின்னமொரு காரஞ் சொல்வேன்
புத்தியுள்ள புலத்தியனே புகழ்ந்து கேளு
காரணமாய் நீகேளு எட்டாந் திங்கள்
கன்னி யடிமூலமடா கருவை வாங்க
மாரணமாய் வாங்குதற்கு வகையைக் கேளு
மருவியே வெல்லமதில் ரவிபீசங் கூட்டி
வாரண மாமுக்கணனை வேண்டிக் கொண்டு
மடக்கொடிக்கு ஈந்திடுவாய் வரிசை பாரே
183
வரிசையுடன் மூன்றாநாளுப்பை வாங்கி
மகத்தான வெந்நீரிற் போட்டு மைந்தா
பரிசமுடன் மறுநாள்தானுப்பை வாங்கிப்
புண்ணியனே தண்ணீரிற் கரைத்துக் கொண்டு
பரிசான பாண்டமதிலிட்டு மைந்தா
பக்குவமாய் ரவிபீசங் காரசாரம்
உரிமையுடன் பாண்டமதிற் கரைத்து மைந்தா
உண்மையுட னடுப்பேற்றி யெரித்திடாயே
184
எரித்து மெள்ளப் பார்த்துக்கிண்டு மைந்தா
இன்பமுடன் திரண்டுவரும் பருவந்தன்னில்
குறித்ததொரு தயிலமதைவிட்டு மைந்தா
குருகவே கிண்டியதை யெடுத்துக்கொண்டு
பருத்து மிகப்போகாமலுண்டை செய்வாய்
பக்குவங்கள் தப்பிவிட்டாலுதிர்ந்து போகும்
வருத்தி மிக எரிப்பதுவுங்குறைந்துதானால்
மைந்தனே யிளகுமது வகையாய்ப் பாரே
185
பாரப்பா வெரிப்பதுவு மிஞ்சிற்றானால்
பாகதுவு முறுகியது வுதிர்ந்து போகும்
சீரப்பா வெரிப்பதுவுங் குறைந்து தானால்
சிவசிவா இளகியது போகும் போகும்
கூரப்பா தானெரித்துப் பதத்தோடப்பா
குணமாக வுருட்டி வைக்க இறுகிப்போகும்
ஆரப்பா அறிவார்களிந்தக் காரம்
அதீதமுள்ள காரமடா அருளைப் போற்றே
186
அருளான போதமெல்லா மடங்கும் வீடு
ஆயிதிரோதாயி இருந்தடங்கும் வீடு
இருளான காமியந்தானிருக்கும் வீடு
இச்சையுள்ள மாயமது இருந்த வீடு
மருளான பேய்க்கூத்து ஆடி நின்று
மாயமெல்லாங் குடியிருக்குமகத்தாய்வீடு
கருவான கருவிகளும் நிறைந்த வீடு
கருவழிந்து திகைத்து நின்ற காலன் வீடே
- - 187
வீடறிந்து பதவியுடனிருக்க மாண்பர்
வீட்டிலுள்ள பேர்களைத்தான் விரும்பா மாண்பர்
காடறிந்து நாடறிந்து கருதா மாண்பர்
கருவான பூரணத்தைக் காணாமாண்பர்
கூடறிந்து குடியிருக்க மாட்டாமாண்பர்
குருவருளைப் போற்றாத குருட்டுமாண்பர்
பாடறிந்து பயனறிந்துக் கொள்ளாமாண்பர்
பாவிகள்தான் மெத்தவுண்டு பார்த்திடாயே
- -188
கல்லுப்புக்கட்டு
பார்த்து மிகப்பணிய வேணும்
பணிந்து மிகநில்லாட்டால் பண்பாய் தானுங்
கூற்றுவனுக் கிரையாகப் போவாய் மைந்தா
கூறுடனே கூற்றுவன் தானாரென்றாக்கால்
நாற்றிசையுந் திரிந்தலைந்து பொருள்கள் தேடும்
நன்மையில்லா திரோதாயி நன்மையப்பா
பூத்தமலர் வாசனைதான் கல்லுப்பாகும்
பூமிவளர் பூவதுதா னாதமாச்சே
- - - 189
ஆச்சப்பா பிரிதிவியி னாதத்தாலே
அடங்காத கல்லுப்பு கட்டிப் போச்சு
மாச்சலது இல்லாமல் கட்டிச் சென்று
மகிழாமலந்திடைக்குக் காரசாரம்
பாச்சுவாய் சீனமுடன் துருசு கூட்டி
பதறாமல் வீரமுடன் பூரஞ் சேர்த்து
தாட்சியொன்றுமில்லாம லொன்றாய்ச் சேர்த்து
தவிராமல் முன்னீரில் கரைத்துக்கொள்ளே
- -- 190
கொள்ளப்பா பாண்டமதிலிட்டு மைந்தா
குருபரனைத் தொழுதிறஞ்சி அடுப்பிலேற்றி
அல்லப்பா சொல்லுகிறேன் தீயை மூட்டி
அடித்தூரில் பற்றாது கிண்டுகிண்டு
வல்லமையாய் கிண்டிவரும் போதிலேதான்
வைத்துமிகக் குழம்பான பருவந்தன்னில்
சொல்லக் கேளேரண்டத்தெண்ணெய்விட்டு
சுருதியுடன் கிண்டினாக்கால் திரளும்பாரே 191
பாரப்பா திரண்டுவரும் பருவந்தன்னில்
பதறாமல் விளாங்காய் போலுண்டை செய்து
பேரப்பா சவுக்காரமென்று சொல்லி
பிசகாமலுண்டை தன்னைப் பதனம் பண்ணி
நீரப்பா நின்றதொரு குருவைப் போற்றி
நிச்சயமாய் சவுக்காரவுண்டை தன்னை
வீரப்பா போவதற்கு சுத்தி கேளு
விசையான காரமுடன் சாரஞ் சேரே 192
சேர்த்துமிக ரவியில் வைக்க ஜெயநீராகுஞ்
சிவசிவா அந்நீரில்வீரம்பூரம்
பார்த்துமிகச் சேர்த்திடவே செயநீர் காணும்
பக்குவமாய் குருநீர் போல் பசுமையாகும்
வேற்று மைகளில்லாத சவுக்காரத்தை
வெகுளாமல் செயநீரில் தேய்த்துப்போடு
மாற்றுமடா எண்ணெயெல்லாம் வழிந்து போகு
மகத்தான காரமது சுத்தியாச்சே
- - - 193
ஆச்சப்பா சுத்திசெய்த காரமொன்று
அந்திடைக்கு வீரமொன்று பூரமொன்று
பேச்சப்பா ஒன்றுமில்லை கலவத்தாட்டு
பிசகாமல் லீராறு சாமமாட்டு
பாச்சப்பா ரவிமுகத்தில் வட்டு பண்ணி
பக்குவமாய்க் காய்ந்தபின்பு மண்ணுஞ்செய்து
காச்சப்பா காட்டெருவில் புடத்தைப்போடு
கருணையுள்ள சுன்னமதாய் நீறிப்போமே
- 194
தாரக்கட்டு
போமப்பா தரித்திரிய மெங்கே போச்சு
புதுமையுள்ள சுன்னமதை வாய்நீராலே
நாமப்பா சொல்லுகிறோங் குழைத்துக்கொண்டு
நன்மையுள்ள தாரத்துக் கங்கிபூட்டி
தாமப்பா மண்சீலை யேழுஞ்செய்து
தவிராமல் ரெண்டெருவிற் புடத்தைப்போடு
ஓமப்பா தாரமது வுருக்கிக் கொண்டு
முத்தமனே அருணனைப் போலிருக்கும் பாரே
- - 195
பராப்பா சிவந்ததொரு காரந்தன்னை
பாச்சடா வெள்ளியிலே பத்துக்கொன்று
சேரப்பா வெள்ளியது பழுக்கும் பத்தாய்
சிவசிவா தாய்சேர்த்து தகடு தட்டி
காரப்பா புடம்போடு மூன்று திரமையா
கருணைபெறப் பதினாறு மாற்றுப் பொன்னாம்
வீரப்பா அகற்றியதோர் செம்புதன்னில்
விசையாக பத்துக்கு ஒன்று போடே
- - - 196
போட்ட செம்பு எடுத்திடவே ஆறு மாற்றாய்
புனிதமுடனிருக்குமடா அப்பா கேளு
தாட்டிகமாய் தாய் சேர்த்து தகடுதட்டி
தன்மையுடன் மூன்றுபுடம் போட்டாயானால்
நாட்டதனில் விலையாகும் பத்து மாற்றாய்
நன்மையுட னின்னமொன்று நவிலக்கேளு
கூட்டான குடவனைத்தான் சுத்தி பண்ணி
கொடுத்திடு வாயெட்டில் ரெண்டு வெள்ளிதானே
- 197
தானென்ற குடவனிலே வெள்ளிசேர்த்து
தன்மையுடன் பதினாறுக் கொன்றேயீந்தால்
தேனென்ற வயதுதானெட்டு மாற்றாய்
தீர்க்கமாய் நிற்குமடா தாயைச்சேர்த்து
மானென்ற தகடுதட்டிப் புடத்தைப் போடு
மைந்தனே வயது பனிரெண்டு மாற்றே
கோனென்ற திருவருளை வணங்கிப் போற்றி
குருவான பதியறிந்து அமுதங்கொள்ளே
- - - 198
அமுதமென்ற நாதமடா வாயுவாச்சு
அப்பனே சுக்கிலமோ விந்துவிந்து
குமுதமுடன் ரெண்டல்லோவொன்றாய் சேர்ந்தால்
குருவான பதிகாட்டும் வாசியாச்சு
உமிருகிற வாசியது எங்கேயென்றரல்
உத்தமனே யடியான மூலமாச்சு
நிமிர்ந்து கொண்டு மூலத்தை கண்ணாற்பாரு
நேரான சூரியன்போல் வட்டமாச்சே
- - 199
அட்டமாசித்திகளுமதிலுண்டாச்சு
அருள்பெருகும் போதமே யதிலுண்டாச்சு
நிஷ்டையொடு சமாதிகளு மதிலுண்டாச்சு
சொல்லவொண்ணா வசியமெல்லா மதிலுண்டாச்சு
கட்டாத சரக்கெல்லாமிதிலே கட்டுங்
கவனமென்ற குளிகையுமே யிதிலுண்டாமே
- 200.
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 201 - 250