அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
- திருக்குறள்.
பலா மரக் காளான் |
பிணி அக்கரம்
அக்கரம் என்னும் பிணி பலவிதப்படும் என்றாலும் பொது குணமாக வயிற்றில் புண்ணாதல், உதடு வாய் நாக்கில் புண்ணாதல், சுரம், சிறு கொப்புளங்கள், காய்ச்சல் போன்றவை இருந்தாலும் கழிச்சல், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் போன்ற கடினமான அறிகுறிகளும் காணப்படும். குழந்தைகளுக்கு அதிகமாய்க் காணப்படும். சிறு குழந்தைகள் முலையுண்ணாது அவதிப்படும்.
மருந்து பிலாக் காளான் மருந்து
பிலா (பலா) மரத்தின் மீது வளரும் காளான் எடுத்து வந்து, ஒரு ஆழாக்கு (168 மிலி) இளவெந்நீர் ஊற்றி அரைத்து உள்ளுக்குக் குடுக்க ஆரம்ப கட்ட பிணி குணமாகும். கவனமாகச் செய்ய வேண்டும்.
இதே மருந்தை தேள் கொட்டிய வலிக்கும் தடவ வலி குணமாகும்.
- வைத்தியத் திரட்டு சரஸ்வதி நூலகம்.
- படம் காணப்பட்டது - தமிழ் புலிகள் you tube channel.
சித்தம்.
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி