அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 001 - 100
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 101 - 200
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 201 - 250
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 251 - 300
காரீயக்கட்டு
புதுமையுடன் புடம்போடச் சுன்னமாகும்
தேட்டான சுன்னமது
பதனம் பண்ணி
சிவப்பான கெவுரிதனக் கங்கி பூ ட்டி
மாட்டடா மண்சீலை
யேழுஞ் செய்து
மண்மறைவில் புடம்போட்டு வாங்கிக் கொண்டு
காட்டடா காரீயத்துள்ளே
மைந்தா
கருவான காரீயங் கட்டுந் தானே
- - 300
தானென்ற காரீயக் கட்டைத் தானுந்
தண்மையென்ற காரமதா லுருக்கிக்கொண்டு
தேனென் பரிதனிலே யிடைக்கிடை தான் சேர்த்து
தெளிவான செம்புதனில் நூற்றுக் கொன்று
கோனென்ற குருவருளால் கொடுத்தால் மைந்தா
குறையாது ஒன்பதரை குணமோ மெத்த
தேனென்ற பூரணத்தின் செயல் தன்னாலே
திரமாக இன்னமொரு கருவைக் கேளு - -301
சாதிலிங்கக்கட்டு
கிருபையுள்ள சாதிலிங்கங் கழஞ்சி வாங்கி
நீளப்பா வாய்நீரால் குருவை மத்தி
நிச்சயமாய் வீரமுடன் பூரஞ் சேர்த்து
கோளப்பா வாராமல் லிங்கத்துக்கு
குணமாகக் கவசமது நன்றாய்ச் செய்து
வாளப்பா மண்சீலை யேழுஞ் செய்து
மண் மறைவிற் புடம்போட வலியுந்தானே - - 302
சாதிலிங்கக்களங்கு
தன்மையுடன் மூன்று புடமிப்படியே செய்து
வீணேதான் திரியாமல் மைந்தா கேளு
விளங்கி நின்ற சாதிலிங்கந்தனை வாங்கி
பேணேநீ ரசிதமென்ற தங்கந் தன்னைப்
பிலமாகச் சுற்றி முன் பின் குருவைப் பூசி
தோணவே மண்சீலை செய்துக் கொண்டு
சுகமாகப் புடம் போடக் களங்கமாச்சே - - 303
ஆச்சப்பா சாதிலிங்கக் களங்கதனை வாங்கி
அருள்பெருகுஞ் சற்குருவி னருளைப் போற்றி
கூச்சமிலாச் செம்புதனில் நூற்றுக் கொன்று
குருவான களங்கமதை யீந்தாயானால்
தாட்சியில்லா பதினாறு மாற்று காணுந்
தடையறவே வெள்ளியிலே யீந்தாயானால் மைந்தா
மாச்சலிலா முப்பத்திரண்டு மாற்று
மகத்தான குடவனுக்கு ஈந்துபாரே - - 304
பாரப்பா குடவனிலே முந்நூற்றுக் கொன்று
பக்குவமாய்க் கொடுத்துருக்க மாற்றெட்டடாகும்
காரப்பா வெள்ளி செம்பு கணக்காய் சேர்த்து
கருவான களங்கமதை நூற்றுக் கொன்று
சேரப்பா குடவனிலே யுருக்கிப் பாரு
சிவசிவா ஈரஞ்சு மாற்றே காணும்
ஆரப்பா அறிவார்கள் வன்னி கெற்பம்
அடக்கத்தி லாடுகின்ற அருமை தானே 305
காரீயபற்பம்
தானென்ற வுப்புடனே காரஞ் சேர்த்து
சம்பழத்தின் சாற்றினால் தாக்கி யாட்டி
வீணென்ற காரியத்துக் கங்கி பூட்டி
வீறடங்கச் சீலைமண் விகையாகச் செய்து
கானென்ற காட்டெருவில் புடத்தைப் போடு
கனல் மீறி காரீயம் பற்பமாகும்
தேனென்ற பற்பமதைப் பதனம் பண்ணி
சிவசிவா முப்புபூவுங் கூடச்சேரே -
- 306
சேரப்பா வீரமுடன்பூரஞ் சேர்த்து
சிவசிவா சம்பழத்தின் சாற்றாலாட்டி
வீரப்பா கொண்டு நின்ற பாஷாணந்தான்
வீறடங்கக் கவசமதை விஞ்சை யாக்கி
பாரப்பா மண்சீலை யேழுஞ் செய்து
பக்குவமாய் மூன்று புட மண்மறைவிற் போடு
சீரப்பா மூன்று புடம் போட்ட பின்பு
சிக்கெனவே காடையொரு புடத்தைப் போடே - 307
பாஷாணபற்பம்
புதுமையுள்ள பாஷாணம் நீறாப்ப(?) போகும்
நாடப்பா பாஷாண நீற்றில் மைந்தா
நாமென்று சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு
தேடப்பா வெள்ளீயம் உருக்கிக் கொண்டு சேர்
தகிடுவாய் பற்பமதை நூற்றுக் கொன்று
பாடப்பா வொன்றுமில்லை வெள்ளீயந்தான்
பதையாமல மாண்டதுவுந் தெறித்துப் போமே
- 308
போமப்பா தெறித்து நின்ற வெள்ளீயத்தைப்
புகழ்பெருகு மதி தனிலே யிடைதான் சேர்த்து
நாமப்பா குகைதனிலே யுருக்கிப் பாரு
நலமான சாரை ரெண்டு மொன்றாய்ச் சேர்த்து
வாமப்பா தன்னருளால் குருவாய்ப் போகு
மகத்தான குருவினுட வகையைக் கேளு
தாமப்பா பூரமென்ற தாம்பிரத்தைத்
தன்மையுடன் குகைதனிலே யுருக்கிப்பாரே - - 309
உருகியதோர் பூரமதில் நூற்றுக் கொன்று
உத்தமனே கொடுத்துருக்க மாற்று பத்தாம்
கருக்கனென்ற வெள்ளியிலே ஐந்நூற்றுக் கொன்று
கருவாகக் கொடுத்துருக்க அதிக மாற்றாந்
திருக்கான பாஷாணப் போக்கு
தன்னை சிவசிவாவென்ன சொல்வே னின்னங்கேளு
குருக்கான வழியொன்று சொல்வேன் மைந்தா
குருவின் முப்பூவின் குருவை வாங்கே
- - 310
பாஷாணக்கட்டு
வரிசையால் துரிசினுடைய சுன்னஞ் சேர்த்து
பாங்குபெறக் கலவமதி லிட்டு மைந்தா
பழச்சாற்றா லரைத்தெடுத்துப் பருவமாக
தீங்கில்லா பாஷாணந் தனக்கு மைந்தா
திருக்கறவே கவசமது திறமாய்ச் செய்து
காங்கை யதிலேறுதற்கு மண்மறைவில் மைந்தா
கருத்துற்றே புடம்போடக் கட்டுமபாரே
- - 311
பாரப்பா இப்படியே மூன்று புடம் போடு
பக்குவமாய்க் கருக்குடத்தி லுருகும் பாரு
காரப்பா உருகிநின்ற பாஷாணந் தன்னை
கருத்துறவே தானெடுத்துக் கருக்கக் கேளே
சாரப்பா வெள்ளிவங்கமுருகும் போது
சாற்றடா இடைக்கிடைதான் பாஷாணஞ் சேர்த்து
வீரப்பா செய்யாம லுருகிப் பாரு
வெள்ளீயக் கட்டியது வுடையும் பாரே -
- 312
வெள்ளீயபற்பம்
உண்மையுட னிடைக்கிடைதான் வெள்ளி சேர்த்து
கடைந்ததொரு குகைதனிலே யுருக்கிப் பாரு
கமலமென்ற வெள்ளியது நொருக்குமப்பா
அடைந்ததொரு கலவமதிலிட்டு மைந்தா
அரகரா இடைக்கிடைதான் ரசத்தைச் சேர்த்து
ஜெடம் வலுத்த செயநீராலரைத்து மைந்தா
சிவசிவா வுருட்டியதை வட்டு பண்ணே - 313
பண்ணியதோர் வட்டதனை யோட்டில் வைத்து
பக்குவமாய் மண்சீலை யேழுஞ் செய்து
புண்ணியமா யெருவடக்கிப் புடத்தைப் போடு
புதுமையுள்ள ஈசானம் பூசை பண்ணு
தண்ணிமையாய் புடமாறி எடுத்துப் பாரு
தயவான பற்பமாய் நீறி நிற்கும்
வெண்மையென்ற குருநீற்றைப் பதனம் பண்ணு
வேகமுள்ள வன்னிகற்பமிதுதான் பாரே - 314
வன்னிகற்பம்
பாச்சடா வெள்ளிசெம்பில் நூற்றுக் கொன்று
சேரடா கற்பமது தங்கிற்றானால்
சிவசிவா சோதியுட திரமோ மெத்த
ஆரடா அறிவார்கள் வன்னி கற்பம்
அறிந்தவனே சிவயோகி அதுதான் மைந்தா
கூரடா குருபதத்தைத் தொண்டு பண்ணி
குருவிருக்குஞ் சந்நிதியைக் குறித்துப் போற்றே
- 315
போற்றுவது பூரணத்தைப் போற்ற வேணும்
புதுமையுள்ள குருபதத்தைப் பணிய வேணும்
நாட்டுவது சுழிமுனையில் மனத்தை நாட்டி
நாலான பூரணத்தை நாட்டிப் பாரு
தாட்டிகமாய் மனதுறுதியாக நின்றால்
சடாதாரக் கோவை மிகத்தானே தோற்றும்
ஆட்டிவிக்கும் வாசியுட கருவைக் கண்டால்
ஆதியந்தப் பதிதோற்று மாதிதானே 316
ஆதியென்ற சோதிதனைக் கண்டால் மைந்தா
அரகரா மனோன்மணியை யற்புதமே செய்து
நீதியென்ற ரவிதனிலே சேர்ந்தால் மைந்தா
நிச்சயமாய் சித்தியதாம் நீதான் பாரு
சோதியென்ற தொடுகுறியை யென்ன சொல்வேன்
துருவமுள்ள மேருவதில் ரவிமதிதான் சேரு
வாதியென்ற மனமொத்து நிலையில் வைத்தால்
மகத்தான குருவருளால் மைந்தா பாரே - - 317
பாஷாணக்கட்டுருக்கு
பாச்சடா வெள்ளையென்ற பாஷாணத்தில்
காமப்பா பஞ்சகண தீட்சை பண்ணு
கருவான பாஷாணக் கட்டிதானும்
நேரப்பா நின்றகுரு சூட்சத்தாலே
நிச்சயமாய்க் கட்டியது வுருகும் பாரே
ஆரப்பா அறிவார்க ளிந்தப் போக்கு
ஆச்சரியமாச்சரிய மருளைக் கேளே - - 318
கேளடா கட்டிநின்ற பாஷாணத்தைக்
கிருபையுள்ள செம்பதனில் நூற்றுக் கொன்று
வாளடா கைதனிலே யுருகும் போது
மாட்டடா மதிபோலே யாகுஞ் செம்பு
கோளடா வாராமல் தாயைச் சேரு
குணமான வங்கத்துக் கசையா தப்பா
ஆளடா கயிலாசத் தடுத்து மெள்ள
ஆதியென்ற பராபரத்தினடியைப் போற்றே - 319
அடியென்ற அட்சரத்தை யார்தான் காண்பார்
அப்பனே அகாரமென்ற அருளைக் காணார்
முடியென்ற மவுனமதில் முதலைக் காணார்
முதலறிந்து தினம் பணிய முடியைக் காணார்
படியான படியறிந்து ஏறமாட்டார்
பரவிகள்தான் வெறும்பிலுக்காய்ப் பகருவார்கள்
வடியான ரூபமதையறிந்தால் மைந்தா
வஞ்சமற வுலகமதில் வாழலாமே - - 320
வாழவே மதியமுதங் கொண்டோ மென்று
மகத்தான பூரணத்தை யறிவோமென்று
ஆளவே அடிநாவைக் கண்டோ மென்று
அப்பாலே மவுனமதை யறிந்தோ மென்று
வேலான வடிவேலை யறிந்தோ மென்று
வேதாந்த பூரணத்தைக் கண்டோ மென்று
மாளவே அமுதமென்றுங் கபாலத் தூரில்
மகத்தான சேத்துமத்தைக் கொள்வான் பாரே - 321
அமிர்தசஞ்சீவி
புலத்தியனே பண்பாய்க் கேளு
காரப்பா பிருதிவியாம் பூமிநாதங்
கருவான மனோன்மணியாங் கருணைப் பூடு
ஆரப்பா அறிவார்கள் சுவையின் பாகம்
அருளான திருவுமையா ளணிந்த காரம்
வீரப்பா செய்தோரைஅடக்குங்காரம்
வேதாந்த மனோன்மணியை விளக்குந்தானே
- 322
தானென்ற தன்மையதில் பொருந்தி நின்ற
தயவாகப் பாரீன்ற நாதம் வாங்கிக்
குருவருளால் தண்ணீர் தன்னில்
குருவான நாதமதைக் கரைத்திறுத்து
பானென்ற பானுவின்றன் முகத்தில் மைந்தா
பாங்காக வைத்துலர்த்தி பதனமாக
ஊனென்ற அமுதமதில் பத்து முறையப்பா
வுற்பனமா யஞ்சுபத்து முறை செய்யே - -323
செய்யவே பூமியுட நாதந்தானுஞ்
சிவசிவா என்ன சொல்வே னமுதப் போக்கு
மெய்யான சத்திசிவ மிரண்டு மொன்றாய்
விரவி நின்ற கருவதனை விள்ளலாமோ
ஐயனே யுனக்காகச் சொன்னோ மைந்தா
அறுசுவையின் பாகமதை யார்தான் காண்பார்
வையமதிற் கோடியிலே யொருவனுண்டு
மகத்தான பூரணத்தின் வளங்காண பாரே
- 324
பாரினிற் பிருதிவியு மப்புங் கூடி
பதியான தேயுவிலே சமாதி கொண்டு
வாரீன்ற வாயுவு மாகாசங் கூடி
மகிழ்ந்து நின்ற அமுத சஞ்சீவி தன்னை
ஆரின்று ஆறரிவா ரமுதப் போக்கு
அரகரா அமுத சஞ்சீவி தன்னில்
நேரின்று குன்றியிடை கொண்டால் மைந்தா
நிச்சயமா யாக்கையது சித்தியாமே - 325
பொரிகார கற்பம்
சிவசிவா பொரிகாரங் கொண்டு வந்து
முத்திபெற ஆவினுட நெய்யில் மைந்தா
மூர்க்கமுடன்தான் பொரித்துக் கொண்டால் மைந்தா
அத்திதனிறுள்ள விஷபித்த மெல்லா
மகன்று விடுந் தேகமதி லழகுண்டாகும்
வெற்றி பெறக்காய சித்துக் கிதுதான் மூலம்
விள்ளுவே னின்ன மொரு சித்து கேளே - 326
நந்தியுப்பு
கிருபையுள்ள ஜலம தொன்று சாரத் தூட்டி
வாளப்பா தசதீட்சை பத்து முறையப்பா
வளமை பெறச் செய்து கொண்டு மைந்தா கேளு
கேளப்பா வாராமல் சொல்லக் கேளு
குருவான ரவிபீசங் கூடச் சேர்த்து
நீளப்பா தனில்கரைத்து ரவியில் வைத்தால்
நிசமான நந்தி யென்ற வுப்பதாச்சே -
- 327
உப்பான நந்தியுப்பைப் பதனம் பண்ணி
யுண்மையுள்ள மந்திரத்தைத் தியானஞ் செய்து
அப்பான தினங் கழஞ்சி கொண்டாயானால்
ஆக்கை தனிலுள்ள வுப்பு அகன்று போகுந்
தப்பாமல் தினந்தோறுங் கொண்டு யேறு
சதா னந்தி யுப்பினுடத் தன்மை மெத்த
செப்பாதே கரு விதுதான் மைந்தா மைந்தா
செகத்தோர்க்கு விள்ளாதே சித்தர்க்காமே - 328
ஆமப்பா நந்தியுட மூலாதாரம்
அழகான பிருதிவியி னருமை மெத்த
நாமப்பா சொல்லுகிறோஞ் சுத்த கங்கை
நலமறியா சித்தர்களோ காணப் போறார்
காமப்பால் கானற்பால் கருவைக் காணார்
கருவறிந்து வுறுதி பெற்றால் காய சித்தி
தாமப்பா யென்ற நிலைதனை யறிந்து
தவிராமல் ரெண்டு மொன்றாய் தாக்குத் தாக்கே - 329
உப்புமெழுகு
தவிராம லந்திடைக்குக் கெந்தி சேர்த்து
வாக்கியந்தான் தப்பாம லொன்றாய்ச் சேர்த்து
வைத்திடுவாய் ரவிமுகத்தில் மைந்தா மைந்தா
பாக்கியமா யுப்பாகி மெழுகாய் நிற்கும்
பரம குரு மெழுகது வைப்பதனம் பண்ணி
ஆக்கையுட திட மறிந்து அளவாய்க் கொள்ளு
அரகரா ரசிதமென்ற புளிப்பு போச்சே - 330
ரஞ்சித மெழுகு
புதுமையுள்ள அட்டுப்பு நீரில் சேர்த்து
காச்சென்று வீரமொடுபூரம் லிங்கங்
கருணைபெற வொன்றாகச் சேர்த்துக் கொண்டு
மாச்சலில்லா ரவிமுகத்தில் காய வைப்பாய்
மகத்தான மெழுகாகு மைந்தா மைந்தா
தாட்சியில்லா மெழுகினுட பேரேதென்றால்
ரஞ்சித மெழுகெனவே சாற்றலாமே - 330
சாற்றியதோர் மெழுகதனை மைந்தா மைந்தா
சடத்தினுட செயலறிந்து தாயைப் போற்றி
ஊட்டுவாய் கழஞ்சியிடை யூட்டிக் கொண்டு
வுறுதி பெறப் பருதிமதிச் சுடரில் நில்லு
தாட்டிகமாய் வாசியது பணிந்து மைந்தா
தன்னிலையைத் தானறிந்து தனதாய் நிற்கும்
பூட்டியதோர் வாசியுட கருவைக் கண்டால்
பூரணத்தை யனுதினமும் போற்றலாமே 332
ஆமப்பா வாசி சிரோமணியைக் கேளு
அரகரா மனோன்மணியை யன்பிற் கண்டு
காமப்பால் தன்னுடனே கரைத்திறுத்து
கருவான பூரமுடன்காரஞ் சேர்த்து
நாமப்பா சொல்லுகிறோங் கருவாய்க் கேளு
ஞாயிறு முன் பத்துநாள் வைத்துப் பாரு
சோமப்பாலென் சொல்வேன் மெழுகதாகுஞ்
சுருதியுள்ள மெழுகதனைப் பதனம் பண்ணே - 333
பண்ணியதோர் மெழுகெடுத்து தியானஞ் செய்து
பக்குவமாய்க் கழஞ்சியிடை கொண்டா யானால்
கண்ணிமையில் நின்றதொரு தோஷமெல்லாங்
காணாதே யோடிவிடுஞ் சிரோமணியைக் கண்டால்
புண்ணியவா னானாக்கால் க்ஷணத்தில் சித்தி
பூரணத்தைக் காணார்க்குச் சித்தியில்லை
வன்னியென்ற சிரோமணியின் மெழுகதினாலே
மகத்தான சித்தியெல்லாம் வாய்க்குந்தானே
- 334
சதாசிவுப்பின் மெழுகு
சகலபிணி போவதற்குச் சதாசிவத்தினுப்பு
கோனருளால் கொண்டு வந்து அறுநீர் தன்னில்
குறிப்பாகச் சுத்திசெய்து எடுத்துக்கொண்டு
கானற்பால் காமப்பால் தன்னிலே தான்
களங்கமறப் பத்து விசை சுத்தி செய்து
வீமப்பா என்று நீ நினைத்தால் மைந்தா
வேதாந்தஞ் சிதறி விடு மெய் சொன்னேனே - 335
மெய்யாக சுத்தி செய்த வுப்பை வாங்கி
மேனியுட சாறதனிலரைக்க மைந்தா
ஐயாமிலா மெழுகாகுமென்ன சொல்வேன்
னப்பனே யிம்மெழுகைத் தேனிலூட்டி
துய்ய மதியான சதாசிவனைப் போற்றி
தொழுது கொண்டு கழஞ்சியிடை கொண்டால் மைந்தா
வையமதில் கலங்குகின்ற ஐயந்தானு மாறி
விடுஞ் சிலேத்துமங்கள் மாண்டு விடுமே - 336
போமப்பா தசையிலுள்ள தோஷமெல்லாம்
பொல்லாத அஸ்திசுர மூலச்சூடு
காமப்பா விதனததால் வந்த சூடு
கருவழிக்கு மேகமொடு கபாலசூடு
தாமப்பா சருவாங்கவாயு வெல்லாந்
தட்டழிந்து குட்டமெல்லாஞ் சாந்தமாகும்
நாமப்பா சொல்லி வந்த கற்பமெல்லாம்
நாள்தோறுங் கொண்டு வரில் நமனாடானே - - 337
நாடாமல் போவதுதா மெதினாலென்றால்
நகாரமொடு மகாரத்தை நயந்ததாலே
தேடாம லோடி விட்டானமன் தானையா
சிவசிவா நமனென்றால் வேறேயில்லை
வாடா தச நல்வினையுந் தீவினையு மப்பா
வஞ்சமுள்ள நமனெனவே மகிழ்ந்து காணும்
ஊடாடு ரவிதானு மதியில் சேர்ந்தால்
ஓகோகோ இருவினையு மோடிப் போமே - 338
ஓடிப்போம் சகல பிணி யெல்லா மைந்தா
வுறுதியுள்ள சாபமது நிவர்த்தியாக
நாடிப்பார் சாபமது நிவர்த்தியாகும்
நானொன்று சொல்லுகிறே னன்றாய்க் கேளு
சாடிப்பார் பூரணத்தைப் பூரகமே பண்ணி
சமயமதில் ரேசகமாய்க் கும்பததில் நின்று
பாடிப்பார் நம்முடைய மந்திரத்தை மைந்தா
பாவமென்ற சாபமது பறந்து போமே
- 339
நவகிரக சாப நிவர்த்தி
பொல்லாத நவக்கிரக சாபந்தீர
நாமொன்று சொல்லுகிறோ மைந்தா மைந்தா
நாலான பூரணத்தை நாட்டிப் பார்த்து
ஓமென்று பூசித்து ரேசகமே பண்ணி
ஒருமொழியால் கும்பகத்தில் நின்றால் மைந்தா
ஆமென்ற நவக்கிரக சாபமெல்லாம்
அப்போதே அகன்று விடு மறிந்து பாரே - 340
பிரமசாப நிவர்த்தி
பக்குவமாய் தீர்வதற்கு பகறுவேன் கேள்
காரப்பா கருணை வைத்து அகாரந் தன்னி
கருவான மகாரத்தின் கூடச் சேர்த்து
சேரப்பா ரேசகத்தால் பூரகத்தைப் பற்றி
சீர் பெருகுங் கும்பகத்தில் நின்றால் மைந்தா
நேரப்பா நின்றதொரு பிரமன் சாபம்
நிமிஷத்தி லோடிவிடு நிலைமைதானே - - 341
விஷ்ணு சாப நிவர்த்தி
தானவனாய் நின்ற தொரு விஷ்ணு சாபந்
தடையறவே போவதற்குச் சாற்றுவேன் கேள்
மோனமுடன் உகாரமதை அகாரத் தூட்டி
முனையான சுழிமுனையில் ரேசித்தப்பா
கோனருளால் குருபதத்தில் நின்றால் மைந்தா
குணமான விஷ்ணுவுட சாபந்தானும்
வானவர் கோனறியாத பூரணத்தினாலே
வஞ்சமுள்ள சாபமது மாண்டு போச்சே - 342
ருத்திர சாப நிவர்த்தி
புதுமையுள்ள ருத்திரன் மயேஸ்பரத்தின் சாபங்
காச்சென்ற ரவிமதியு மொன்றாய்ச் சேர்த்து
கருணையுள்ள சதாசிவத்தைக் கருத்தில் வைத்து
தாட்சியில்லா மதிதனிலே பூசித்தப்பா
தருவான ரேசகத்தால் கும்பகத்தில் நின்று
மாச்சலில்லா மனோன்மணியைத் தியானித்தாக்கால்
லஞ்சமுள்ள பஞ்சகர்த்தாள் சாபம் போச்சே
ஆறாதார சாப நிவர்த்தி
தன்மையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
தீபமென்ற சுடரொளியில் மனத்ததை யோட்டி
தீர்க்கமடன் ரேசக பூரகமும் பண்ணி
வாமென்ற மதியமுதங் கொண்டால் மைந்தா
வரையான சடாதார சாபந் தானுந்
காபமுடன் தயங்கி மிக வோடிப் போகுஞ்
சடாதார ஏணி வைத்த தன்மைதானே - -344
தத்துவ சாப நிவர்த்தி
தன்மையுடன் சொல்லுகிறேன் தாழ்ந்து கேளு
கோனென்ற சிவசத்தி தன்னைப் போற்றி
குறிப்பாக ரேசக பூரகமும் பண்ணி
மானென்ற கும்பகத்தில் நின்றால் மைந்தா
மார்க்கமுள்ள மூலத்தின் மேலே சாடி
ஊனென்ற தத்துவத்தின் சாபம் போகும்
உறுதியுள்ள தேகமது காந்தியாச்சே
- - 345
காந்திக் கருச்சுன்னம்
கமல மலரமுதமதைக் கருவாய் வாங்கி
சாந்தியென்ற மதியமுதந் தன்னிற் சேர்த்து
தயவாக பத்துமுறை தானே செய்து
பாந்தியமாய் பத்துமுறை செய்த பின்பு
பக்குவமாய் பூரமதிற் பாதி சேர்த்து
சீந்தியென்ற தயிலமதை சேர்த்தால் மைந்தா
சிவசிவா பொங்கியது கறுப்பாய்ப் போச்சே
- - 346
கறுப்பான மையெடுத்து தியானஞ் செய்து
காயாதி கற்பமெனக் கருத்திற் கொண்டு
குறிப்பான மையெனவே கொண்டால் மைந்தா
குண்டலியின் சத்தியது மேலே சாடி
வெறுப்பான சாபமெல்லாம் வெருண்டேபோகு
மெய்ஞானஞ் சித்திக்குந் தேகந் தங்க
முறுப்பான தேகமது வலுத்துப் போகு
முற்ற சிவசற்றி ரெண்டு முறுதியாமே - 347
ஆமப்பா வச்சிரமே பலமோ பத்து
அதுக்கு நிகர் வீரமது அன்பாய் சேர்த்து
நாமப்பா சொல்லுகிறோந் துருசு பூரம்
நன்றான வெள்ளையுடன் லிங்கஞ் சேர்த்து
தாமப்பா சாரமுடன் காரஞ் சேர்த்து
தயவான அறுவகையால் கலவத்தாட்டி
காமப்பால் தன்னி லொருநாள் தானாட்டி
கருவாக வுருட்டியதை வட்டு பண்ணே - 348
பண்ணியதோர் வட்டதனைப் பதனம் பண்ணி
பக்குவமாயின்னமொன்று பகறுவேன் கேள்
உன்னியதோர் நாகமுடன் ரசமுஞ் சேர்த்து
உண்மையுள்ள பூரம்முங் கூடச்சேர்த்து
நன்னயமாய் ரசமூன்று இடைசரியாய் சேர்த்து
நாட்டியே கலவமதில் பொடித்து மைந்தா
தன்னிமையாய் முன்செய்த வட்டு சேர்த்து
தயவாக விந்துநீர் தன்னாலாட்டே - 349
ஆட்டுவாய் விந்துநீர் தன்னால் மைந்தா
அரகரா யீராறு சாம மாட்டி
நாட்டுவாய் ரவிமுகத்தில் வட்டு பண்ணி
நன்றாகக் காய்ந்த பின்பு சொல்லக் கேளு
பூட்டுவாய் மண்சீலை நன்றாய்ச் செய்து
போடுவாய் காடையென்ற புடத்திற்றானு
மாட்டியதோர் புடந்தானு மாற விட்டு
மைந்தனே எடுத்துப்பார் சுன்னமாச்சே
- - 350
ஆச்சப்பா சுன்னமதின் றொழிலைக் கேளு
அடங்காத குடவனிலே யூற லேகும்
காச்சப்பா செம்புதனை யுருக்கிக் கொண்டு
கருவான சுன்ன மதினூற்றுக் கொன்று
பாச்சப்பா செம்பதுவும் பழுத்துப் போகும்
பக்குவமாய் வெள்ளிசெம்பில் பத்துக் கொன்று
தாட்சியில்லாச் சுன்னமது சேர்ந்தால் மைந்தா
தடையறவே வயது பதினாறதாமே -
- 351
ஏமரசக் களங்கு
அழகான சம்பழத்தின் சாற்றிற் றாக்கி
நாமப்பா சொல்லுகிறோஞ் சம்பழத்தின் சாறு
நன்றாகத் தெளிந்ததுவுஞ் செயநீராகும்
தாமப்பா செம்பழத்தின் செயநீராலே
தயவாக அரப்பொடியை சுத்தி பண்ணி
காமப்பால் கலவத்தில் விட்டு மைந்தா
கருவான அரப்பொடியை யரைத்திடாயே - 352
அரைக்கையிலே வீரமொடுபூரம் போட்டு
அழகான துரிசினோடு காரஞ் சேரு
விரைக்கவே சம்பழத்தி னீராலாட்டி
விசையாக வுருட்டியதைக் காயப் போட்டு
கரைக்கவே குகைதனிலே சாரமிட்டு
கல்மசங்கள் தானறவே யூது வூது
மரைக்கின்ற திரைவுரையு மகன்று நல்ல
மணிபோல வுருகியது செம்புமாமே - - 353
செம்பான அயச்செம்பு கிடையாதப்பா
செகத்திலுள்ள வாதிகளுந் தேடமாட்டார்
நம்புவது எனன்வென்றால் அயத்தின் செம்பு
நாதமென்றுஞ் சத்தியென்று மிதுக்கு நாமம்
சம்பு சிவநாதமென்ற அயத்தின் செம்பில்
தாக்கடா இடைக் கரை தங்கந் தன்னை
வம்பில்லா நரகமதில் கூடச் சேர்த்து
மணிகாணக் காரமிட்டு வுருக்கிப் பாரே - - 354
உருக்கையிலே மூன்று மொன்றாயுருக்கிப் பாரு
உத்தமனே ஏமாசக் களங்குமாகுந்
தரைக்குளுள வாதிகளோ காணப் போறார்
தயவான அயக்களங்கின் வீறு மெத்த
உரைக்கின்றே னயக்களங்கின் ஒளியை மைந்தா
ஓகோகோ செம்புதனில் நூற்றுக் கொன்று
கரைகின்ற குகையதனி லுருக்கிப் பாரு
கருவான செம்பதுவும் பழுப்பதாமே - -355
பழுத்ததென்றும் மகிழாமல் குடவன் தன்னில்
பாச்சடா அன்பதுக்கு வொன்றுதானும்
அழுத்தமுள்ள குடவனது வூறலற்று
அழகான பொன் மாற்று அதிகமாகும்
முழுத்தமுள்ள அயக்களங்கை வெள்ளிசெம்பில்
மூர்க்கமுடன் கணக்காக நூற்றுக்கொன்று
தழுக்கறவே குகைதனிலே யுருக்கிப் பாரு
தாயான தங்கமது அதிகமாற்றே -
- 356
களங்கு செந்தூரம்
மாட்டடா இடைக்கிடைதான் கெந்தி சேர்த்து
தாட்டிகமாய் வீரமொடு பூரஞ் சேர்த்து
தயவாகக் கலவமதில் பொடித்துக் கொண்டு
பூட்டுவாய் குப்பிதனில் பொடியை மைந்தா
புகழான மண்சீலை யாறுஞ் செய்து
வாட்டுவாய் ரவிமுகத்தி லுலர்ந்த பின்பு
மைந்தனே தாழியரை உப்பைவையே - - 357
வையப்பா மேருதன்னை வைத்தப் பின்பு
வைத்துமொருகழுத்தின் மேலுப்பைக் கொட்டி
பையவே அடுப்பேற்றி தீயை மூட்டு
பக்குவமாய் சருகு கம்பு விறகால் மைந்தா
செய்யப்பா தீயெறியப்பா யாறு சாமம்
சிவசிவா தாழிதனை யிறக்கிப் போடு
கொய்யப்பா சுகந்த மலரற்சனையே செய்து
குருவான மேருவை நீயெடுத்துப் பாரே
- 358
எடுத்து மிகப் பார்க்கையிலே மேருக்குள்ளே
யிருக்குதடா செந்தூரமென்ன சொல்வேன்
தொடுத்ததொரு செந்தூரந் தொந்தங் கோடி
சொல்லுகிறேன் புலத்தியனே தொந்தமாக
அடுத்தொரு செந்தூரம் பணவிடைதான் கொண்டால்
ஆக்கையது பிலத்துதடா அழிவே யில்லை
வடித்ததொரு திரிகடுகில் செந்தூரஞ் சேர்த்து
வளமான தேனிலொரு கடியாய்க் கொள்ளே 359
கொள்ளவே வாசியது பிலத்துப் போகும்
குருவான திருநடனங் குறிப்பாய்க் காணும்
அல்லதுதான் விலகுமமுதஞ் சிந்தும்
அஷ்டாங்க யோகமதி லடுத்துக் காணும்
விள்ளாத தசதீட்சை யொளியே காணும்
வேதாந்த பூரணத்தின் விலாசந் தோணும்
வல்லபரமான குருபதியில் நின்று
வளமையுள்ள செந்தூர மகிழ்ச்சி பாரே - -360
பாரப்பா காரீயம் வுருக்கிக் கொண்டு
பாச்சடா செந்தூரம் பத்துக் கொன்று
வீரப்பா தானடங்கி வெளுத்துப் போகும்
வெள்ளீயந்தனை யுருக்கி நூற்றுக் கொன்று
சேரப்பா செந்தூரஞ் சேர்த்தா யானால்
சிவசிவா தங்கமென்ற அதிக மாற்று
ஆரப்பா செந்தூரமறியப் போறார்
அறிந்தவர்கள் தனைக் காண அரிதாம் பாரே - - 361
அரிதான செந்தூரம் நூற்றுக்கொன்று
அப்பனே செம்புதனி லீந்தாயானால்
பெரிதான தங்கமடா பழுப்ற மெத்த
போசதே யித்தோடே யின்னங் கேளு
குறிதான செந்தூரங் கழஞ்சி வாங்கி
குணமான வாய்நீரால் மத்தித்தே தான்
கரியான களிம்பு சேர் குடவனுக்கு
கங்கணமாய் தகடதிலே பூசிப்போடே
- - 362
போடப்பா புடந்தனிலே களிம்பு சேர்த்து
பொன்னொளிவு அதிகமதாய் பூண்டு காணும்
தேடப்பா வெள்ளிசெம்பில் கணக்காய் நூற்றில்
செந்தூர மொன்றிடவே செம்மையாகி
ஊடப்பா செந்தூரம் பாய்ந்து மைந்தா
வுலகமதி லதிகமா யொளியே வீசு
நாடப்பா செந்தூரம் நல்லபிரயோகம்
நலமான யின்னமொரு சேதி கேளே - - 363
கேளப்பா இந்தநூல் சகலகலை பீடஞ்
செயமாக ஆயிரத்து இருநூறாகும்
ஆளப்பா இந்நூலைப் பதனம் பண்ணி
அடக்கமுடன் கருவெடுத்து ஆடு மைந்தா
நீளப்பா தளும்புவது போலே மைந்தா
நின்றாக்கா லுலகமதில் நிசங் கொள்ளாது
தாளப்பா ஐம்புலனு மொன்றாய் நின்று
தனதான பூரணம் போல் நூலைக்காரே - - 364
காராமல் புத்திகெட்டு இருந்தால் மைந்தா
கருவி கரணாதிகளுங் கலந்து போகுங்
கூறாத கருவை யெல்லாமிந்த நூலில்
கூறின தாலிந்த நூல்குரு நூலாகு
நேரான குருவினிட பாதம் போற்றி
நினைவாக இந்த நூல் தன்னைப் பார்த்து
தேராத சித்துக்களை யாடு மைந்தா
தெவிட்டாத பூரணத்தைத் தினமும் நோக்கே - 365
நோக்குவது பூரணத்தை நோக்க வேணும்
நோக்காதே போக்காலென்ன சென்மம்
தாக்குவது பூரணத்தைத் தாக்கு தாக்கு
தன்மையுடன் குருபதத்திற் றொண்டு பண்ணு
வாக்கு மன தொன்றாகி அறிவினில்லு
வஞ்சரிட மிந்நூலை வழுத்த வேண்டாம்
நாக்கதுவும் படபடத்து நில்லாதே மைந்தா
நன்மையுடன் மவுனத்தை நாடிப் பாரே
- - 366
நாடிப்பார் மவுனமென்றால் பூரணமே யாகும்
நலமான பூரணந்தான் விந்துவிந்து
தேடிப்பார் விந்துநிலை காணமாட்டார்
சிவமான மதியமுதச் செயலைக் காணார்
கூடிப் பார்த்தறியோடே குண்டலியைக் கண்டால்
குருவான பதிதலத்தி லமுதங் காணும்
வாடி மனந்தளராதே மலரைக் கண்டு
வந்தமுதம் பூரணமாய் மனத்திற் காணே
- 367
காணவே மதியமுதங் கொண்டால் மைந்தா
கர்பூரதேகமு மமாய் கருணையாகும்
பேணவே பேணினது கண்ணில் காணும்
பிரணவத்தோ டாறுதலப் பெருமை காணுந்
தோணவே தோணினது தோணத் தோணும்
சோதியிலே செகச்சோதி சுளுவிற் காணும்
ஊணான அஞ்சு பஞ்சலவணத்தாலே
உலகமமெல்லாந் தானவனாயுறுதியாமே
- - 368
நாகக் கட்டு
ஓகோகோ வெடியுப்புச் சாரஞ் சேர்த்து
பருதிமதி தன்னாலே வங்க நீற்றி
பக்குவமாய் மூன்று மொன்றாய் கலவத்தாட்டி
திருமதியும் நீராலே ஆட்டி மைந்தா
சின்கெனவே நரகமதுக் கங்கி பூட்டி
குருநிதியைத் தியானித்து புடத்தைப் போடு
குருவான நரகமது குருவுமாமே - 369
ஆமப்பா குருவான நரகந்தானு மடங்கியது
மாண்டுதடா அருமையாக
வாமப்பா தன்னாலே யடங்குகின்ற
மகாரசத்தின் பெருமைதனை வழுத்துகிறேன் கேள்
ஓமப்பாடு வன்ற பரிரவி தானொன்று
உறங்குகின்ற நரகமதி னிடையே சேர்த்து
தாமப்பா குகைதனிலே யுருக்கிப் பாரு
தவள நிறமானதொரு மணி போலாமே - - 370
மணியான நரகமணி யார்தான் காண்பார்
மகத்தான பூரணத்தை யறிந்தோர் காண்பார்
கனியான நாதமணி தனை யுடைத்து
கருவான செம்பதனில் நூற்றுக் கொன்று
வணிகரணமாக நீயுருக்கிப் பாரு
வஞ்சியெனும் பரஞ்சியான தங்கம்
பணியான பல தொழிலுக்கிதுவே தங்கம்
பராபரமாய் நின்றதுவுந் தங்கந்தானே 371
தானென்ற நாகமணி யொன்றெடுத்து
தயவான வெள்ளி தனிலீந்தால் மைந்தா
கோனென்ற குருவருளால் வயதே சொல்வேன்
குருவான நாகமணி தரத்தால் மைந்தா
தேனென்ற மொழியுடைய கமலமாது
ஜெகஜோதியான திருவான மாது
மானென்ற மதி யமுதமான மாது
மகத்தான பூரணமாந் தங்கந்தானே - - 372
தானான பூரணமே தான்தானாகுந்
தலமான பூரணத்தின் தலமே தென்றால்
ஊனான தேகமடா சத்தி சத்தி
உள்ளுயிராஞ் சிவமெனவே யுகந்து கொண்டு
கோனான சத்திசிவக் கூத்தொன்றான
குறியறிந்து அமுதமெனக் கொண்டால் மைந்தா
தேனான தேகமடா சித்தியாகுஞ்
சித்தியென்றால் பூரணத்தின் சித்திதானே
- - 373
பூரண தயில மெழுகு
சித்தித்த கருவொன்று சொல்லக் கேளு
செயலான பூரணத்தின் தயிலஞ் சேர்த்து
சத்தி சிவமான மதியுப்பே தென்று
சாரமென்ற வுப்புடனே காரங் கூட்டி
முத்தி பெறக் கலவமதில் நாட்டினாக்கால்
மூர்க்கமுள்ள மெழுகாகு மைந்தா மைந்தா
பத்தியுடன் மெழுகெடுத்து தாரத்துக்குப்
பக்குவமாய் கவசமது பதியச் செய்யே
- 374
செய்ததொரு கவசமதைத் தீபந்தன்னில்
திரும்பி மெள்ள வாட்டினதால் மைந்தா கேளு
கொய்த தொரு தாரமது கெட்டியாக
குருவான மெருகதினாற் கட்டிப் போகும்
பையவே யிப்படியே நாலுமுறை செய்தால்
பால்போலே சுத்த வெள்ளையாகு மாகும்
வையக மெல்லாந்து திக்கு மிந்தத்
தாரமகத்தான தாரமதின் தொழிலைக் கேளே
- 375
நாகக் களங்கு
கிருபையுள்ள தாரமதை யீந்தால் மைந்தா
கோளப்பா தானகலும் நாகந்தன்னில்
கொடுமையுள்ள புகையதுவு மடங்கிக் கட்டும்
வேளப்பா எரித்த சிவன் தன்னால் கட்டு
வெள்ளமணி போலெனவே வெளுமையாகுந்
தாளப்பா தங்கமிடைக் கிடைசேர்த்தால்
தயவான நாகமணி களங்கமாமே - - 376
அன்பாக அன்பதுக்கு வொன்று போடு
காமப்பா தன்னருளால் பழுக்கும் வெள்ளி
கயிலைதனில் பரமகுரு தன்னால் மைந்தா
வாமப்பால் கண்டவனே வாத யோகி
வலுவான சிவயோகி வாசியோகி
நாமப்பா வென்ற குருதன்னாற் கண்டு
நடுவான பூரணத்தை நாடு நாடே
- -
377
நாடுவது மூலமுத லாறாதாரம்
நன்மையுள்ள குரு பரமாமே லாதாரம்
கூடுவது புருவமையந்து வாத சாந்தங்
குறிப்பறிந்து இடகலையைப் பின்கலை யிற்சேரு
வாடுவது வேண்டாங் காண் புலத்தியனே யையா
வரிசையுடன் சுழிமுனையில் மனத்தை நாட்டி
தேடுவது பூரணத்தைத் தேடுதேடு
தெவிட்டாத மதியமுதங் கொண்டுதேறே
-378
தேறுவது பூரணத்தால் தேறவேணுஞ்
சிந்தை மனதொன்றாகி நிற்க வேணும்
மாறுவது அஞ்செழுத்தை யறிந்துமாறு
மகத்தான பூரணத்தை மருவிக் கூடு
சேருவது பிரமமென்ற பதியிற் சேரு
திரும்புதற்குப் பூரணத்தை நாடியூது
கூறுவது அகத்தீச வென்று கூறு
கும்பமுனித் தஞ்சமெனக் குறித்து நில்லே
- 379
நில்லென்று சொன்னீரே பூரணமே யையா
நீயென்றும் நானென்றும் வேறேயில்லை
சொல்லொன்றுந் தப்பாது என் குருவேயையா
சோமநிதி சூரியநிலை யார்தான் காண்பார்
கல்லென்ற கயிலாசங் கண்ட பேர்கள்
கருவான இருநிதியுங் கண்டே கொள்வார்
வில்லென்ற வொளிதனிலே விதங்கள் மெத்த
வேதாந்த சாத்திரமே யறிவார் பாரே - 380
பாரப்பா ஆகாசப்பா வெளியில் தான்
பருதிமதி நின்றிலங்கும் பரத்தைப் பாரு
நேரப்பா நின்றிடத்தை நின்று பாரு
நிருவி கற்ப சமாதியிலே தன்னைப் பாரு
சேரப்பா மதிதனிலே சுடரைச் சேரு
சேர்ந்ததே சுடர்மதியாய் நின்ற தப்பா
காரப்பா நின்ற சுடர்மதியை நீதான்
கலந்துவிடு சூரியனிற் கருவாய்த்தானே - - 381
அஞ்சனம்
காசினியில் பனிதாங்குங் கறுத்த பூடு
மதுவான திகைப்பூடு ஆர்தான் காண்பார்
மகத்தானப் பூண்டைக் கருக்கிக் கொண்டு
உருவாக ஏரண்டத்தெண்ணெய் விட்டு
ஓமெனவே தியானித்து மத்தித்தே தான்
குருவான பதிநோக்கி குருவைப் போற்றி
கும்பமுனித் தஞ்சமெனச் சிமிழில் வையே - 382
வைத்ததொரு சிமிழெடுத்து கரத்தி லேந்தி
வசிகரத்தை மோகனத்தால் தம்பனமே செய்து
மற்றவொரு மையெடுத்துத் திலகம் போடு
மணிமந்திர பூரணத்தை மனதிற் காரு
வுபத்ததொரு வுலக மெல்லா முன்வசமே யாகும்
உன் வசன மேலாக வுலகில் வாழ்வாய்
கைத்ததொரு அரிதாரமையைக் கேளு
கயிலாச சின்மயத்தின் கருணையாலே
- 383
அரிதார மை
கவலையுட பாலதினால் கலவத்தாட்டி
மருவு கந்தமலர் வாச மாசத்திலோர் நாள்
மங்கையர் தங் குங்குமத்தில் வரிசையாக
உருமையுடன் ரெண்டு திங்களரைப் பாயாகில்
ஓகோகோ குங்குமத்தி னிறமே யாகும்
வரிசையுடன் பீங்கானில் வழித்து வைத்து
வான்கதிரின் முகங்காட்டின்மையாய்ப்போமே
- 384
மையான மையதனை தினமு மைந்தா
வரிசையுடன் பருதி முகத் தினமும் வைத்தால்
மெய்யான மெய்யுருதி என்ன சொல்வேன்
மேதியுட சிமிழ்தனிலே பதனம் பண்ணு
வையகத்தில் மானிடரை மயக்குமை தான்
மாற்றமென்ற வுரு மாற்றமை தான்
தையலர்கள் கைவசங்களாக்கு மை தான்
தரணிதனில் வைத்த பொருளெடுக்கு மையே - 385
மை போடும்வகை
போடுகிற விதமுனக்குப் பகலக் கேளு
இருளான அசந்தேறி குருவைக் காத்து
இருகரத்தில் மை போட்டு இசைய நோக்கி
குருவான பதம் போற்றியிருந்தாயாகில்
குணமாக வுன்னுருவைப் பார்ப்போர்க்கெல்லாம்
உருவான ரூபமது ஆண்பெண் போலே
உலகமதில் தோணுமடா வுண்மை தானே - 386
உண்மையுள்ள மையெடுத்துத் திலதம் போட்டு
உருமையுடன் மனோன்மணியைத் தியானஞ் செய்து
நன்மைபெறத் தீட்சையிலே யிருந்தாயாகில்
நரரான மானிடர்க ளுருவைக் காணார்
தன்மையுடன் நிசத்தொழிலைச் செய்தாயாகில்
தரணி தனி லதிசயமாய்த்தானே தோற்றும்
விண்ணிமையைச் சதாகாலந் தொழுத பேர்க்கு
வேண்டலாமை யொளியின் விபரங்கேளே
- - 387
கேளப்பாமை யெடுத்து இடக்கரத்தில்
கிருபையுடன் மை போட்டுக் கீழேபாரு
வேளப்பா எரித்த சுடர் தன்னால் மைந்தா
வேணநிதி தோணுமடா விபரமாக
ஆளப்பா அந்நிதியைப் பூரணத்தினாலே
அஞ்சனத்தின் விபரமொன் றன்பாய்க் கேளு
கேளப்பா வொன்றுமில்லை அன்னபேதி
குறிப்புடனே நாதநீர் தன்னாலாட்டே
- 388
ஆட்டுவது ஈரைந்து நாள் தன்னாலாட்டு
அன்பாகப் பீங்கானில் வழித்து வைத்து
பூட்டுவாய் கடுக்காயை யிடித்துக் கொண்டு
புதுமையுள்ள நாதநீர் தனிற் கலக்கி
நாட்டுவாய் தெளிவிறுத்து பேதிதன்னில்
நன்மையுடன் விட்டு நீ குழப்பினாக்கால்
தாஷ்டிகமா யிருக்குமடா மையின் போக்கு
தயவான நாதம் விட்டுப்பதனம் பண்ணே - 389
பதனமுள்ள மையெடுத்து தியானஞ் செய்து
பக்குவமா யஞ்சனா தேவி மூலம்
விதனமது இல்லாமல் செபிப்பாய் நூறு
வேண்டியே மையெடுத்து திலதம் போட்டு
மதனமுள்ள மவுனமதா யிருப்பாயாகில்
மானிடவ ருன் னேவல் மகிழ்ந்து கேட்பார்
சுதமான காங்கினத்தில் மையைத் தீற்றி
சூழ் விளக்கி லீந்திடுவாய் சுருக்காம பாரே
- 390
சுருக்கான மையொன்று கண்ணிற் றீற்றித்
தூரதுலை பார்த்திட நல் சுகமாய்க் காணு
மிறுக்கி மெள்ள கண் திறந்தால் காசம் பார்க்க
இருளகன்று வெளிதோன்றி யின்பங் காணு
முருக்கமுடன் விநயமாய் பார்த்தாயாகில்
ஓகோகோ கயிலாச முகந்து காணுந்
திருக்கறவே யுன்மனையைப் பணிந்து போற்றி
திருவான லட்சுமிப் பெண் வசமாவாளே
- - 391
வசமான இந்நூலி லாறுநூறும்
வாக்கியங்கள் தப்பாமல் வசமாய்ப் பார்த்தால்
நிசமாகத் தோணுமடா மறைப்பே யில்லை
நின் னினைவுதான் மறந்தால் நிசங் காணாது
திசமான தீட்சை வீதி நன்றாய்க் காணுந்
திடஞ் சுத்தியாவது வுந்திடந் தானப்பா
கசமான மானிடர்க்கு இந்நூல் காட்டில்
கண்மருண்டு பொருளிருளாய் காணுந்தானே
- 392
செம்பு மை
களிம்பான செம்பினுட மையைக் கேளு
பேணவே தாம்பிரத்தால் செம்பு பண்ணி
பிலமான நாதநீர் நிரம்ப விட்டு
தோணவே துரிசதனைப் பொடித்துத் தூவி
சுண்டியிதின் மேல் பேதி துலங்கத் தூவி
நாணவே ரவிமுகத்தில் வைத்துப் பாரு
நாலஞ்சு நாளையிலே மை போலாமே - 393
மையான தாம்பிரத்தின் மையிலே தான்
மாதாந்த சஞ்சீவியை மகிழ்ந்து பாரு
கையாலே மத்திக்கும் போதிலேதான்
கருவான மை யுறுதி என்ன சோல்வேன்
மெய்யான மேதியுட சிமிழில் வைத்து
மேன்மையுடன் தினந்தோறும் ரவியில் வைத்தால்
தொய்யாத தாம்பிரத்தின் மையின் வேகஞ்
சொல்லுவேன் புலத்தியனே துலங்கக்கேளே
- 394
கேளப்பா மையெடுத்து தியானஞ் செய்து
கெணிதமுடன் ரேசகபூரகமும் பண்ணி
மேலப்பா கும்பகத்தே நின்றாயானால்
மேதினியி லுன தேவல் விரும்பிக் கேட்பார்
வாளப்பா வுலகத்தோ டொத்து வாழ்ந்து
வரிசை பெற அஷ்டசித்து மகிழ்ந்து மாடி
ஆளப்பா குருபதத்தைப் பணிந்து போற்றி
அஷ்டமா சித்து விளையாடலாமே -395
அறுவகைச்சரக்கு மை
ஆதியந்த மென்றதொரு வுப்போடொக்க
போடுதற்கு லவணத்தைச் சொல்லக்கேளு
பொல்லாத சவுக்காரம் வளையலுப்பு
நாடு மெய்த்த வுவருப்பு துருசு சீனம்
நலமான பேதியுட னாறுங் கூட்டி
தேடுதற்குக் கலவத்தில் பதிய வைத்து
திரமான நாதநீர் விட்டுஆட்டே
- 396
ஆட்டியே யயக்கிண்ணி தன்னிலேதான்
அடுப்பேற்றி தீயெரிக்க அடங்கி வேகு
மாட்டியே கருவெடுத்து கலவத்திட்டு
மாதாந்த சஞ்சீவியை விட்டு ஆட்டி
நாட்டியே முன்போலே யெரித்துப் பாரு
நன்மை பெற மை யுறுதி யென்ன சொல்வேன்
காட்டியே ரவிமுகத்தி லஞ்சு முறை யப்பா
கருத்துறவே வைத்து மிகக் காரு காரே - 397
காத்ததொரு மை யெடுத்துக் கலவத்திட்டு
கற்பூர விந்துவினாற் கலர வாட்டி
சேர்த்து மிக ஈரஞ்சு நாள்தா னாட்டி
சிவசிவா யென்ன சொல்வேன் மையின் போக்கு
பூத்த மலர் சமாதியிலே செய்த மையைப்
பொன்னான சிமிழ்தனிலே வைத்துக் கொண்டு
நாற்றிசையு மெய்க்கவொரு திலதம் போடு
நாடு நகருனக்கீடோ சொல்லக் கேளே -
- 398
கேளப்பா மையெடுத்து தியானஞ் செய்து
கிருபையுடன் கண்ணிலிடக் குருகு மப்பா
நீளப்பா கரித்து மிக வடிந்த பின்பு
நிமை யாட்ட மில்லாமல் நிற்கும் பாரு
வாளப்பாராக் காலம் பகற்காலம் போல்
வரிசையுடன் காணுமடா வளமையாக
காலப்பா விறிசு கொண்டு நடந்தாயானால்
காதவழி நிமைப் பொழுது காணுங்காணே
- 399
காணவே மை யெடுத்துக் கண்ணில் தீற்றி
கருணை மலர்பூமாதைக் கருத்தில் வைத்து
பேணவே ஆகாசம் பார்க்கும் போது
பிலமான நட்சத்திரம் பகலேகாணும்
நாணவே சோமகிரி சூரியகிரி ரெண்டும்
நளினமுடன் தோற்றுமடா நளினமாக
பூணவே பூமி தன்னிலுள்ள பொருளெல்லாம்
போக்கோடே காணுமடா புதுமை தானே -
4ள
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி