பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


வாத நாராயண மரம்

 வேறு பெயர்கள்

           வாத மடக்கி, ஆதி நாராயணன், வாதரசு, வாதக்காட்சி, வாதரக்காச்சி,  Delonix elata  என வேறு பெயர்கள்

தோற்றம்

           இந்த மரம் மிகப்பெரிய தோற்றத்தையும் அடர்ந்த நிழல் தருவதாயும் , மர நிழலில் சிறு செடிகள் கூட வளர முடியாத வண்ணம் இருக்கும்.


    இதன் இலைகள், சிறிய,  இறகு போன்ற கூட்டு இலைகளைக் கொண்டதாயிருக்கும். வெண்மை, மஞ்சள் நிற பூக்களைக் கொண்டதாயிருக்கும். இதன் கிளைகள் எளிதில் வளைந்து ஒடியக் கூடியாதாயிருக்கும்.









குணநலன்கள்

            இது உற்சாகம் அளிக்கும் தன்மை உடையது மேலும் பித்த நீரைப் பெருக்கி உடலை  சூடாக வைத்திருக்கும்.

ரத்தக்கட்டு, கைகால் வலி முதலியவைக்கு  வாதநாராயணன் இலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குளிக்க உடம்பு வலி தீரும். 

          வாதநாராயணன்இலையை, முடக்கு அறுத்தான் என்னும் முடக்கத்தான் கீரையுடன் அரைத்து தோசை மாவு போன்ற உணவுப் பொருட்களில் கலந்தும், கீரைப் பொரியல் போன்று செய்தும் உண்டு வந்தால், மலம் இரண்டொரு முறை கழிந்து குத்தல் குடைச்சல், வாதத்தினால் வந்த வலி முதலியன நீக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி