அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 001 - 100
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 101 - 200
அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 201 - 250
புசண்டருக்குச் சொன்ன தாரக்கட்டு
பரமான புசுண்டருக்குப்
பகர்ந்த விந்தை
நேரப்பா நின்றதொரு
கல்லை வாங்கி
நினைவாக அந்திடைக்குக் காலுங் கூட்டி
சீரப்பா அந்திடைக்குச்
சீனஞ் சேர்த்து
சிவசிவா மூன்று மொன்றாய் கலவத்திட்டு
அறுவகை யினீராலாட்டி
மைந்தனே
வட்டாக வுலர்த் திடாயே -
- 250
உலர்ந்ததொரு
வட்டுக்கு மண்ணுஞ்
செய்து
உத்தமனே நூறெருவில் புடத்தைப் போடு
அலர்ந்து
மிகத் தீயாறி யெடுத்துக் கொண்டு
அப்பனே கவசமது யிட்டுப் பாரு
மலர்ந்ததொரு
பூப்போலே நீறி நிற்கு
மகத்தான சுன்னமடா என்ன சொல்வேன்
கலந்ததொரு
சுன்னமுடன் வீரம்பூரம்
கருவான வாய்நீராலரைத்துக் கொள்ளே - - 251
அரைத்ததொரு மருந்ததனைத் தாரத்துக்கு
அப்பனே கவசமது அன்பாய் செய்து
விரைத்துமே
மண்சீலை யேழுஞ் செய்து
விரைக்கவே ரவி முன்னே காயப்
போட்டு
மறைக்க
மனமறிவாலே புடத்தைப் போடு
மைந்தனே புடமாறி யெடுத்துப் பாரு
தறைக்
கடங்கா ரவி போலே மேனியாகி
தன்மையுடன் கட்டுமடா தாரந்தானே -
- 252
தாரத்தின் வேதை
தன்னை யார்தான் காண்பார்
தன்னிலையைத் தானறிந்தோன் காண்பானையா
பேரொத்த சித்தர்கள்
தான் கண்டாரானால்
பெருமைதனைத் தானடக்கி மலைமேல் போவார்
பாரொத்த பூமியுட
நாதங் கண்டால்
பலிக்குமடா வாதமுடன் யோகந்தானுங்
காரத்தின்செயலதனையார்தான்காண்பார்
கருணையுள்ளபூரணத்தோன்காண்பானபாரே
– 253.
பாரறிந்து வூரறிந்து
குணத்தைக் கண்டு
பலமான வீரத்தை யறியான் மட்டை
கூரறிந்து குருவறிந்து
வணங்காப் பாவி
குணமில்லா சண்டாளர் மெத்தவுண்டு
நேரறிந்து பேசாதலுத்த
ரோடே
நீ மகனே சொல்லாதே பாவம் பாவந்
தூரறிந்து வேரறிந்து
கொம்பைக் கண்டு
தூண்டாத மணி விளக்கைக் கண்டு போற்றே
- 254
போற்றுவது ஆரையென்றால்
பூரணத்தை மைந்தா
புதுமையுள்ள பூரணமே தெய்வந் தெய்வந்
தேற்றுவதால்
மனந்தேறி நிலையில் நின்றால்
சிவசிவா கயிலாயத் தேகந் தேகம்
பூத்தமலர் வாசனையை
யார்தான் காண்பார்
புதுமையுள்ள பூரணத்தைக் கண்டோன் காண்பான்
சாத்துநிலை
தானடங்குங் குருவைக் கண்டு
கருவை யறிந் துறுதி பெறக் காய சித்தே - -255
தாளகமெழுகு
சித்தான தாளகத்தை
யெடுத்துக் கொண்டு
சிவசிவா மகாரசமுங் கெந்தி கூட்டி
முத்தான கலவத்திலிட்டுக்
கொண்டு
முசியாமல் சாரநீர் விட்டு ஆட்டி
சத்தான தயிலமதில்
பின்பு ஆட்டு
சதாசிவன் போல் மெழுகாகுந் தன்மையாக
பத்தான மதிதனிலே
யீந்தால் மைந்தா
பாலகனே
பதினாறு வயது ஆமே - -256
ஆமப்பா குடவனிலே
யீந்தா யானால்
அப்பனே ஆறரைக்கு அதிகங் காணும்
நாமப்பா வெள்ளி
செம்பி லீந்தா யானால்
நன்மை யுடனெட்டு வயதாகும் பாரு
தாமப்பா இவ்வேதை
புசுண்டர் வேதை
தன்மையுடன வருடைய கற்பங் கேளு
காமப்பால் கானற்பால்
ரெண்டுங் கொண்டு
கருவாக பூரணத்தைப் பொசித்தான பாரே - - 257
புசுண்டஷி கற்பம்
பூரணமென்றா
னுமக்குத் தெரியுமோதான்
புத்தியுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
காரணத்தின்
குருவருளால் காண வேணுங்
கருவான சாரணத்தைக் கேளு மைந்தா
சீரணித்ததேகமென்றாலறிவானோசொல்
சிவசிவாஐந்துருவுமாதியாதி
மாhணித்துக்கொண்டுவந்துஐயாகேளு
மவுனமதில்கறியுப்பைவகையாகச்சேரே
- - 258
சேர்ந்தப் பின்பு
ரவிமுகத்தில் வைத்துப் பாரு
சிவசிவா மெழுகது போலிருக்கு மப்பா
பார்த்த பின்பு
ரவி முகத்தில் நவநாள் காய்ந்தால்
பாலகனே யுப்பாகும் பசுமையாக
கார்த்ததொரு
காரசாரத்தி னுப்பை
கருணையுடன் தினந்தோறுங் கொண்டால் மைந்தா
மூர்த்திகர
முண்டாகி தேகஞ் சித்தா
மூதண்டராஜரிஷிமுறைதானப்பா -
- 259
சூதரிஷி கற்பம்
ஆமப்பா இன்னமொரு
விபரஞ் சொல்வே
னருள் பெருகுஞ் சூதமுனிக் கருளும் வார்த்தை
நாமென்ற விஞ்சையடா
ஆதியுப்பு
நலமான வுப்புடனே துருசு சேர்த்து
காமப்பால் வெடியுப்பு
நேராய் சேர்த்து
கலவத்தில் மூன்று மொன்றாய் சருவாலாட்டி
வாமப்பால் விட்டாட்டிப்
புடத்தைப் போடு
மகத்தான சுன்னமடா நீறிப்போமே - - 260
நீறியதோர்
சுண்ணாம்பில் வீரம்பூரம்
நேரப்பா நேர்பாதி சேர்த்துக் கொண்டு
வூறியதோர் வாய்நீரால்
கலவத்தாட்டி
உத்தமனே நன்றாக அரைத்தப் பின்பு
காரியமாய் ரவிமுகத்தில்
காய வைப்பாய்
கருவாக வுருட்டியதை வட்டு பண்ணி
ஆறியதோர் மண்சீலை
யேழுஞ் செய்து
அப்பனே புடம் போடச் சுன்னமாச்சே -
- 261
ஆச்சப்பா சுன்னமது
வாய்நீராலே
அப்பனே பூரத்துக் கங்கி பூட்டி
பேச்சப்பா வொன்றுமில்லை
மண்சீலை செய்து
பிசகாமற் புடம்போட நீறிப் போகும்
காச்சப்பா அந்நீரில்
வீரம் பூரங்
கருவிட்டுமே மத்திச்சு துருசுக் கப்பி
பாச்சப்பா மண்சீலை
யேழுஞ் செய்து
பக்குவமாய்ப் புடம்போடச் சுன்னமாச்சே - 262
சுன்னமென்ற
துருசினுட சுன்னந் தன்னை
துருசான ரசந்தனக்கு பத்துக் கொன்று
புண்ணியனே தான்
கொடுத்து வாய்நீர் விட்டு
புதுமையுடன் மத்திக்கத் திரண்டு போகும்
தண்மையுடனுருட்டி
யதை சுன்னத்துள்ளே
தான் முழத்திற் புடம் போட வுருகி நிற்கும்
உண்மையுடன்
பரியதனை யுருக்கிக் கொண்டு
வுருண்டு நின்ற ரசங் கொடுக்கக் களங்கதாச்சே-263
களங்கமில்லா
களங்கதனை யெடுத்துக் கொண்டு
கருணை பெற செம்புதன்னி னூற்றுக் கொன்று
மலங்காமல் கொடுத்துடனே
மாற்றுப் பத்தாய்
வரிசை பெறக் காணுமடா வெள்ளீக்கீந்தா
லுளங் கனிந்த
பதினாறு மாற்று காணு
முத்தமனே குடவனிலே யீந்தாயானால்
ஜெலங் கனிந்த
வூறலெல்லா மற்று
நல்ல தீர்க்கமுட னெட்டுவயதாகும் பாரே
264
பாரப்பா ரசக் களங்கை நொறுக்கிக் கொண்டு
பழுதில்லா கெந்திதனை யிடையே செய்து
சாரப்பா வீரமுடன்
பூரம் லிங்கந்
தயவான மனோசிலையுங் கூடச் சேர்த்து
நேரப்பா கலவத்திற்
பொடி யதாக்கி
நேர்மையுள்ள குப்பிதனி லரை மட்டிட்டு
சீரப்பா மண்சீலை
யேழுஞ் செய்து
சிவசிவா வாளுகையிற் வைத்துப் போற்றே - 265
போற்றியே குருபரனைத்
தொழுது கொண்டு
புதுமையுள்ள சருகுகம்பூவிற் கால் மைந்தா
தேற்றியே தீயெரிப்பா
யாறு ஜாமம்
சிவசிவா செந்தூர மென்ன சொல்வேன்
நாற்றிசையும்
போற்றுமிந்த செந்தூரந்தான்
நலமாகப் பணவிடைதான் கொண்டாயானால்
பார்த்திபனே
யாக்கை தனக்கழிவே யில்லைப்
பணிந்திடுவாய் குருபரனைப் பணிந்து போற்றே
- - 266
பிர்ம ரிஷி கற்பம்
பணிந்து மிக
இன்னமொரு கருவைக் கேளு
பார்தனிலே பிரம ரிஷிக் கருளும் வார்த்தை
கனிந்து மிகப்
பூரணத்தைக் கனிந்து கொண்டு
கமலமதிலே யிருந்த மதுவை வாங்கி
அணிந்ததொரு
கமலமதில் விட்டு மைந்தா
அருள் பெருகுங் கங்கைதனை யதனில் விட்டு
துணிந்து மிகரெண்டு
மொன்றாய் ரேசித்தே தான்
துலங்கு ரவி முகந்தனிலே காய வையே
- - 267
வையப்பா இந்த
விதம் பத்து முறையப்பா
வைத்ததினால் காரமுடன் சாரம் ரெண்டும்
மெய்யப்பா சொல்லுகிறேன்
ரெண்டு மொன்றாய்
விரவியே
திருநீறாய்ப் போகும் பாரு
செய்யப்பா அந்நீற்றில்
முன்போல் பத்து
தெசதீட்சை பண்ணி விட சேதி கேளு
அய்யனே யமுதரசமான
கற்பம்
ஆருக்கும் விள்ளாதே யருமை தானே - -268
தானென்ற அமுதரச
கற்பங் கொண்டு
தரணி தன்னில் பிரம ரிஷி நானேயென்று
வூனென்ற வுயிர்த்தனைத்தான்
திஷ்டிப்பாலே
யுண்டாக்கி யண்டமெல்லா மயனாய் நின்று
கோனென்ற குருவாகி
குருவு மானான்
குருவான பிரமகுரு ஆர்தான் காண்பார்
நானென்ற ஆணவத்தை
யொடுக்கி மைந்தா
னன்மையுட னிந்த நூல்பதனம்பண்ணே - - 269
இந்த நூலாயிரத்திரு
நூறுக்கு
ளிதமான கருக்கிடையுங் குருக்கிடையு மப்பா
சந்தேக மில்லாமல்
சொன்னேன் வாக்யந்
தன்மையில்லா மானிடர்க்கு சாற்றினாக்கால்
பந்தமிலாப்
பாசமது சூழ்ந்துக் கொண்டு
பாழ்நரகில் வீழாதே பதனஞ் சொன்னே
னந்தமுள ஆதியந்த
மிதிலே தோன்று
மாருக்கு மிந்த நூலளிக்கொணாதே -
- 270
ஒன்றான கற்பமடா
பிரம கற்ப
முண்மையுடன் செய்தவனே சித்தன் சித்தன்
பண்டான சோதியடா
பரப்பிரம மாச்சு
பாருலகத்தில் பூரணத்தைப் பணிய மாட்டார்
நன்றான பிரமகுரு
ஆர்தான் காண்பார்
நன்மையுடன் கண்டவனே சீவன் முத்தன்
உண்டான சேதியொன்று
முரைக்க மாட்டார்
உரைத்தாக்காலரு நரகமுண்டாம் பாரே - - 271
பாரப்பா நரகமதில் சேர நன்றே
பராபரத்தினருள் பெருகியிருக்க நன்றே
நேரப்பா நின்ற
பொருள் காண வேணும்
நிருமலமாம் பிரமகற்பங் கொள்ள வேணும்
காரப்பா அடிமூலங்
காக்க வேணுங்
காராட்டாற் சகலசித்துங் காணா தோடும்
ஆரப்பா அறிவார்கள்
காரசாரம்
அடங்கி நின்ற பொருளறிந்து அருளைப் போற்றே
– 272
அருளான பூரணமே
போதம் போதம்
ஆதியென்ற பிரம குருவான போதம்
மருளான மயக்கமெல்லாந்
தீர்த்த போத
மனதடங்கி யொருமையாய் மகிழ்ந்த போதந்
திருவான லட்சமிப்
பெண் வாசமான
தேசி யென்ற குருதேசி நின்ற போதம்
உருவான அருவுருவா
யமர்ந்த போதம்
உண்மை யென்ற போதமதிலுகந்து நில்லு - - 273
நில்லென்ற நிலையறிந்து
நின்றால் மைந்தா
நிலையான போதமதை நீதான் காண்பாய்
கல்லென்ற கடுங்காரக்
கல்லை மைந்தா
காசினியோ ராரறிவார் கருதிப் பார்க்க
அல்லென்ற கருவிகளை
யகற்றினாக்கால்
அருள் பெருகும் பிரமநிலை யருளைக் காண்பான்
தில்லை நடராஜருட
செயல் கண்டாக்கால்
சிவசிவா பிரம ரிஷி யாவாய் பாரே -
- 274
பராச ரிஷி கற்பம்
பாரப்பா இன்னமொரு புதுமை கேளு
பராசமுனிதான் செய்து பகர்ந்த வித்தை
ஆரப்பா அறிவார்க
ளதீத வித்தை
அன்பான புலத்தியனே யுனக்குச் சொல்வேன்
நேரப்பா பிரமகுலத்
துதித்த தொன்று
நிச்சயமாய் மூலமதை சமூலங் கொண்டு
வீரப்பா செய்யாமல்
ரவியிற் றாக்கி
வீறடங்கிக்காய்ந்தபின்புவித்தைகேளே - - 275
கேளப்பா கல்லுரலி
லிட்டு மைந்தா
கிருபையுள்ள இருப்புலக்கை தன்னாற் குத்தி
கேளப்பா வாராமல்
கொழித்துக் கொண்டு
கூர்மையுட னிடித்திடுவாய் தவிடதாக்கி
வாளப்பா இடித்ததை
நீ சமூலங் கொண்டு
மைந்தனே தண்ணீரில் பிசைந்து வைத்து
நீளப்பா மிஞ்சாமல்
பிசறிக் கொண்டு
நேரான ரவிமுகத்தில் வைத்துப் போற்றே
- - 276
போற்றுவது தசதீட்சை
முகிந்து தானால்
புதுமையுள்ள வுப்பது தானென்ன சொல்வேன்
தாட்டிகமா யமுதரச
வுப்பை மைந்தா
தாளியென்ற பீங்கானி லிட்டுக் கொண்டு
பூட்டுவாய்
சூடனொன்று இணங்க னொன்று
பொல்லாத வீரமொன்று கருவுப் பொன்று
நாட்டியே ஒன்றாகச்
சேர்த்துக் கொண்டு
நலமான பானைவாய் சில்லுப் போடே -
- 277
போட்டபின்பு
மண்சீலை யேழுஞ் செய்து
புதுமையுட னிடுப்பளவில் குழியில் வைத்து
மாட்டுவா யானையுட
கட்டம் போட்டு
மைந்தனே மணல் கொட்டி வைத்துக் கேளு
தாட்டிகமா யதின்
மேலே திரணை போட்டு
தன்மையுடன் தானிருந்து தன்னைப் போற்றி
நாட்டுவாய்
லட்சமுறு நீலகண்டம்
நன்மையுடன் தினந்தொழுக நன்மையாமே - - 278
நன்மையது என்னவென்றால்
மைந்தா கேளு
நலமான மெழுகாகு மண்டலத்திலப்பா
வுண்மையுட னம்மெழுகை
யெடுத்துக் கொண்டு
வூட்டுவாய் தினந்தோறு மெழுகு போல
திண்மை யென்ற
சடலமது நன்மையாகுஞ்
சிவசிவா யாக்கையது பிலத்துப் போகும்
தன்மையென்ற
மெழுகினுட பெருமை தன்னைச்
சதாகாலம் போற்றிப் பூரணத்தை நோக்கே
- - 279
பூரணத்தை நின்றதொரு
மெழுகு தன்னில்
புதுமை யொன்று சொல்லுகிறோம் புகலக்கேளு
காரணமாய் நின்ற
களிம்பான செம்பில்
கருத்துடனே நூற்றுக்கு ஒன்று போடு
மாரணமாய் போகுமடா
செம்பு தானும்
மாற்றேது என்னவென்றால் மைந்தா கேளு
நாரணத்தின்
பொருளதினால் நூறு மாற்று
நன்மையுடன் காணுமடா நாம் சொன்னோமே -280
ஆறாதாரம்
சொன்னதொரு மூலத்துக்
கப்பால் பாரு
துலங்குமடா ஆறுதலம் பிர்மா வீடு
நன்னயமாய் நகாரமென்ற
பூமிக்குள்ளே
நாடிநின்ற நாசியினால் பிறப்பு மாச்சு
தண்மையுட னதின்
மேலே மாலின் வீடு
தளமான பத்தி தழும் பிறையு மாகும்
உண்மையுடன்
ஜெகத்துக்குத் தாயாய் நிற்பாள்
ஓங்கார மயத்துக்
காதி தானே - 281
ஆதியாந் திரோதாயி
யமர்ந்த வீடு
அருளான போத மிகுந் தாடும் வீடு
நீதியாங் காமியத்தை
நிமிர்த்தும் வீடு
நினைவில்லா மாய மெல்லாம் நிறைந்த வீடு
பேதியா மனமுழன்று
பெண்ணைத் தேடி
பேய்க் கூத்தா யாட்டிவிக்கும் பிலத்த வீடு
சோதியென்று
வரமளித்த துரைச்சி வீடு
சுகமாகக் கண்டறிந்து மேலே பாரே - 282
பாரப்பா அதின்மேலே பன்னிரண்டுக்குள்
பானுவங்கே யீராறு முகமாய் நிற்கும்
நேரப்பா நோவென்றால்
கண் கொள்ளாது
நேர்ந்தாலும் நடுமனையில் கோணமாகி
சீரப்பா சிகாரமென்ற
எழுத்து நிற்கும்
சிவசிவா ருத்திரனும் ருத்திரியு நிற்பார்
காரப்பா நடுமனையில்
நின்ற காட்சி
காணவென்றால் கண்கொள்ளாக் காட்சியாமே
- - 283
காட்சியா மவருடைய
கூத்தைக் கேளு
கடும் பசியும் நித்திரையும் பயம் சையோகம்
மாச்சல் செய்யும்
விதனத்தால் காமமீறி
வலுமையுட னரை திரையுமாகி நிற்கும்
பாச்சலென்ற
சடமழிந்து பாழாம் வீடு
பரஞான யோகமெல்லாம் பறந்து போகும்
தாட்சியுட னதினுடைய
கூத்தைக் கண்டு
தாண்டி நின்ற அகாரமதின் தன்மை கேளே
– 284
கேளப்பா பதினாறு
வயலின் வீடு
கெடியான காம முதல் குரோதம் லோபம்
மாளப்பா மோகமொடு
மகத்தினோடு
மகத்தான பிறப்பற்று மாளப் பண்ணும்
கோளப்பா இல்லாத
பரத்தின் வீடு
குறியாக அதின் குணத்தைக் கூறக் கேளு
நாளப்பா மேல்
மூலம் அகார வீடு
நாத சதாசிவனு மனோன்மணி யுந்தானே
- -
285
தானென்ற மனோன்மணியுஞ்
சதாசிவனுங் கூடி
தயவாக ரெண்டிதழிலிருந்தாரப்பா
கானென்ற நால்வருந்தான்
போற்றி செய்ய
கண்ணடங்காப் பிரபையொளி கருதிப்பாரு
மானென்ற சக்கரத்திலிருந்து
கொண்டு
மகத்தான வித்தை யெலாமகிழ்ந்து பாரு
வீணென்ற வறுமை
யுமாய் மனதுமாகி
வித்தான கருவினுள் சுத்துமாச்சே - - - 286
ஆச்சப்பா வுலகத்தில்
கர்ம தர்மம்
ஆனதொரு சரிதை முதல் கிரிகை யாகி
காட்சியதோர்
யோகமுமாய் ஞானமாகி
கரைகொள்ளா நூலாகி கருவுமாகி
தாட்சியில்லாத்
தெளிவாகி நினைவுமாகி
சகலமெலாந் தோற்றுஞ் சாக்கிரமுமாகி
பேச்சாகிப்
பொருளாய் மேலவழியைக் காட்டப்
பெருமையுள்ள குருபதத்தைப் பூசிப்பாயே
- -287
ரோமரிஷி வேதை
பூசித்த கருமான
மொன்று கேளு
புத்தியுள்ள ரோமரிஷி புகழ்ந்த வித்தை
நேசித்த சருவான
வுப்பு ரெட்டி
நிருமலமாங் கல்லுப்பு கூடச் சேர்த்து
ஆசித்த ரவிபீசம்
நாலுக்கொன்று
அடைவாக மூன்று மொன்றாய் கலவத்திட்டு
பாசித்த விந்துநீர்
தன்னாலாட்டி
பக்குவாமா யுருட்டியதை வட்டு பண்ணே - - 288
பண்ணப்பா வட்டதற்கு
மண்சீலை செய்து
பக்குவமாய் காடையொரு புடத்தைப் போடு
நன்னயமாய் நீறியது
சுண்ணாம்பாகும்
நாடகத்தி லாடுகிறகு ருவிதப்பா
தண்மையென்ற
சுன்னமுடன் வீரம்பூரந்
தாக்கி நன்றாய் மத்திப்பாய் வாய்நீராலே
உண்மையென்ற
துருசதற்குக் கவசம் பண்ணி
உத்தமனே மண்சீலை யுகந்துசெய்யே - - 289
செய்யப்பா கவசமதை
யுலரவைத்து
தியானத்தின் தணல் மேலே வைத்தாயானால்
மெய்யப்பா சொல்லுகிறே
னீறிப் போகும்
மேன்மையுள்ள சுன்னமதை யெடுத்துக் கொண்டு
வையப்பா தாளகத்துக்
கங்கி பூட்டி
வரிசை பெறக் கவசமதை வலுவாய்ச் செய்து
பையப்பா ரெண்டெருவில்
புடத்தைப் போடு
பசுமையுள்ள தாரமது கட்டிப்போச்சே
- -
290
போச்சப்பா தாளகத்தி
னூறலெல்லாம்
புகழான ரவிபோலே யிறுகி நிற்கும்
பேச்சப்பா வொன்றுமில்லை
வெள்ளி நூற்றில்
பிலமான தாரமொன்று ஈந்தாயானால்
தாட்சியில்லாப்
பதினாறு மாற்றுத் தங்கந்
தடையறவே காணுமடா தவக்கமில்லை
மாச்சல் செய்யுங்
குடவனிலே நூற்றுக்கொன்று
மக்களே யொன்றிடவே யெட்டு மாற்றே
- -
291
எட்டுரெண்டு
வெள்ளிசெம்பை யுருக்கிக் கொண்டு
இன்பமுள்ளதா மதிற்காறே யீவாய்
மட்டிலா அஞ்சாறு
மாற்று காணு
மகத்தான வேதையடா தாரந்தாரம்
அட்டியில்லா
தாரமதுக் காதாரந்தான்
ஆரறியப்போகிறார் ஐயா ஐயா
சிட்டமுட னிம்முறைதான்
நல்ல பிரயோகந்
திடமானரோமரிஷிகற்பங்கேளே -
- 292
பிரம ரிஷிகற்பம்
கற்பமென்று
சொல்வதெல்லாங் காயாதி கற்பங்
கருவறிந்து வுருவறிந்து கருவைப் பார்த்து
அற்பமென்று
நினையாம லாதி யுப்பை
அறுசுவை யோடெடுத்து வந்து அறுநீ விட்டு
மெய்ப்பாக அப்புமுப்பு
மொன்றாய்ச் சேர்த்து
விசையான ரவிமுகத்தில் வைத்துப் பாரு
வுற்பனமாய்க்
கயப்பேறி கற்பமாகும்
உடலினட வலுவறிந்து வூட்டுவாயே - - 293
ஊட்டுவது தின்குளது
அளவு கொண்டு
வுறுதிபெறக் கொண்டதின் மேற் கழிஞ்சி கொள்ளு
நாட்டுவது பூரணத்தில்
மனதை நாட்டு
நன்றான பேரொளியில் நின்றால் மைந்தா
வாட்டரவு வொன்றுமில்லை
நரைதிரையு மாறும்
மகத்தான காயமது வலுத்துப் போகும்
தாட்டிகமாய்
நின்றதொரு காயாதி கற்பந்
தனையறிந்து கொண்டவனே சித்தனாம் - - 294
சித்தான காயாதி
கற்பந் தன்னைச்
செகத்திலுள்ள மானிடரோ காணப் போறார்
முத்தான மகிமைதனை
யார்தான் காண்பார்
மூர்க்கமுள்ள சத்தரிஷி முனிவர் காண்பார்
வற்றாத பூரணத்தைக்
கண்டால் மைந்தா
வலுவாக் காயசித்தி யோகங் காணும்
பத்தான தசதீட்சை
பருவங் கண்டால்
பலிக்குமடா சகலசித்தும் பலிக்குந்தானே - 295
தானென்ற தத்துவத்தை
யறிந்துக் கொண்டு
தண்மை யென்ற பூரணத்தைப் பணிந்து கொண்டு
கோனென்ற குருவருளைப்
போற்றிக் கொண்டு
கும்பமுனி தஞ்சமென்று நின்றால் மைந்தா
மானென்ற மதியமுதங்
கசிந்து காணு
மார்க்கமுள குண்டலியின் மகிமை தோன்றும்
ஊனென்ற வூனறிந்தா
லெல்லாஞ் சித்தி
ஊடாடும் வாசிதனை யுற்றுப் பாரே
- -296
பாரென்று சொன்னீரே
கும்பமுனி யய்யா
பராபரத்தின் வகைதனை யார்தான் காண்பார்
நேர் நின்ற
வாசிதனை யறிவாற் பற்றி
நிலையான குருபதத்தில் நேர்ந்துக் கொண்டால்
தூரென்ற அடிமூலங்
கணேசன் கோவில்
துலங்குமடா கற்பத்தில் சூட்சமெல்லாம்
வேறென்று மயங்காதே
ஐயாஐயா
விஞ்சையென்ற மூலமந்திர மிதுதான் பாரே
- -297
பூமியுப்பு மகிமை
பாருப்பு மகிமைதனை
சொல்லக் கேளு
பாரீன்ற பூமியுடநாதமப்பா
ஆருப்பு மகிமைதனைக்
காணப் போறார்
அருளான விந்துநீர் தன்னிற் போட்டு
சேருப்பு ரென்றுமொன்றாய்ச்
சேர்த்துக் கொண்டு
சிக்கெனவே ரவிமுகத்தில் வைத்துப் பாரு
காருப்பு இப்படியே
பத்துமுறை செய்தால்
கருவான ரெண்டுமொன்றாய்க் கட்டும் பாரே
– 298
பாரப்பா கட்டியதோ ருப்பு ரெண்டு
பகராத கல்லுப்பு ரெண்டுங் கூட்டி
சேரப்பா ரவிபீசம்
ரெண்டிலொன்று
சேர்த்து மிகக் கலவமதில் சேர்த்துக் கொண்டு
வாரப்பா மூன்றிலொன்று
துருசு சேர்த்து
வாரிதியா மறுவகையின் தன்னாலாட்டி
வீரப்பா அடக்கவுமே
நன்றாயாட்டி
வில்லைபோல பிடித்தனைக் காயப்போடே - - 299
காரீயக் கட்டு
புதுமையுடன் புடம்போடச் சுன்னமாகும்
தேட்டான சுன்னமது
பதனம் பண்ணி
சிவப்பான கெவுரிதனக் கங்கி பூ ட்டி
மாட்டடா மண்சீலை
யேழுஞ் செய்து
மண்மறைவில் புடம்போட்டு வாங்கிக் கொண்டு
காட்டடா காரீயத்துள்ளே
மைந்தா
கருவான காரீயங் கட்டுந் தானே
- - 300
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி