தகைமாண்ட தக்கார் செறின்,
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற பெரும் பொருளும் இருந்தும் என்னபயன்.
- திருக்குறளும். மு.வரதராசனார் உரையும்.
கக்குவான் இளகம்
1. கண்டங்கத்திரிச் சாறு - 44 கிராம்
2. கருந்துளசிச் சாறு - 88 கிராம்.
3. ஆடாதோடைச் சாறு - 132 கிராம்.
4. தேன் - 264 கிராம்
5. சுக்கு - 2 கிராம்
6. மிளகு - 2 கிராம்
7. திப்பிலி - 2 கிராம்
8. கடுக்காய் - 2 கிராம்
9. நெல்லிக்காய் - 2 கிராம்.
10. தான்றிக்காய் - 2 கிராம்
11. இலவங்கம் - 2 கிராம்
12. இலவங்கப்பட்டை - 2 கிராம்
13. ஏலம் - 2 கிராம்
14. சிற்றரத்தை - 2 கிராம்
15. பேரரத்தை - 2 கிராம்
16. அதிமதுரம் - 2 கிராம்
17. சாதிக்காய் - 2 கிராம்
18. தாளிசபத்திரி - 2 கிராம்
19. சாதிபத்திரி - 2 கிராம்
செய்முறை
எண்1 முதல் 4 வரை உள்ள பொருட்களை ஒரு மட்பாண்டத்திலிட்டு அதனுள் மற்ற சரக்குகளை சுத்தி செய்து பொடித்து, அளவுப்படி அளந்து போட்டு, அடுப்பேற்றி சிறுதீயில் மெதுவாகக் கிண்டி, பாகுபதத்தில் இறக்கி பதனம் பண்ணி வைக்கவும்.
அளவு
100 - 300 மி.கிராம்
தினம் ஆறுவேளை, விரலில் தேய்த்து நக்கவும்.
தீரும் நோய்
கக்குவான் - குக்கல் நோய், இது குழந்தைகளுக்குப் பால் அல்லது சலதோசத்தினால் வாயு அதிகரித்து மார்பில் தங்கி இருக்கும் சளியானது இளகும்போது, இரு விலாப் பக்கங்களும் இழுக்க இருமலுண்டாகி, அத்துடன் தும்மல் , மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் முதலிய குணங்களைக் காட்டுவதுடன் குடித்தப் பால் அல்லது உண்ட உணவை கக்குதலும், சிற்சில சமயம் கேவுதலுடன் மூச்சுத் திணறி, விழிபிதுங்கி , இரத்தம் கக்கித் துன்புறுத்தும் நோய். இது 90 நாட்கள் வரை கூட நீடித்திருக்கும். இது ஒரு தொத்துநோய்.
சித்தம்.
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி