மெய்ப்பொருள் காணப தறிவு.
- திருக்குறள்.
வணக்கம் நண்பர்களே!
வாழ்க வளங்களுடன்! Prescribed 🌟🌟🌟🌟/5
எல்லையற்ற ஆற்றலுடனும்,வலிமையுடனும் , மன மகிழ்வுடனும், ஆராயும் அறிவினுடனும் வாழ நாம் இப் பூமிப்பந்தில் படைக்கப்பட்டோம். ஆனால் புறச் சூழலாலும் அகச் சூழலாலும் நம் பண்பு நலன்களும், உடல் நலனும் குறைகின்றன. உடலில் ஏற்படும் பிணிகளில் நம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் குறைத்து உடல் வலிமையைக் குறைப்பதில் காமாலை, இரத்த சோகை, பாண்டு போன்ற பிணிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்நோய்களைக் களைந்து உடலில் வலிமையும், ஊக்கத்தையும் தரவல்ல பல சிறப்பு மருந்துகளில் ஒன்றான அமிர்த சஞ்சீவி இளகம் (லேகியம்) என்னும் மருந்தின் செய்முறையையும், மற்ற பண்புகளையும் நூலோர் சொல்லியுள்ளதைப் பார்ப்போம்.
செயல் 1
2. கேத்தை விழுது (தாழைமர விழுது) - 175 கிராம்
3. குருந்தொட்டி (சித்தாமுட்டி) - 175 கிராம்
4, சிறுசெருப்படி (சிறுபுள்ளடி, - 175 கிராம்
சிறுசெருப்படை )
5. பொன்னாங்காணி (கொடுப்பை) - 175 கிராம்
மேற்சொன்ன மூலிகைகளை ஒன்றிரண்டாய் இடித்து ஒரு பெரிய பானையில் இட்டு, 30 லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி 4 லிட்டராக குறுகும் வரை எரித்து வடிகட்டி கியாழம் செய்து கொள்ளவும்.
செயல் 2
வில்வப் பூ கைப்பிடி அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து அதனை 2 லிட்டர் ( 1 லிட்டர் பாலும், 1 லிட்டர் நீரும் கலந்த) பாலில் கரைத்து அதனை ஒரு கலத்தில் ஊற்றி , அக்கலத்தின் வாய்க்கு சுத்தமான துணியால் வேடுகட்டி. அதன்மேல் 200 கிராம் பறங்கிப்பட்டையை வைத்து கலத்தை சாதாரணமாக மூடி, சிறுதீயாய் பால் பொங்காதவாறு காய்ச்சி, சுத்தி செய்து எடுத்து துடைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதைத் தூள் செய்து அதைத் துணியிலுட்டி (வஸ்திரகாயம் ) செய்து, அதிலிருந்து 70 கிராம் எடுத்து தனித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செயல் 3
கீழ்க் காணும் மருந்து சரக்குகளை இளஞ்சூட்டில் வறுத்து தனித் தனியே பொடித்து, துணியிலூட்டி வடிகட்டி . எடைபோட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
1, இலஞ்சி ஏலம்) - 20 கிராம்
2. சிவச்சி (சாதிக்காய்) - 20 கிராம்
3,பகன்றை (சிவதை) - 20 கிராம்
4. சுக்கு - 20 கிராம்
5.மிளகு -20 கிராம்
6. திப்பிலி -20 கிராம்
7, தாளிசபத்திரி - 20 கிராம்
8. கடுக்காய் -20 கிராம்
9. தான்றிக்காய் -20 கிராம்
10, நெல்லிமுள்ளி -20 கிராம்
13. கிராம்பு -20 கிராம்
14.ஒமம் -20 கிராம்
18. நற்சீரகம் -20 கிராம்
19. அக்கிரகாரம் -20 கிராம்
20. நறுக்குமூலம் -20 கிராம்
செயல் 4
தோல் எடுத்த தேற்றான் விதையை பாலில் ஊறவைத்து, பின் பால் விட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், அதனுடன்
150 கிராம் சீந்திற் சருக்கரையையும் சேர்த்து மெழுகு பதமாய் தளர அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
செயல் 5
செயல் 1ல் கூறியபடி செய்யப்பட்ட கியாழமும், பசும்பால் இரண்டரை லிட்டர், இளநீர் இரண்டரை லிட்டர் சேர்த்து அதனுடன் தோல் எடுத்த இஞ்சியை மெழுகுபோல அரைத்து அதில் 350 கிராமை மேல் சொன்ன நீர்மங்களுடன் சேர்த்து வேகவைத்து, இஞ்சி வெந்தபின் அதனுடன் 400 கிராம் கற்கண்டு சேர்த்து சிறுதீயில் பாகுபதம் செய்துகொள்ள வேண்டும்.
பின் செயல் 3 மற்றும் 2ல் கூறியபடி பொடித்த மருந்து சரக்குகளை மேற்கண்ட பாகில் சேர்த்து அதனுடன் அன்னபேதிச் செந்தூரம் 10 கிராம். பெருங்காயம் 20 கிராம், உலரவைக்கப் பட்ட திராட்சை 20 கிராம் சேர்த்து மேலும் குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக் கற்பூரம் 30கிராம் , பொடித்துச் சேர்த்து பின்பு பேரீச்சம்பழம், கூகைநீறு சிதைத்துப் போட்டுக் கிண்டி அதனுடன் செயல் 4ல் கூறிய தேற்றான் விழுதையும் கலந்து கிண்டி மேலும் தேவையான அளவு நெய்விட்டுக் கிண்டி மெழுகு பதத்தில் இறக்கி, ஆறவிட்டு மேலும் ஒரு படி தேன் விட்டு கலந்து பத்திரப் படுத்தவும்.
பெருநெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வர, என்புச் சுரம், சயம், பாண்டு. இரத்த சோகை. காமாலை முதலான அனைத்து உடல் நலிவு நோய்களும் குணமாகும்.
நோய் இல்லாதவர்களும் சுண்டைக்காயளவு பத்து நாளைக்கு மூன்று நாட்கள் இடைவெளி விட்டு சாப்பிட்டு வர நோயெதிர்ப்பு சக்தி வளரும், உள்ளம் உற்சாகமாயிருக்கும்.
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி