உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
- திருக்குறள்.
இம்மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையே உள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.
வெண்கல மணி |
வெண்கலம் என்பது செயற்கை உலோகம் ஆகும். செம்புடன் வெள்ளீயமும் மேலும் சில தனிமங்களும் சேர்த்து உருக்கி கலந்து செய்யப்படுகிறது.
1.வெண்கலத்தைக் மூசையிலிட்டு காய்ச்சி, உருக்கி கோமியம், மோர்,எருக்கம்பால் , நல்லெண்ணெய், காடி, எலுமிச்சைச் சாறு, கொள்ளுச்சாறு இவற்றில் சாய்க்க வெண்கலத்தின் நிறம் மாறுபட்டு சுத்தியாகும். இவை ரசவாத, வைத்தியம் இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.
2, வெண்கலத்தை உருக்கி புளியயிலைச் சாறில் சாய்த்துப் பின் கொள்ளு குடி நீரில் மூன்று முறை உருக்கிச் சாய்க்க வெண்கலம் சுத்தியாகும்.
சித்தம்
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி