பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


திப்பிலி இரசாயணம்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

            காமம் அனுபவத்தற்குறிய இருவருள்ளும், " யாம் மிக்க காதலுடையோம் " எனக் கருதி " யாரினும் காதலம்" என்று சொன்னேன், அப்படி நினைக்காமல் " என்னால் காதலிக்கப்பட்ட பலருள்ளும் நின்கண் அதிகக் காதலுடையேம்" என்று கூறினேன் என்பதாகக் கருதி அவள் ஊடினாள்.

                                    - திருக்குறளும், திருக்குறளார் வீ.முனுசாமி ஐயா உரையும்.

                                    திப்பிலி இரசாயணம்

                                                    ( அகஸ்தியர் பரிபூரணம் - 400 )

பிப்பிலி
திப்பிலி


தேவையான பொருட்கள்

1. திப்பிலி                                                    10 பங்கு
2. மிளகு                                                        5 பங்கு
3. சுக்கு                                                         5 பங்கு
4. சீரகம்                                                       1 பங்கு
5.  கருஞ்சீரகம்                                          1 பங்கு
6. ஓமம்                                                         1 பங்கு
7. குரோசாணி ஓமம்                              1 பங்கு
8. சிற்றரத்தை                                           1 பங்கு
9. பேரரத்தை                                             1 பங்கு
10. கடுக்காய்த்தோல்                            1 பங்கு
11. நெல்லிக்காய்த் தோல்                    1 பங்கு
12. தான்றிக்காய்த்தோல்                     1 பங்கு
13. இலவங்கம்                                           1 பங்கு
14. இலவங்கப்பத்திரி                            1 பங்கு
15. தாளிச பத்திரி                                    1 பங்கு
16. கொடிவேலி வேர்ப்பட்டை            1 பங்கு
17. ஏலம்                                                        1 பங்கு
18. இலவங்கப்பட்டை                            1 பங்கு
19. சருக்கரை                                             35 கிராம்
20. தேன்                                                        தேவையான அளவு     


செய்முறை


            சுத்தி செய்யப்பட்ட சரக்குகளில் எண் 1 முதல் 18 வரை உள்ள சரக்குகளை, இளவறுப்பாக வறுத்து , சலித்து  சீனி சேர்த்துக் கலந்து, தேன் விட்டுப்பிசைந்து , பீங்கானில் பதப்படுத்தவும்.

அளவு 


            அரை முதல் ஒரு கிராம்

தீரும் நோய்கள்


I. நாட்பட்ட இருமல்

II. மந்தார காசம்  - மந்தார ( மேகம் சூழ்ந்த மழைவரும் ) காலத்தில் காணும் ஒருவகைக் காசநோய் ;  The type of Asthma which is accompained by such systemps as thirst, perspiration, vomittig and a rattlin sound in the throat. ; இவை கண்டத்திலிருந்து சளி அல்லது கோழையை வெளிப்படுத்தும் வரை பலமுறை இருமுதலால் உண்டாகும் இளைப்போடு கூடிய மேல்மூச்சு (தமரக சுவாசம்). 

 காசநோய் என்பது இரைப்பும், இருமலோடும் கூடிய  கடின மூச்சு. இது இருவகைப்படும் 1. ஈளை அல்லது கோழை காசம்இ 2, வரட்சி காசம். காசம் கன்மநோய் ( முற்பிறவிக் குற்ற) ஆயினும் வைத்திய நூற்படி உயிர்வளி (பிராணவாயு) கோளாறடைந்து, வாதபித்த கபத்தில் கலப்பதால், கோபம் அல்லது அச்சம், மலச்சிக்கல், மிகு ஊட்டம்,வாயு, குன்மம், சூலைப்பிடிப்பு, நெஞ்சு தளர்ச்சி, முதலிய குற்றங்கள் உண்டாவதாய் தெரிகிறது. இதுமட்டுமல்லாமலும் தொண்டையிலுண்டாகும் கரகரப்பினாலும், நரம்பிற்கு காணும் அதிர்ச்சியாலும் இந்நோய் உண்டாகலாம்.

            காசத்தின் வகைககள்

        1. சுவாச காசம்
        2. மந்தார காசம்
        3. இரத்த காசம்
        4. நீல காசம்  - Asthma vommiting blue bile
        5. சிலேட்டும காசம்
        6. பித்த காசம்
        7. வாத காசம்
        8. பால காசம்
        9. விரண காசம்
        10. கர்ப்ப காசம்
        11. கோழை அல்லது ஈளை காசம்
        12. தொந்த காசம்
        13. பக்க காசம் - Asthma affecting Intercoastal muscles
        14. பக்க மந்தார காசம்
        15. சுடர் காசம் 
        16. பீநச காசம்  - Asthma from spasmodic catarrah  - or coryza - Catarrahal Asthma.
        17.  நாத காசம்  - Sexual Asthma
        18. வலி காசம்  - spasmodic Asthma
        19. அடைப்புக் காசம் - stone Asthma
        20. குன்மகாசம்  - Asthma due to Dys.Peptic disorder.  
        காச நோயின் வகைகள்  ஆகும்.


IV. இளைப்பு

V,  கக்கல்

VI. ஐயம் 96  - கபம் 96

VII. இருமல்

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி