பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


கபட முனிவர்கள் - அகத்தியர்

     



                அபக்குவர்களிவனரெனல்

 

வாய் திறந்து பேசாத மடையர் மெத்த

      வானறிந்து சேராத குருடர் மெத்த

தாயறிந்து இணங்காத கழுதை மாண்பர்

     தலைவனை யுமறியாத சண்டி மாண்பர்

காயறிந்து கனியறிந்து கொள்ளா மாண்பர்

       காசினியில் மெத்தவுண்டு கருத்தில்லார்கள்

தீயறிந்து அனல மூட்டத் தெரியா மாண்பர்

      சிவவேடந்தனை யறியார் திருடர்தானே  114

 

 

தானென்ற தத்துவத்தை யறியா மூடர்

      தன்மை யென்ற மனமொடுங்கும் நிலையுங்காணார்

கோனென்ற குருபத்தின்  குறியுங் காணார்

        குருடாவர் காயாசங் குறடுமிட்டு

நானென்ற ஆணவத்தை மெத்தப் பேசி

        நலமில்லா அஞ்செழுத்தை யுபதேசித்து

வீணென்ற வீண் மதங்கள் மெத்தப் பேசும்

       வெள்ளாட்டிப் பயல்களுடன் சேராதையா  - - 115

 

சேராத கருவறிந்து கள்ள மாண்பர்

     செத்த பிணம் போல் திரிவார் சிவனே யென்று

கூறாத பொருளை யெல்லாங்  கூகூவென்பார் 

      சுற்றிந்து நேராத குருடர் மட்டை

ஆறாது தத்துவத்தின் செயலைக் காணார்

      அகண்ட பரிபூரணத்தினறிவைக் கண்டு

தேறாத சித்தர்கள் கோடியுண்டு

         சிவசிவா தேறின பேர் கோடிக்கொன்றே - - 116

          - அமுதக் கலை ஞானம் 
                அகத்தியர். 

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி