அபக்குவர்களிவனரெனல்
வாய் திறந்து பேசாத மடையர் மெத்த
வானறிந்து சேராத குருடர் மெத்த
தாயறிந்து இணங்காத கழுதை மாண்பர்
தலைவனை யுமறியாத சண்டி மாண்பர்
காயறிந்து கனியறிந்து கொள்ளா மாண்பர்
காசினியில் மெத்தவுண்டு கருத்தில்லார்கள்
தீயறிந்து அனல மூட்டத் தெரியா மாண்பர்
சிவவேடந்தனை யறியார் திருடர்தானே 114
தானென்ற தத்துவத்தை யறியா மூடர்
தன்மை யென்ற மனமொடுங்கும் நிலையுங்காணார்
கோனென்ற குருபத்தின் குறியுங் காணார்
குருடாவர் காயாசங் குறடுமிட்டு
நானென்ற ஆணவத்தை மெத்தப் பேசி
நலமில்லா அஞ்செழுத்தை யுபதேசித்து
வீணென்ற வீண் மதங்கள் மெத்தப் பேசும்
வெள்ளாட்டிப் பயல்களுடன் சேராதையா - - 115
சேராத கருவறிந்து கள்ள மாண்பர்
செத்த பிணம் போல் திரிவார் சிவனே யென்று
கூறாத பொருளை யெல்லாங் கூகூவென்பார்
சுற்றிந்து நேராத குருடர் மட்டை
ஆறாது தத்துவத்தின் செயலைக் காணார்
அகண்ட பரிபூரணத்தினறிவைக் கண்டு
தேறாத சித்தர்கள் கோடியுண்டு
சிவசிவா தேறின பேர் கோடிக்கொன்றே - - 116
No comments:
Post a Comment
நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி